Aug 24, 2013

கதிர்காமக் (ஒளி வீசும்)கந்தன்: கதிகாமம்



கதிர்காமக் (ஒளி வீசும்)கந்தன்:
கதிகாமம் தென்-இலங்கையில்; ஊவா மாகாண பிரதேசத்தில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் திசமாறகம உப அரசாங்க அதிபர் பிரிவில் கீழ் மாணிக்க கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு புனித ஸ்தலமாகும். இப் புனித தலத்திற்கு யாத்திரை செய்பவர்கள் கொழும்பில் இருந்து சுமார் 280 கிலோமீற்றர் வரை தென் திசை நோக்கி பிரயாணம் செய்ய வேண்டும். இவை தவிர கிழக்கு மாகாணத்தில் இருந்தும், மலைநாட்டில் இருந்தும் வேறு மார்க்கங்கள் வழியாகவும் செல்லலாம். வட-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் அடியவர்கள் பாத யாத்திரை செய்யும் போது கிழக்கு மாகாணம் ஊடாகவே பயணிக்கின்றனர்.

இவ் ஆலயத்தில் மற்றைய ஆலயங்களில் காணப் பெறுவது போன்று வானுயர்ந்த கோபுரங்களையோ, ஸ்தூபிகளையோ, பிரகாரங்களையோ காணமுடியாது. ஒரே கூரையின் கீழ் மூன்று மண்டபங்களைக் கொண்ட சுமார் 50 அடி நீளமும், 20 அடி அகலமும் சுமார் 15 அடி உயரமும் கொண்ட ஒரே கூரையின் கீழ் உள்ள, ஓட்டினால் வேயப் பெற்ற தெற்கு திசையை நோக்கிய ஆலயமாகும்.

சூரனின் இராசதானியாக விளங்கிய வீர மகேந்திரபுரி இவ் ஆலயம் இருக்கும் இடத்திற்கு தேற்கு திசையில் இருந்தமையால் அதனை நோக்கியே வாயில்

உள்ளதாக ஐதீகம். சூரபத்மனை வதஞ்செய்ய புறப்பட்ட முருகப் பெருமானும் அவரின் சேனைகளும் கதிர்காமத்தில்தான் "ஏமகூடம்" என்னும் பாசறை அமைத்து வீர மகேந்திரபுரி என்னும் இராசதானியை அரசாண்ட சூர பத்மனை வதஞ் செய்தார் என கந்தபுராணம் கூறுகிண்றது.

இங்கு பூசையெய்யும் கப்புறாளை(பூசாரி) வாயைக்கட்டி பூசை செய்கின்றார். பூசையின் போது மணியோசை ஒலிக்கும். அதனை அடுத்து அதற்கென நியமிக்கப் பெற்ற பெண்கள் நடு மண்டபத்தில் நின்று ஆராத்தி எடுக்கின்றனர். மத்திய அறைச் சுவர்களில் சூரசங்கார நிகழ்வுகள் பலவித ரூபங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதன் மேற்பாகம் சித்திரத்திரையினால் மூடப்பட்டுள்ளது. கருவறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. அது திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. திறையிலே ஆறுமுகன்; தெய்வயானை, வள்ளியம்மை சமேதராக மயில் வாகனத்தில் தோன்றும் காட்சி பல வர்ண நிறங்களால் தீட்டப்பெற்றுள்ளன. ஆலய வெளி மண்டபத்துடன் இணைந்து இலை, குளைகளினால் ஒரு பந்தல் அமைக்கப்பெற்றுள்ளது. இதை பசுமைப் பந்தல் என அழைப்பர். கோவில் யானை கொண்டுவரும் இலை, குளை இதன் மேல் போடப்பட்டு பந்தலாக அமைத்துள்ளனர்.

