Jun 7, 2013

குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – 2013


astrology
குரு பகவான் விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி (28-5-2013) செவ்வாய்க்கிழமை இரவு 9.18 மணியளவில் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கக் கணக்கு. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வைகாசி- 17 (31-5-2013) குருப்பெயர்ச்சி.
கீழே உள்ள பொத்தான்களில் உங்கள் ராசி உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் குருபெயர்ச்சி பலன்களை அறிந்துகொள்ளலாம்.
எதற்கும் கலங்காத மனமும் எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதவர்கள் நீங்கள். வருங்கால முன்னேற்றம் பற்றியே எப்பொழுதும் சிந் தித்துக் கொண்டிருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதியான
குருபகவான், உங்களுடைய லாபஸ்தனாத்திலிருந்து விரய, மோக்ஷ ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். 12ம் இடத்திலிருந்து உங்களுடைய சுக ஸ்தானம், ருண ரோக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். இதே வேளையில் சுக ஸ்தான 4ம் இடத்தில் சனியும் ராகுவும் தொழில் ஸ்தானத்தில் கேதுவும் இ ருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் குருபகவான் உள்ளார்.
கடந்த பெயர்ச்சியில் ஆதாய இடத்திலிருந்து தாராள பணவரவு, அளப்பரிய நன்மைகளை வழங்கினார். குருவின் இப்போதைய பெயர்ச்சி நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியை தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை மேற்கொள்வது அவசியம். வீடு, மனை, சுபகாரியம், நற்செய ல்கள் செய்வதற்கு இருந்த தடை யாவும் நீங்கும். வாரிசுகளின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். பூர்வீகச் சொத்திலிருந்து சுமாரான வருமானம் உண்டு. உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள்.
வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதிக்காக தியானம், தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள், பிணக்குகள் போன்றவை நீங்கி புதிய விதமான உறவு கள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களின் வாக்கு வன்மை கூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. பிள்ளைகளின் வளாப்பில் கவனம் தேவை. தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.
தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள். தூங்கப் போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்கச் செல்லவும். தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும் நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.
வாடிக்கையாளர்களின் விருப்பத் தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்கவைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலருக்கு பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சக பணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானமும் கூடும். சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள்.
மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. தியானம் மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை பழகுவது மன ஒருமைபாட்டிற்கு உதவி செய்யும். பெற்றோர், ஆசிரியர் வார்த்தைகளை மதித்து நடப்பது நன்மை தரும். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும். விவசாயிகள் அதிக மகசூலால் மகிழ்வார்கள்.
பரிகாரம்:
முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வாருங்கள். பௌர்ணமியன்று நிலாவை நோக்கி 10 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘‘ஓம் கற்பூர வீடி காமோத ஸமாகர்ஷ திகந்தரா’’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறுங்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...