Oct 11, 2012

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்


பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் 


கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் உலகோர்க்

கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு

வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் 

அணுகாது குடியோடிப்போம் நன்றான நாகதாளிக் கிழங்கு 

தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா அன்றான 

ஆகாசகருடன் மூலி அம்மனையிலிருக்க விடமற்றுப்போம் 

                                                                                 சித்தர் பாடல்


பாடல் விளக்கம்:

ஆடு தீண்டாப்பாளை ,நாகதாளிக் கிழங்கு,ஆகாச கருடன் 

கிழங்கு,சிறியா நங்கை,இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து

வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை 

நெருங்க விடாது.


பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் :

சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை

அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது 

கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு 

சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

எளிதில் பிடித்து அடித்து விடலாம் .  

   

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...