கருவறை பரமரகஸ்யமான, பவித்திரமான, புனிதமான இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாது கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, அருவமும் உருவமுமாகி, அநாதியாய், ஒன்றாய், பலவாய், பிரம்மமாய் நின்ற சோதி, பிளம்பதோர் மேனியாகி, மருவுகதிர்காமப் பெருமாளாக யந்திரத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு மூலஸ்தானத்திலிருந்து பக்தகோடிகளை ரட்சிக்கிறான்.

பிரசித்தி பெற்ற கதிர்காமம் வருடாந்த மகோற்சவத்தின் போது, பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட பேளை வெண் துகிலால் மூடப்பெற்று யானை மீது வைத்து ஊர்வலமாக சுற்றி வருகிறார்கள். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.

சுமார் முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தைச் சுற்றி சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. மதிலில் யாணை முகங்கள் பதிக்கப் பெற்றுள்ளன. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணை கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையாருக்கும் இங்கே சிறிய ஆலயம் அமைக்கப்பெற்றுள்ளது.

வருடாந்த மகோற்சவம் தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாஸ்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட ஆடிப் பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். இவ்வருடம் ஆனி மாதத்தில் இரண்டு பூரணைகள் அமைவதால் இரண்டாவதாக உள்ள பூரணை தினம் தீர்த்தம் நடைபெறுகின்றது. மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்” இதனை நீர் வெட்டு நிகழ்வு என அழைப்பர்.

இவ்வாலய கருவறையின் வாயில் எப்போதும் திரையினால் மூடப்பெற்றிருக்கும். அதனுள்ளே ஒரு பேழையில் முருகன் ஒளியாக ஆவாகணம் செய்யப் பெற்ற யந்திரம் பாதுகாப்பாக வைக்கப் பெற்றுள்ளது. கருவறை பரமரகசியம் பொருந்தியதாக, பவுத்திரமாக மூடிமறைக்கப் பெற்றதாக அமைந்துள்ளது. முருகன் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து பிறந்த தீப்பிழம்பில் இருந்து அவதரித்தமையால் இங்குள்ள யந்திரத்தில் இருந்து வெளிவரும் சோதியிலே முருகன் அருள் பிரகாசிக்கின்றது.

கதிர்காமத்தில் பௌத்த ஆலயமும், இல்லாமிய ஆலயமும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. ஒவ்வொரு சமயத்தவரும் தங்கள் சமயவழிபாட்டு இடமாக கருதுவதால் “கதிர்காமம்” ஒரு புகழ் பெற்ற புனித ஸ்தலமாக விழங்குகின்றது.

கபுறாளை-பூசாரி (குருக்கள்) தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு முதுகில் ஒரு பட்டுத் துண்டைத் தொங்க விட்டுக்கொண்டு பூசை செய்கிறார். தூப தீபங்கள் காட்டுகிறார். பூசை நேரத்தில் சந்நிதியின் இரண்டு புறமும் இருக்கும் மணிவரிசைகளைப் பக்தர்கள் ஒலிக்கச் செய்கிறார்கள். வலது பக்கத்தில் ஒரு சிறிய சிவலிங்கமுள்ள சந்நிதி உள்ளது. அதற்கும் பூசை நடைபெறுகிறது.

கதிர்காம முருகப்பெருமானுக்கு நேர் எதிரில் வள்ளி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு திரையில் தாமரைப்பூவைக் கையில் ஏந்தி ஒயிலான தோற்றத்தில் இருக்கிறாள் வள்ளி. அருகில் ஒரு அம்மன்கோயிலும் ஒரு மசூதியும் உள்ளன. அதற்கு அப்பால் பௌத்த விகாரை அமைந்துள்ளது/

ஏப்ரல் மாதத்தில் புத்தரிசிப் பொங்கல் நிகழ்வு நடைபெறும். மாணிக்கக் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து புதுப்பானைகளில் பொங்கலிடுவார்கள். வள்ளியம்மை தேவாலயத்திலும் இது நடைபெறும். ஆண்களே பொங்கலை பிங்குகின்றார்கள்.

