Apr 2, 2014



நீரின்றி அமையாது ஆரோக்கியம்:-



இயற்கை மருத்துவம் பல அங்கங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் நீர் மருத்துவம். மனித உடல் பஞ்சபூதங்களின்கூட்டாகவும், அண்ட கோளங்களின் பிம்பமாகவும் அமைந்திருக்கிறது. மனித உண்ணும் உணவை ஒதுக்கிவிட்டு நீர், காற்று, சூரிய ஒளி ஆகிய இம்மூன்றை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தால், மனித உடல் அழிந்துவிடாமல் நீண்ட நாள் வாழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு ஆதாரமாக விளங்குவது நீர் மருத்துவம்!

நிலவுலகம் தோன்றி சுமார் 60 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலத்தில் முதன் முதலில் உயிரினம் நீரிலிருந்துதான் தோன்றியது. நீரில் தோன்றிய உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியால்தான் மனிதன் நிலத்துக்கு வந்தடைந்தான். பரிணாம வளர்ச்சியில் மேலும் வளர்ந்து மனிதன் தோன்றினான். மனிதனின் ஆதி உணவு நீர் என்பதால், நீர் மனித உடலைப் பாதுகாக்கும் என்று நம்பலாம். நீர் மருத்துவம் மனித உடலையும் உயிரையும் பாதுகாக்கும் என்பதற்கு இதுவே போதிய ஆதாரமாக இருக்கிறது. நீர்தான் நம்மை வாழவைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் அறிந்து கொண்டிருந்தனர். அதனாலேயே 'நீரின்று அமையாது உலகு’ என்னும் கருத்து உருவாயிற்று. நீரை உணவாகக் கொள்ள நேர்ந்தால் மனித உடம்புக்கு மருந்து என்பதே தேவையிருக்காது (Let water be your diet, you need no medicine). நாம் அருந்தும் உணவு உடலை விட்டு முற்றிலும் அகன்று போகக் கூடியதாக இருக்க வேண்டும். நீர் போன்றிருக்கும் பால்கூட, அருந்தியதும் உடலைவிட்டு முற்றிலும் அகன்று போகாமல், பாலில் கலந்துள்ள சத்துப்பொருட்களை விட்டுவிட்டுச் செல்லும். அருந்தியதும் அற்றுப் கோக் கூடிய பொருள், நீர் உணவு மட்டுமே. அருந்தக்கூடியதும், அருந்திய பின் உடலைவிட்டு முற்றிலும் அற்று நீங்கக்கூடியதுமாகிய தன்மையுடையது நீர் மட்டுமே என்பதால், தொடர்ந்து நீராகிய உவை அருந்திக் கொண்டிருந்தால், இயல்பாக உண்ணக்கூடிய உணவு வகைகளைத் தள்ளிவிடலாம். உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் போன்றவற்றுடன் சேர்ந்த உணவு வகைகளை உண்பதைத் தவிர்த்துவிட்டால், மனித உடம்புக்கு மருந்து என்பதே தேவைப்படாது. நீர் உணவு முறையானது, சைவ சித்தாந்த நெறிமுறையான அட்டாங்கயோகத்தில் பிராணயாமம் என்னும் 'பிராண சக்தியில் வாழ்தல்’ என்னும் முறையைக் குறிக்கிறது.

