Sep 11, 2013

புற்று நோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

புற்று நோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்
 
புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒரு நோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூற முடியும்.
இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்று நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. மஞ்சளும் இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்து விடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையெல்லாம் சோம்பேறிகளுக்கானவை.
மஞ்சளையும் இஞ்சியையும் மருந்து பெட்டியில் வைக்க வேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். பச்சைத்தேயிலையில் எபிகலோ கேட்டசின் கலேட் மற்றும் கேட்டசின்ஸ் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில் கூட தவறில்லை.
தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும் போது பயனுள்ள வேதிப்பொருளான கேட்டசின்ஸ் இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையையே அதிகமாக குடிப்பது நலம் பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.புற்று நோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒரு நோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூற முடியும்.
இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்று நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. மஞ்சளும் இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்து விடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையெல்லாம் சோம்பேறிகளுக்கானவை.
மஞ்சளையும் இஞ்சியையும் மருந்து பெட்டியில் வைக்க வேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். பச்சைத்தேயிலையில் எபிகலோ கேட்டசின் கலேட் மற்றும் கேட்டசின்ஸ் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில் கூட தவறில்லை.
தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும் போது பயனுள்ள வேதிப்பொருளான கேட்டசின்ஸ் இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையையே அதிகமாக குடிப்பது நலம் பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...