இவ்வாலயத்தில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் செல்லக் கதிர்காமம் அமைந்துள்ளது. இங்குதான் விநாயகர் யானையாக காட்சிகொடுத்து வள்ளியை முருகனுடன் இணைய வைத்ததாக ஐதீகம்.

இவ்வாலயத்தில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் செல்லக் கதிர்காமம் என்னும் ஊர் உள்ளது. இதனை முன்னர் ’வள்ளித்தீவு ’என்று அழைத்தார்கள். இந்த இடத்தில் தான் முற்காலத்தில் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்று கூறுகின்றனர். இங்கு மாணிக்கக் கங்கையாற்றின் கரையில் மாணிக்கவிநாயகர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள காட்டில்தான் முருகனுக்கு உதவியாக விநாயகர் யானைவடிவில் வந்து வள்ளியைத் துரத்தியதாகவும் பின்னர் இங்கு தான் வள்ளி திருமணம் நடந்ததாகவும் ஐதீகம். இங்குள்ள ஆலயத்தில் னஞ்சமுக விநாயகர் வீற்றிருக்கின்றார்.

கதிர்காமத்திற்கு அருகில் சுமார் 3 கி.மீ தூரத்தில் கதிரைமலை உள்ளது. இது ஏழு மலைத் தொடரின் மத்தியில் உள்ள மலையாகும். அங்கு முகன் ஆலயமும் பிற்காலத்டில் அமைக்கப் பெற்ற புத்த விகாரையும் அமைந்துள்ளது. இம் மலைக்குச் செல்வதற்கு படிகள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலேறிச் சென்றால் முருகனுக்கு சந்நிதியைச் தரிசிக்கலாம்.

இவ் ஆலயத்தைச் சூழ பல தர்மஸ்தாபனங்களும், தனியார் ஸ்தாபனங்களும் இங்கு வரும் அடியார்களுக்கு தங்குமிட வசதியும், அன்னதானமும் வழங்குகின்றன. எம்மூர் மக்களால் நடாத்தப் பெற்ற "பொன்னம்பலச் சாமியார் மடம்", "சிவதாஸ் சாமியார் மடம்", "தம்புசாமியார் மடம்" ஆகியவற்றுள் “சிவதாஸ் சாமியார் மடம்” தற்பொழுதும் தம் சேவையைச் செய்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.


அருணகிரிநாதர் கதிர்காம முருகனைத் தம் திருப்புகழில் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று:

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறைவாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையிலாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப் பெருமாளே.

“கலியுக வரதன், கதிர்காமக் கந்தன் திருவடி சரணம்”
பணிப்புலம்.கொம்

கதிகாமமும் மறைந்த/அழிந்த உண்மைகளும்

கதிர்காமத்தில் இன்று நடைபெறுகின்ற பூசை முறை பரம்பரையான முறை என பலரும் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சி துட்டகைமுனுவுக்கு மாறிய பின்னரே இந்துக்களின் பூசை முறைக்கு கதிர்காமத்தில் ஆபத்துவந்தது.

துட்டகைமுனு ஆட்சிக்கு வந்த பின் கதிர்காமத்திலிருந்த அதிகாரிக்கு எழுதிய ஓலையில் பண்டாரச் சாதியினர் வந்து இந்து சமய முறைப்படி ஆலய பூசை செய்யும் வரை உங்களுக்கு தெரிந்தவரை பூசை செய்யுங்கள் என எழுதியிருந்ததாகவும் அதை தான் பார்வையிட்டதாகவும் கதிர்காம நாயகா பிக்குவான தம்ம தின்ன பியரத்ன தேரோ கூறியதாக அறிகின்றோம்.

