Jan 27, 2014

வீட்டு பிராணிகளை வேட்டையாடி வந்த இராட்சத முதலை இறந்த நிலையில் மீட்பு



   
 
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி-1 தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப்பகுதியில் ஆடு,மாடு மற்றும் நாய் போன்ற பிராணிகளை வேட்டையாடி வந்த 13 அடி இராட்சத முதலை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
 
பிரதேச மக்கள் காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து, வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலய அதிகாரிகளினால் குறித்த முதலை மீட்கப்பட்டுள்ளது.  
இம் முதலைக்கு 12 வயது என தெரிவித்த  வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், இதனை வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொண்டு சென்று வைத்திய பரிசோதனையின் பின்னரே இம் முதலை இறந்த காரணத்தை கண்டறியமுடியுமென்றும் இம் முதலையின் வாயினுள் பாரிய தூண்டில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
 
குறித்த முதலையை பார்வையிட ஆரையம்பதி,காத்தான்குடி பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...