Apr 29, 2013

கின்னஸ் சாதனைக்கு முயன்றவர் அந்தரத்தில் உயிரை விட்டார்


கின்னஸ் சாதனைக்கு முயன்றவர் அந்தரத்தில் உயிரை விட்டார்!
கின்னஸ் சாதனை படைத்த, ஒருவர், மலையிலிருந்து, இன்னொரு மலைக்கு, கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது, திடீரென மரணம் அடைந்தார். இதை பார்த்து, செய்வதறியாது நின்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி மிலான் பாலியைச் சேர்ந்தவர் சைலேந்திரநாத், 45. போலீஸ் டிரைவராக பணிபுரியும் இவர்,சாகசம் செய்வதில் வல்லவர். டார்ஜிலிங்கில் ரயிலை, தனிநபராக தலைமுடியால் இழுத்து உலக சாதனை புத்தகமான, "கின்னஸ்´சில் இடம் பிடித்தவர். தன் சாகச பயணத்தின் அடுத்த கட்டமாக, டார்ஜிலிங் மாவட்டத்தில், டீஸ்ரா ஆற்றில், இரு மலைகளை கம்பியில் தலைமுடியில் தொங்கியபடி கடக்கும் சாகச பயணத்தில், நேற்று பிற்பகல் ஈடுபட்டார். 

ஒரு மலையிலிருந்து, மற்றொரு மலைக்கு கம்பியில் தொங்கியபடி அவர் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். அவர், சாகசம் செய்வதாக நினைத்த, பார்வையாளர்கள் கைதட்டி பாராட்டினர்.

ஆனால், அந்தரத்திலேயே அவர் உயர் பிரிந்தது. பின்னர், தான் அங்கிருந்தவர்களுக்கு உண்மை தெரிந்தது.மீட்புக்குழுவினர், வந்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம்,சிலிகுரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...