நீர் உணவும் குடல் சுத்தியும்

மனிதன் வயிற்றிலுள்ள இரைப்பை, ஆண்டுக்கணக்காக ஓய்வில்லாமல் உணவுப் பொருள்களை, அரைத்துக் கொண்டும் செரிமானம் செய்து கொண்டும் இருக்கிறது. என்றாவது ஒரு நாள் இரைப்பைக்கு ஓய்வு கொடுக்கின்றார்களா? உணவுப் பொருளைச் சமைக்கின்ற பாத்திரங்களைக் கழுவிக் காயவைப்பதைப் போல, இரைப்பையைக் கழுவிக் காயவைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களா? தினந்தோறும் உணவுப் பொருள்களை அரைத்துக் கொண்டிருக்கும் இரைப்பையில் எங்காவது மூலை முடுக்கில் தங்கிவிடுகின்ற உணவுத்துண்டுகள் அழுகி நாற்றமெடுத்து, கொடிய நோய்களை உருவாக்குகிறது. நல்ல தரமான, உயர்ந்தவகையான உணவுகளை உட்கொண்டாலும் உணவுப் பொருட்கள் இரைப்பையில் தங்கிவிடும் வாய்ப்புண்டு. அது நாள் ஆக ஆக அழகி நோயைத் தரும் என்பதனால், இரைப்பையைக் கழுவி காயவைத்துக் கொண்டு வந்தால், நோயிலிருந்து விடுபடலாம். குடலைக் கழுவிக் காயவைக்கும் போது, செரிமானத்துக்காகச் சுரக்கின்ற அமிலப்பைகள் புத்துணர்வடைகின்றன. அதன் செயல்திறன் கூட்டப்படுகிறது. குடல் சுத்தமாகச் சுத்தமாக உடம்பிலுள்ள குப்பையும் கொழுப்பும் அகற்றப்படும். ரத்த நாளங்கள் சுத்தமாகும். உடம்பின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் நீரால், உடம்பின் உட்புறத்தையும் சுத்தம் செய்யலாம். உடம்பைச் சுத்தம் செய்யப் பயன்படும் நீரையே உணவாகவும் உட்கொள்ளலாம்.

சுத்திமுறை முதலில் அசைவ உணவாகிய மாமிச உணவை ஒதுக்கிவிட வேண்டும். பால்கூட அசைவ உணவு வகையைச் சேர்ந்ததுதான். ஆகையினால், பால் குடிப்பதையும் நிறுத்திவிட வேண்டும். குடல் சுத்திக்கு, பாக்டீரியா நீக்கப்பட்ட நீரையோ அல்லது கொதித்து ஆறவைத்த நீரையோ பயன்படுத்தலாம். காலையில் படுக்கையில் இருந்து கொண்டும், எழுந்த பின்பும் காபி, டீ போன்ற பானவகைகளைக் குடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

அதிகாலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் உலாவி விட்டு, காலைக் கடன்களை முடித்துவிட்டு, வயிறு நிறையும் அளவுக்குச் சுமார் ஒன்றரை லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

நீர் குடித்தபோது காலை 6 மணி என்று வைத்துக் கொண்டால் சுமார் 8 அல்லது 9 மணியளவில் துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறும். அந்நாற்றம், இதுநாள்வரை எப்போதும் வந்திருக்காது. நீர் குடலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது என்பதை அப்போதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதற்கு அடுத்ததாக மலம் கழியும். மீண்டும் முன்பு குடித்த அளவு நீரை அளவு அருந்த வேண்டும். மீண்டும் மலம் கழியும். அப்போது வயிற்றிலும் குடலிலும் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். இதை நாமே உணரலாம்- குடலுக்குள் மலம் இருக்கிறது என்று உணர்ந்தால், இடது கையால் வயிற்றின் வலப்புறத்தை அமுக்க வேண்டும். அப்போது சிறுநீர்ப் பையிலுள்ள சிறுநீர் முழுவதும் வெளியேறும்.

அடுத்து வலது கையால் வயிற்றின் இடப்புறத்தை அமுக்கினால் அசனவாய் திறந்து குடலில் மிச்சம் மீதியாக இருக்கின்ற மலக்கழிவு முழுவதும் வெளியாகிவிடும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால், இரைப்பையும் குடலும் சுத்தமாகிவிடும். உடம்பிலுள்ள அசுத்தப் பொருள்கள் பெரும்பகுதி வெளியேறிவிடும். குடல் சுத்தமாகச் சுத்தமாக உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.