செஞ்சந்தன கட்டையிலான தங்கத்தட்டால் அங்கி அணிவித்த ஆறுமுகமும் பன்னிருகையும் உள்ள ஆறுமுகசுவாமி சிலை திரைமறைவில் உள்ளது. 1922 ஆம் ஆண்டின் முன் பஸ்நாயக்காவாக இருந்த திரு. ஸ்ரீ உள்விட்ட என்பவரும் கோயிலின் திருப்பணிகள் செய்து கொண்டு 1934 ஆம் ஆண்டுவரை கதிர்காமத்திலிருந்த திரு. புஞ்சி சிங்கோ என்பவரும் கதிர்காம பௌத்த விகாரையின் பிரதம குருவும் சிலை இருந்ததை கூறியிருக்கின்றனர். இவர்களின் கூற்றை 1819 ஆம் ஆண்டு அங்கு சென்ற இலங்கையின் தேசாதிபதி பிரவுண்டிரிக் அவர்களுடன் சென்ற டாக்டர். டேவி என்பவர் எழுதிய வெளியீட்டில் 421 ம் பக்கத்தில் “விக்கிரகம் கோயிலிலிருந்து அகற்றப்பட்டு காட்டில் மறைக்ப்பட்டு வைக்கப்பட்ள்ளது” என்று குறிப்பிட்டனர். இதிலிருந்து விக்கிரக வழிபாடு இருந்ததற்கான ஆதாரமாக அமைகின்றது.

திருவிழாக்காலங்களில் முருகப் பெருமானது விக்கிரத்திலுள்ள குடை கொடி வெண்சாமரை வேல் வில் அம்பு என்னும் ஆறுசின்னங்களும் வெள்ளிப் பேளையில் வைத்து பட்டுத்துணியில் சுற்றி யானையின் மீது ஏற்றி வலம் வருகின்றனர். இத்துடன் முருகப் பெருமானது சோடசோப அலங்கார பூசைக்கான அடுக்குத்தீபம், பஞ்சதீபம், முக்குதிதீபம் என்பன காட்டப்படுகின்றன. அத்துடன் சக்கரைப் பொங்கல் நைவேத்தியமாக நிவேதனம் செய்யப்படுகின்றது. இதிலிருந்து இந்துமத முறைப்படி பூசைகள் நடந்திருப்பதற்கு ஆதாரம் உண்டு.

அத்துடன் மகாவம்சத்தில் கதிர்காமத்தில் கந்தனுக்கு கோயில் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேவநம்பிய தீசன் காலத்தில் கி.பி. 250இல் அசோக சக்கரவத்தியின் புதல்வியான சங்கமித்திரை பிக்குனியால் புத்தகாயவிலிருந்து கெண்டுவரப்பட்ட அரசமரக்கிளை ஒன்றினை நாட்டியதாகவும் 1 ம் நூற்றான்டில் கிரிவிகாரையை தகாநாக என்ற அரசன் கட்டுவித்தான் என்றும் கூறிப்பிப்பட்டுள்ளது.

இது மகாவம்சம் அத்தியாயம் 57இல், குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெடர்பாக மகாவம்சத்தில்XIII யில் பக்கம் 76-77யில் XLV .45 LVK.2 67,68 ,70,74, உடன்LVIII .5 ம் பிரதிகளிலும் காணலாம். இங்கு கதிர்காமக்கந்தனின் வரலாறும் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாலயம் அக்காலதிலே இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இவ்வாலயம் இந்துக்கள் கையில் இருந்திருக்கலாம் என தோன்றுகின்றது. பொளத்தர்களின் கையில் இருந்திருந்தால் மகாவம்சம் அதைக்கூறி இருக்கும் போலும்.

1635ஆம் ஆண்டு கண்டியை ஆட்சி செய்த கண்ணுச்சாமி என்னும் இரண்டாம் இராஜசிங்கன் என்னும் தமிழ் அரசன் கதிர்காமத்தின் நிர்வாகப் பொறுப்பை பௌத்த குருமாரிடமிருந்து இந்துக்களிடம் ஒப்படைக்க கட்டளையிட அதை அவர்கள் விரும்பாமையினால் அதை கைப்பற்றி இந்துக்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது. இதிலிருந்து பார்க்கும் போது காலத்துக்காலம் ஆட்சிப் பொறுப்புக் கேற்ப நிர்வாகப் பொறுப்பும் மாறியுள்ளது என்பது புலனாகின்றது.

