Apr 24, 2013


டாக்டர் டாக்டர் அருண் சேஷாசலம் (MD . DNB . MNAMS . DM டைரக்டர் , தஞ்சாவூர் கான்சர் சென்டர்,புற்றுநோய் மருத்துவநிபுணர் , DR GCN புற்றுநோய் சிகிச்சை மையம் , டீச்சிங் ஃபாகல்ட்டி (Teaching Faculty ) சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் ,சென்னை) 5 வருடங்கள் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்திருக்கிறார் .2010 ஆகஸ்ட்டில் இருந்து திருச்சி GVN புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தஞ்சாவூர் துளுக்கம்பட்டியின் தஞ்சாவூர் கான்சர் சென்டரை திறம்பட நிர்வகித்து மிகச்சிறப்பாக புற்றுநோய் சிகிச்சை அளித்து வருகிறார் .
புற்றுநோய் பற்றின கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தொடர் ஒன்றை மூன்றாம்கோணத்துக்கு அளிக்க ஒப்புதல் அளித்திருக்கிறார் . வாசகர்கள் புற்றுநோய் குறித்த தம் சந்தேகங்களை moonramkonam@gmail.com முக்கு
அனுப்பலாம் .
புற்றுநோய் வகைகளில் ஒன்றான அசாதாரண நுண்ணறை நுரையீரல் புற்று நோய் பற்றின டாக்டர் அருண் சேஷாசலத்தின் கட்டுரை இதோ …

அசாதாரண நுண்ணறை நுரையீரல் புற்று நோய்:

அசாதாரண நுண்ணறை நுரையீரல் புற்று நோய் என்பது ஒரு வகையான நுரையீரல் புற்று நோய். நுரையீரலில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரண நிலைக்கு மாறி கட்டுப்பாட்டை மீறி வளரும் போது நுரையீரல் புற்றுநோய் உருவாகிறது. நுரையீரல் புற்று நோயில் பல வகைகள் உள்ளன. சில வகைகள் மற்றவைகளை விட வேகமாக வளருகின்றன.
அசாதாரண நுண்ணறை நுரையீரல் புற்று நோய் என்பது நுரையீரல் புற்று நோய்களில் மிகவும் பொதுவான வகை. இது பொதுவாக, சிறிய நுண்ணறை நுரையீரல் புற்று நோய் போல மிக வேகமாக வளரக்கூடியதல்ல.

நுரையீரல் புற்று நோய் நிலைப்பாடறிதல் :

புற்று நோய் நிலைப்பாடறிதல் என்பது புற்று நோய் எந்தளவிற்கு உங்களது உடலில் பரவியுள்ளது என்பதனை மருத்துவர்கள் கண்டறியும் வழிகளில் ஒன்று. ஒருவருக்கு எந்தளவிற்கு அசாதாரண நுண்ணறை நுரையீரல் புற்று நோய் பரவியுள்ளது என்பதனை மருத்துவர்கள் நிலை – 1 (I), 2 (II), 3 (III), அல்லது 4 (IV) என்றழைக்கின்றார்கள்.
சில சமயங்களில் நிலை கண்டறிவது சிக்கலாக அமையும். உதாரணமாக, உங்களுடைய மருத்துவர், நீங்கள் முதல் அல்லது இரண்டாம் நிலையில் இருப்பதாக கருதுவார்கள். ஆனால், உங்களுடைய அறுவை சிகிச்சைக்குப்பிறகு உங்களுடைய நீக்கப்பட்ட திசுக்களை ஆராய்கையில் நீங்கள் மூன்றாம் நிலையில் இருப்பதை அறிய வருவார்கள்.பல்வேறு நிலைப்பாடுகளிலுள்ள முக்கியமான வித்தியாசங்களில் சில யாதெனில்
முதல் நிலையில் -
நுரையீரல் புற்று நோய் இடது அல்லது வலது நுரையீரலில் இருக்கும். நுரையீரலுக்கு வெளியேயோ அல்லது நிணநீர் கணுவிலோ பரவியிருக்காது. (நிணநீர் கணு என்பது பட்டாணி உருவில் தொற்றுக்கிருமிகளை எதிர்த்து போராடும் நமது உடலில் உள்ள உறுப்பாகும்) முதல் நிலை புற்று நோய் சாதரணமாக சிறிய அளவேயானது.
இரண்டாம் நிலையில் -
புற்று நோய் நுரையீரலின் இதர பகுதிகளான நுரையீரலில் இருக்கும் நிணநீர் கணு அல்லது நுரையீரலை சுற்றியிருக்கும் சவ்வு போன்ற பகுதிகளுக்கு பரவியிருக்கும். இரண்டாம் நிலை புற்று நோய்கள் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கும்.
மூன்றாம் நிலையில் -
புற்று நோய் பெரிய அளவில் இருக்கலாம். அல்லது அது நமது நெஞ்சுப்பகுதியின் நடுவில் வலது மற்றும் இடது நுரையீரல்களுக்கு மத்தியில் அமைந்துள்ள நிணநீர் கணுக்கலுக்கு பரவியிருக்கலாம்.
நான்காம் நிலையில் -
புற்று நோயானது மற்றொரு நுரையீரலுக்கோ அல்லது உடலின் இதர பாகங்களாகிய மூளை அல்லது எலும்பு போன்றவற்றிற்கு பரவியிருக்கலாம். மேலும், அது நுரையீரலின் வெளிப்புறம் திரவத்தை சேகரித்திருந்தால் அது நான்காம் நிலை எனப்படுகின்றது.

நுரையீரல் புற்று நோயின் நிலைக்கேற்ப சிகிச்சை தன்மை மாறுபடுகின்றது.