நீர் உணவு

காலை, நண்பகல், இரவு என்று வேளைக்கு வேளை வகை வகையான உணவுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ட கண்ட பண்டங்களையும் பணியாரங்களையும் தின்று உடலைக் கெடுத்துக் கொண்டு, வாழ்நாளைக் குறைத்துக் கொள்ளாமல், இயற்கை உணவாகிய நீர் உணவை அருந்தி வந்தால் உடம்பில் நோய் அண்டாது, நீண்ட நாள் வாழலாம். காலையில், காலைக் கடன்களை முடித்து பல் துலக்கிய பின்பு காபி, டீ முதல் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது. அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பசி எடுக்கும் போதெல்லாம் தண்ணீரையே குடிக்கவேண்டும். உடம்பிலுள்ள நச்சுத்தன்மைகள் சிறுநீர் மூலம், மலக் குடல் மூலம் வெளியேறிவிடும். தொடக்கக் காலத்தில் எவ்வளவு நேரம் நீர் மட்டுமே அருந்திக் கொண்டு இருக்க முடியுமோ அதுவரை இருக்கவும். அதிகமாகப் பசி எடுக்கும்போது, சாதாரணமான உணவு வகைகளை உட்கொள்ளலாம். சாதாரண உணவு வகைகளை உண்ணும்போது, கொழுப்பு சேர்த்த பொருள்களை நீக்கிவிட வேண்டும். வேண்டிய அளவுக்கு வேகவைத்த காய்கறிகளைக் குறைந்த அளவு உப்பு சேர்த்து உண்ணலாம். சப்பாத்தி, முட்டை கோஸ் சாப்பிடலாம். தொடக்கக்காலத்தில் ஒரு வேளை உணவைக் குறைத்துக் கொண்டு நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பழகப் பழக நீர் உணவுக்கு ஏற்றாற்போல் உடம்பின் தன்மைகள் மாறிவிடும். அதன்பிறகு இரண்டு வேளை உணவிலிருந்து ஒரு வேளை உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, நீர் உணவு முறையை மேற்கொண்டு வந்தால், அவரவர் உடல் எடையைப் பொறுத்து, அதற்கு ஏற்றார்போல் உடல் எடை குறையும்.

பின்பு உடல் எடை குறைவது நின்று விடும். எவ்வாறென்றால், அவரவர் உடல் எடையில் எவ்வளவு நச்சுப்பொருள்கள் உள்ளனவோ அவை வெளியேறும் போது உடல் எடை குறையும். நச்சுப்பொருள் இன்றி தூய்மையான உடலைப் பெறுகின்றபோது எடை குறைவது நின்றுவிடும். எடை குறைவது நின்றுவிட்டால், உடல் தூய்மையாகிவிட்டது என்று பொருள். தொடர்ந்து நீர் அருந்திக் கொண்டு வந்தால், உடல் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த மாற்றமும் ஏற்படாமல் நிலையாக இருக்கும். உடலிலிருந்து நோய்கள் அனைத்து நீங்கிவிடும். உப்புச்சத்து உடலிலிருந்து நீங்கிவிட்டால், கண்பார்வை மேலோங்கிக் கூர்மையாகும், பற்கள் வளமாகும். வியர்வை தோன்றாது. துர்நாற்றம் வீசாது. குளிக்க வேண்டும். பல் துலக்க வேண்டும். மலம் கழிக்க வேண்டும் என்னும் நிலை ஏற்படாது. கழிவுகள் உடம்புக்குள் இல்லையென்றான பின்பு கழிவுகள் வருவது எப்படி? உணவை எத்தனை வேளை உண்கிறோமோ அதற்குத் தகுந்தவாறே நன்மைகள் கிடைக்கும். உணவு உண்பது குறையக்குறைய நன்மைகள் பெருகும். மூன்று வேலை உணவை உண்பவர் நோயாளியாக இருப்பர். இரண்டு வேளை உண்பவர் வாழ்க்கை இன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பர்.

