May 20, 2012

கோடைக்கு குளிர்ச்சி

கோடைக்கு குளிர்ச்சி



வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து, சர்க்கரை போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுச்சூட்டைத் தணிக்கும்.


வெட்டிவேரை இரவில் கொதிக்க வைத்து காலையில் வடிகட்டி சூடான சர்க்கரைப் பாகில் கலந்து பன்னீர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

சித்தரத்தை வேரை இரவு தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் வேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் தொண்டைக்கட்டுக்கு நல்லது.


சோற்றுக்
கற்றாழையை தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கிற சதையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சாப்பிட்டால் உடலுக்கு ஏகக் குளிர்ச்சி.

  
கொத்துமல்லியுடன் வெல்லம் சேர்த்து அரைத்துக் குடிக்கலாம்.

அகலமான பாத்திரத்தில் நீரைக் கொதிக்கவிட்டு அதில் நன்னாரி வேர் முழுவதும் மூழ்கும்படி 5 நிமிடம் அப்படியே அடுப்பை எரியவிடவும்.

நீரை வடிகட்டி எடுத்து, தேவையான அளவு சர்க்கரைப் பாகை கம்பிப்பதம் வந்தவுடன் கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். தேவையானபோது நீருடன் 1:4 வீதத்தில் கலந்து கொள்ளவும்.


இஞ்சியை சின்னச்சின்னதாக வெட்டி மிக்ஸியில் அடித்து ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்


எலுமிச்சை சாறு 2 டம்ளர் எடுத்துக்கொண்டு, சர்க்கரை 3 டம்ளர் எடுத்து பாகு காய்ச்சி, ஜூஸ் விட்டுக் கிளறி 5 நிமிடம் கொதித்தபின் பாட்டிலில் பதப்படுத்தலாம். தேவைப்படும் போது 2 தேக்கரண்டியுடன் 1 டம்ளர் நீர் கலந்து பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...