முதல் அல்லது இரண்டாம் நிலையிலுள்ள அசாதாரண நுண்ணறை நுரையீரல் புற்று நோய் உள்ள நபர்கள் பொதுவாக அறுவை சிகிச்சை மூலம் புற்று நோய் சிகிச்சை அளிக்கப்படுகின்றார்கள். புற்று நோயை நீக்க, நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர் நீக்கலாம். அல்லது அவரின் ஒரு பக்க முழு நுரையீரலையும் நீக்கலாம். (ஒரு நுரையீரல் நீக்கப்பட்டாலும் மற்றொரு நுரையீரல் மூலம் சுவாசிக்கலாம்.)
முதல் நிலை புற்று நோய் உள்ள நபர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப்பிறகு எந்த விதமான சிகிச்சையும் தேவைப்படாது. ஆனால் இரண்டாம் நிலையிலுள்ள புற்று நோய் உள்ள நபர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப்பிறகும் மேல் சிகிச்சை தேவைப்படுகின்றது. அதில் அடங்குவதாவது :

கதிர்வீச்சு மருத்துவம் :

கதிர்வீச்சு புற்று நோய் திசுக்களை கொல்கின்றது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பாத நபர்கள் அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்ள உடல் ரீதியாக இயலாதவர்கள் மாற்றாக கதிர்வீச்சு மருத்துவம் செய்து கொள்ளலாம்.
கீமோதெரபி என்றழைக்கப்படும் வேதியியல் மருத்துவம் என்பது மருத்துவர்களால் ஒரு குழு மருந்துகளால் புற்று நோய் திசுக்களை கொல்வது.
மூன்றாம் நிலை அசாதாரண நுண்ணறை நுரையீரல் புற்று நோய் சிகிச்சை – இந்த சிகிச்சையானது மருத்துவர்களால் பல்வேறு வழிமுறைகளில் குணப்படுத்தப்படுகின்றது. புற்று நோய் எந்த இடத்தில் தாக்கியுள்ளது, எந்த அளவிற்கு தாக்கியுள்ளது மற்றும் அந்த நபர் இதற்கு முன் மேற்கொண்ட சிகிச்சை முறைகள் போன்றவற்றைப்பொறுத்து மருத்துவரின் சிகிச்சை முறை மாறுபடுகின்றது.
மூன்றாம் நிலை நுரையீரல் புற்று நோய் உள்ள நபர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அறுவை சிகிச்சை :

பான்கோஸ்ட் எனப்படும் மற்றொரு வகையான நுரையீரல் புற்று நோயினையும் மருத்துவர்கள் இதே முறையில் சிகிச்சை அளிக்கின்றார்கள். பான்கோஸ்ட் புற்று நோய் கட்டி என்பது நுரையீரலின் மேல் பகுதியில் வளரும் கட்டியாகும்.
நான்காம் நிலை நுரையீரல் புற்று நோய் சிகிச்சைகள் – நான்காம் நிலை புற்று நோய்க்கு சிகிச்சைகள் இல்லை. ஆனால் மாறுபட்ட சிகிச்சை முறைகளால் அதனுடைய வீரியத்தைக்  குறைத்து நீண்ட நாள் வாழ வழி செய்ய முடியும். நான்காம் நிலை நுரையீரல் புற்று நோய் உள்ள நபர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கீமோதெரபி என்றழைக்கப்படும் வேதியியல் மருத்துவம்.நிர்ணயிக்கப்பட்ட மருத்துவம் :

இந்த மருத்துவம் சில குறிப்பிட்ட வகையான புற்று நோய்களை மட்டுமே குணப்படுத்தும் உங்கள் மருத்துவர் இந்த மருந்துகளுக்கு கட்டுப்படுகிற வகையில் உள்ள புற்றுநோயை பெற்றிருக்கிறீர்களா என சோதனை செய்யலாம்.
நுரையீரலுக்கு வெளிப்புறம் உள்ள புற்றுநோய் பாதித்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம்.
புற்று நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சை – உதாரணமாக, நுரையீரலைச்சுற்றி திரவம் படர்ந்திருப்பின் உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அந்த திரவத்தினை வெளியேற்றி நீங்கள் சுலபமாக சுவாசிக்க மருத்துவரால் உதவி புரிய முடியும்.

கதிர்வீச்சு மருத்துவம் :

புற்று நோய் தாக்கம் திரும்பவும் வந்துள்ளதா என்பதனை கண்டறிய, சிகிச்சைக்குப்பிறகு மருத்துவர் அடிக்கடி சோதனை செய்வார். உடல் பரிசோதனை மற்றும் உருவரைவு சோதனை ( கதிர்வீச்சு தடப் படம் ), கணிப்பொறி பருவரைவு அலகீடு (CT SCAN) போன்றவை பின்தொடர வேண்டிய சோதனைகளில் சில. உருவரைவு சோதனை மூலம் உடலின் உள் பகுதிகளை படம் பிடித்து கண்டறிய இயலும்.

நுரையீரல் புற்று நோய் திரும்பவும் வந்தால் -

நுரையீரல் புற்று நோய் திரும்பவும் வந்தால் கீமோதெரபி என்றழைக்கப்படும் வேதியியல் மருத்துவம், நிர்ணயிக்கப்பட்ட மருத்துவம் , கதிர்வீச்சு மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை இவற்றை மேற்கொள்ளவேண்டி வரலாம்.
மருத்துவர் கூறும் ஆலோசனை மற்றும் சோதனைகளை முக்கியமாக பின்பற்ற வேண்டும். மேலும், சிகிச்சையின் போது ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது பிரச்சினைகள் குறித்து மருத்துவரிடம் தெரிவிப்பதும் முக்கியம்.
ஆசிரியர்:
DR. S. அருண்சேஷாசலம்.M.D, DNB, MNAMS, DM

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...