ஒருவேளை உணவை உண்பவர்யோகியாக இருப்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சரி, நீங்கள் சொன்னபடி நீர் உணவுமுறையை உண்டு வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை அமையுமா என்று கேட்கிறீர்களா? ஆம். அதற்கு உதாரணமாக சிலரின் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஜைன மதத்தைச் சார்ந்த ஐகஐமுனி சுவாமிஜிக்கு அப்போது வயது 65. அவர் 1997ஆம் ஆண்டு மே முதல் நாள் முதல் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வரை 365 நாள்கள் நீர் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தார். நீர் உணவையும் இரண்டு, மூன்று வேளை உண்ணாமல், ஒரு வேளை மட்டுமே அருந்தியிருக்கிறார். மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தபோது, அவருக்கு எந்தக் குறைபாடும் இல்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். நீர் உணவு முறையை சுமார் எட்டு ஆண்டுகள் ஆய்வு செய்தவர் கோவையைச் சார்ந்த திரு.எஸ்.வெங்கடேசன் என்பவர். இவர் ஒரு பொறியாளர். 93 கிலோ எடை கொண்டவர். 13.7.94 இல் நீர் இவர் முறையைத் தொடங்கியிருக்கிறார். 4.4.95&ல் இவரின் எடை 62 கிலோவாகக் குறைந்திருக்கிறது. சுமார் 9 மாதங்கள், ஒரு வேளை உணவை மட்டும் உண்டு, மற்ற வேளைகளில் நீர் அருந்திக் கொண்டு, 25.10.94 முதல் 7.11.94 வரை இமயமலையிலுள்ள கங்கை உற்பத்தியாகும் கோமுகம் சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது, 18 கிலோமீட்டர் தூரம், மலையேற்றப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நீர் உணவுமுறைக்கு ஆதாரமாக மேலும் ஒரு தகவல் கிடைக்கிறது. அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நீர் உணவு முறையைப் பற்றி அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சார்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர், ஹுராரத்தன் மேனக் (வயது 64) என்பவர், 441 நாட்கள் உணவு எதுவும் உண்ணாமல் சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை மட்டுமே உண்டு சுறுசுறுப்பாக இருந்ததை ஆய்வுத் திட்டம் பி.ஸி.வி என்று பெயர் சூட்டி ஆய்வு செய்தார்கள். முதற்கட்ட ஆய்வில், 'மனிதன் உயிர் வாழ மிக மிகக் குறைந்த அளவு உணவே போதும்’ என்று தங்கள் ஆய்வு முடிவை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழந்திருந்த சித்தர்களும் முனிவர்களும் மேற்கொண்டு வந்திருந்த 'நீர் உணவு’ முறை நாகரிக வளர்ச்சியின் காரணத்தினாலும் மேலை கீழை நாடுகளின் பழக்க வழக்கங்களின் படையெடுப்பினாலும் கடைப்பிடிக்கப்படாமல் தடைப்பட்டு வந்துள்ளது. இதனால், இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்து செயற்கையான வாழ்க்கையில் மோகம் கொண்டு நோய்க்கு இடமளித்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். குடலைக் கழவி உடலை வளர்க்கும் நீர் உணவு முறையால் இரைப்பைக்கு ஓய்வு கிடைக்கிறது. பழைய திசுக்கள் மாறி, புதிய திசுக்கள் வளர்கின்றன. உணவுக்குழாய் தூய்மையாகிறது. கல்லீரல் போன்ற செரிமான உறுப்புகள், சிறுநீரகங்கள், வியர்வை நாளங்கள் புத்துணர்வு பெறுகன்றன. நுரையீரலில் தேங்கியிருக்கும் கார்பன் போன்ற கழிவுகள் வெளியேறுகின்றன.

உடம்பிலுள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும் தன்னைத் தானே அக சுத்தி செய்து கொள்கின்றன. உடற்பருமன், சர்க்கரை நோய், வயிற்றுப்புண்,

இரைப்பு, இளைப்பு, நாட்பட்ட தோல் நோய், நரம்பு நோய்கள், பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளும் நீங்குகின்றன. உடம்பில் நோய் எதிர்ப்பாற்றல் மிகுகிறது. அதனால் ஆட்கொல்லி நோய்களான புற்று, எய்ட்ஸ் போன்ற நோய்களையும் இல்லாமல் செய்யும் நிலை ஏற்படுகிறது. உடலில் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் இளமையும் பொலிவும் வந்தடைகிறது. பட்டினிச்சாவு தடுக்கப்பகிறது. நீண்ட நாள் வாழ வழி கிடைக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...