1642ஆம் ஆண்டு போத்துக்கேயர் கதிர்காமத்தைக் கைப்பற்ற சென்று ஆலயத்தை அடையாளம் கானாமல் தோல்வியடைந்து வரும் போது இடையில் கண்ட இந்து கோயில்களை இடித்து தள்ளியும் வழிபட்டு வந்தவர்களை கொன்று குவித்து திரும்பியதாக அப் படையின் தளபதியாக இருந்த கஸ்பர் பிக்கூரா டி செர்பே (Gasper Figura de Cerpe) டச் பாசையில் எழுதிய ரிபீரோஸ் சீலாவோ சிலோன்(Ribeiro’s Ceilao Ceylon) என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த டாக்டர் போல் பீரிஸ். சி.சி.எஸ்(Dr.P aule Peris C.C.S.) அவர்கள் அதனை பாகம்-1 பக்கம் 324 இல் குறிப்பிட்டுள்ளார். (1597-ல் ‘போத்துக்கீசர் காலம்’)

1635 ஆம் ஆண்டிலிருந்து 1817 ஆம் ஆண்டுவரை கதிர்காமம் Nஐhதி காமமாக விளங்கியது. 1815ஆம் ஆண்டு கண்டி இராட்சியம் பிரித்தானிய ஏகாதிபத்திய வசப்பட்டு இதனால் “ஊவாகலகம் ஏற்பட்டது” இதன் விழைவாக 1818ஆம் ஆண்டு கலகம் வலுவடைந்து 1819 ஆம் ஆண்டு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 1819 ஆம் ஆண்டு கதிர்காமம் இந்துக்கள் வசமானது. பாதுகாப்புப் பொறுப்பு பிருத்தானிய படை வசம்மிருந்தது. அப்போது தெய்வானை அம்மன் ஆலயப் பொறுப்பு ஸ்ரீ கல்யாண கிரிபாவா விடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர் காட்டியில் மறைத்து வைக்கப்படடிருந்த ஆறுமுகசாமி எடுக்ப்பட்டு கதிகாம கந்தனின் கருவறையில் வைக்கப்பட்தாக தேசாதிபதி பிரவுண்டிரிக் உடன் சென்ற டக்டர் டேவி 1821ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க பத்திரிகையில் எழுதி வெளியிட்டார். 1865ஆம் ஆண்டுவரை கதிர்காம நிர்வாகம் இந்துக்கள் வசமாயிருந்தது என்பதற்கு பதுளை நீதி மன்றத்தில் பதிவான1865ஆம் ஆண்டு 182ஆம் இலக்க வழக்கு உறுதி செய்கின்றது.

1834ஆம் ஆண்டு வெளியான அரச வர்தமான பத்திரிகையில் சைமன் காசிச் செட்டி என்பவர் கதிர்காமத்துக்கு இந்தியாவிலிருந்து வரும் யாத்திரியர்கள் கங்கா ஜலத்தை மூங்கில் குழாய்களில் அடைத்து வந்து சுவாமிக்கு அபிN~கம் செய்து ஆராதனை செய்ததாகவும் முஸ்லிம் பக்கீர்கள் சுவாமியின் முன் தீவர்த்தி கைப்பந்தம் பிடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேல் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஓப்பு நோக்கும் போது இந்து தர்மத்தில் உள்ள அபிஷேகம் அர்ச்சனை ஆராதனைகள் அனைத்தையும் நடாத்தப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. இருந்தும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணமிருக்கும் அவை வெளிப்படையாக தெரிவதும் உண்டு. உள்ளுனர்வால் உணர்வதும் உண்டு. எவை எப்படி இருப்பினும் கதிர்காமம் சித்தர் கோயில். சித்தம் தெளிதால் அவன் ஒளி தெரியும்.

