Aug 9, 2013

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை . . .!

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை . . .! – மருத்துவர் நித்ய பிரியா



சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை …! 
1.பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆரா யுங்கள்.உங்களால் அடிபாகத்தை பார்க்க முடிய வில்லை என்றால் கண்ணாடியை யோ, மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள்.
2.கால்களை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருங்கள். வெதுவெ துப்பான நீரில் தினமும் கால்களை கழுவு ங்கள். விரல் இடுக்குகளில் கரபெரள வராமல் பார்த்துக் கொள்ளு ங்கள்.
3. சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதக்கப் படுவதால் வியர்ப்பது குறைந்து தோல் வறண்டு விடும், வறண்ட தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்பட்டுத் தொற்று ஏற்படலாம், எனவே தோல் வறண்ட நிலை ஏற்பட்டால் அதனை ஈரப்படுத்துங்கள்.
4. இரத்த ஓட்டம் ஒழுங்காக நடைபெற உட்கா ரும்போது கால்களைத் தூக்கி வையுங்கள்.மேலும் கணுக்கால் களையும் விரல்களையும் அசைத்துக்கொண்டே இருக்கவும். இறுக் கமான காலுறைகளை அணிய வேண்டா ம். கால் மேல்
கால்போட்டு அமருவதை தவிர்க்க வும்.
5. வியர்வையை உறிஞ்சும் பருத்தியினாலா ன காலுறைகளையே தேர்ந்தெடுத்து அணி யவும். நைலான் வகைகளை தவிர்க்கவும். ரப்பர் மற்றும் எலாஸ்டிக் வளையங்கள் உள்ளவற்றை தவிர்க்கவும். சரியாக பொரு ந்தாத காலுறைகள் தோலில் உரசிக்காயங் கள் ஏற்படுத்து மாதலால் அதனையும் தவி ர்க்கவும்.
6. கால் நகங்களை வெட்டும் போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் விரல் நுனி வரை உள்ளவாறு பார் த்துநகங்களை வெட்டவும். ஓரங்களில் உள்ள கூர்மையான பகுதயைத் தேய்த்து மழுங்கச் செய்யவும்.உங்கள் விரல் நகங் களைச் சுற்றித் தோல் சிவந்து காணப்பட் டால் உடனே உங்கள் மருத்துவரிடம் காட் டவும்.
7.வெயில் காலங்களில் சூட்டுக் கொப்புளங்கள் ஏற்படாத வகையி ல் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். வீட்டிரும்கூட சாதாரணக் காலணி களுடன் இருக்கபே நல்லது.
சில பேர் காலணிகளை அதிக விலைக் கொடுத்து வாங்குவார்கள். அந்த காலணிகள் அவர்களின் காலுக்கு அணியாக இல்லாமல் விலங்காகவும் மாறி விடுகிறது.காலணிகள் கண்டிப்பாக அழகா க இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எள்ளளவு ம் மாற்றுக் கருத்தி ல்லை என்றாலும் அது நமக்கு வசதியாகவும் இருக்க வேண்டும். சில காலணிக ள் கால்களை இறுக்கி பிடித்தபடி இருக்கும். நடக் கிறபோது காலில் உரசி உரசி சின்ன சின்ன புண்க ளை ஏற்படுத்தும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் செருப்புகளை வாங்கும்போது தன் காலுக்கேற்ற பாதிப்பில்லாத வசதியானதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல செருப்பு எப்படி இருக்க வேண்டும்?
மென்மையான தோலினால் மேற் பகுதியைக் கொண்டிருப்பவை நல்ல காற் றோட்டத்தை தரும். நல்ல காற் றோடடம் வியர்வையைக் குறைத்து தோல் பிரச்சினைகள்  ஏற்படாது தடுக் கும்.
விரல் நுனி மூடும் படி உள்ளவை விரல்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
குதிகால் உயரமற்ற செருப்புகள் கால் களை பாதுகாப்பதுடன், கால்களுக்கு தொந்தரவு செய்யாதவை.
வளையும் தன்மையுள்ள அடிப்பகுதி உள்ள செருப்புகள், அதிர்வை எளிதில் உள் வாங்கிக் கொள்வதால் காலில் பாதிப்புகள் வர வாய்ப்புகள் குறைகிற து. ஆனால் இவை வழுக்கும் தன்மை கொண்டவையாக இருக்கக் கூடாது.
உங்கள் காலணி உங்களுக்குப் பொருந்துகிறதா?
புதிய செருப்புகள் வாங்கும்போது கீழ்க்கண் டவற்றைக் கவனிக்கவு ம்.
செருப்பின் நுனிப்பகுதி உங்கள் நீளமான விரல் களைவிட கால் அங்குலம் நீளமாக இருக்க வேண்டும்.காலணியின் நுனிப்பகுதி நன்கு விரிந்து விரல்களை அழுத்தா வண் ணம் இருக்க காலணிகளையும் அணிந்து நடந்து பார்த்து வாங்கவும்.
முடிந்தவரை மாலைநேரத்திலேயே கால ணிகள் வாங்கவும். மாலைநேரத்தில் கால் ள் சற்று வீங்கிப் பெரிதாக இருப்பதால் காலையில் வாங்கும் காலணிகள் பொரு ந்தாமல் போகும். எனவே மாலையிலேயே காலணிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஒரு காலை விட மற்றொரு கால் பெரிதாக இருந்தால் பெரிய காலு க்கு ஏற்ற காலணிகளையே வாங்கவும்.
கால்களில் உணர்வுக்குறைவு காணப்பட்டா ல் வீட்டிற்குச் சென்றதும் 30 நிமிடம் காலணி களை அணியவும்.பின்னர் அவற்றைக் கழற் றிக்கால்களைப் பரிசோதிக்கவும். கால்கள் சிவந்து காணப் பட்டால் காலணி பொருந்த வில்லை என்று அர்த்தம். அப்படியாயின் காலணியை மாற்றி விடவும்.
- மருத்துவர் நித்ய பிரியா


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...