அதற்கு அகஇருள் நீங்க வேண்டும். உள்ளம் இருண்டால் அகக் கதவு மூடிவிடும்;. இதை திருமூலர் திருமந்திரத்தில் “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்” குறிப்பிடுகின்றார். சித்தர்கள் மகரிஜிகள் மரபு புறக்கண்னால் கண்பதற்கு பதில் அகக்கண்னால் காண்பது. அதாவது தியானத்தின் மூலம் எம்முள்ளுள்ள இறைவனை காண்பது. இதனால் சாதி மத இன நிற வேறுபாடுகள் அதிகரிதிருந்ததால் ஆணவம் மேலோங்கி கந்தன் மறைந்தான்.

உண்மை அடியார்களான எழியோர்க்கு அகஒளிலில் தன்ஒளிபரப்பவே கந்தன் மறைந்து உண்மை அடியார்யுள்ளத்தில் குடிகொண்டுள்ளான். என்பதே உண்மை. கதிர்காமத்தில் கந்தன் அடியார்ரோடு அடியாராய் எழியோனாய் நடமாடுபவன். அங்கு தன்னைநோக்கி உருகுபவருக்கு காட்சி கொடுப்பவன். அருநகிரிநாதர் “திருப்புகழில்” கதிர்காமகந்தன் திருவளையாடலை “மருவும்மடியாரிகள் மனதில் விளையாடும் மரகத மயுர பெருமாளே” என குறிப்பிடுகின்றார்.

கதிகாமத்தில் சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு கந்தனின் அமுததுளிகிடைத்தது. இவர் தென் இந்தியாவின் தென் பகுதியான இராமநாதர்புரம் “பெருநாளி” என்னும் இராசதானி சிற்றலசரின் ஒரே மகன் கோவிந்தசாமி என்பவராகும். இவர் ஒருமுறை கதிர்காமக்கந்தனின் அருள்வேண்டி மாணிக்ககங்கையில் நீடாடி மாணிக்கப்பிள்ளையாரிடம் உண்ணநோம்பிருந்தார். அது தவமாகமாறி பல வாரம் கழிந்தது கந்தன் கைவிடவில்லை.

ஒருநாள் பெரிய கப்புறாளை வந்து சுவாமியிடம் “உன் தந்தை உள்ளே வருமாறு அழைக்கின்றார்.” என்று கோயிலினுள் அழைத்துக் சென்றார். சுவாமி உட்புகுந்ததும் சுரங்வழியாக ஏழுமலையை அடைந்து அதிலுள்ள சுனையிலிருந்து கையினால் நீர் எடுத்து மூன்று சொட்டு நீர் நாவிலிட்டார். இதன் பின் உண்ணா நோம்பின் களை “சூரியனில் பட்ட பனிபோல் மறைந்தது” அந்த சந்தாப்பத்தை சுவாமி உணவின்றி பலநாட்கள் இருந்தாலும் உடலில் எவ்வித மாற்றமும் இருக்காது அதன் இரகசியத்தை கேட்கும் போது ஒருமுறை குறிப்பிட்டாராம். நீர் அருந்தியபின் கண்களை மூட்ப் பணித்தாரம் பின் கண் திறக்கையில் சுவாமி கதிர்காம வீதியில் நடமாடுவதை உணர்தாராம். இப்படிப்பட்டவன் கந்தன்.

கதிர்காமம் சித்தர்கள் பூமி ஆகையால் சித்தர்கள் கந்தனை தன்னுள் கண்டவர்கள். அஞ்ஞானத்தாலும் ஊனக்கண்ணுக்கும் தெரியாதவன் கந்தன். ஞானத்துக்கும் அகக்கண்ணுக்கும் புலப்படுவான் அவன். அதனாலோ கந்தன் மறைபொருள்ளானான். என எண்ணத் தோன்றுகின்றது

"ஓம் சரவணபவ"

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...