Apr 26, 2012

பழம்பாசி

மருத்துவக் குணங்கள்:

    பழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக
    பச்சையாக இருக்கும்.  இதன் பூக்கள்  கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக  இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான  முடிகள் இருக்கும்.
    இது 50-200  செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது.  இதன்  தண்டு பசுமை கலந்த மஞ்சள்  நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள், புது கினியா, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்குப் பரவிற்று.
    இது எல்லா வகை நிலங்களிலும் வளரக்கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும்,  சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது.
    இதை நிலத்துத்தி என்றும் சொல்வார்கள்.

நீர்முள்ளி

மருத்துவக் குணங்கள்:

    நீர்முள்ளி என்ற பெயருக்கேற்ப இது நீர் நிலைகளில் காணப்படும் மூலிகையாகும். இதில் முட்கள் இருக்கும். ஊதா நிறத்தில் பூக்களை கொண்டிருக்கும்.
    இதனை நிதகம், இக்குரம், காகன்டம், முண்டகம், என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
    நம்மில் பலருக்கு சிறுநீரக கல் அடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
    இவற்றை எடுத்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து எட்டில் ஒரு பங்காக நன்கு வற்ற காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் சிறு நீரக கல் கரைந்து சிறு நீருடன் வெளியேறும்.
    நீர் முள்ளி சமூலத்தை கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். மேலும் தாது விருத்தி அடையும். மல சிக்கலை போக்கும்.
    நீர்முள்ளி விதை ஆண்மைக்குறைவை போக்குகிறது. மேலும் மூல நோய்க்கு கைகண்ட மருந்தாகும்.

நிலக்கடலைப்பால்








தேவையான பொருட்கள்:

    நிலக்கடலை-1கப்
    முந்திரி-5
    ஏலக்காய்-சிறிதளவு

செய்முறை:

    நிலக்கடலைப் பருப்பை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவும்,
    பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
    இத்துடன் ஊறிய முந்திரிப் பருப்பை சேர்க்கவும்.
    பின்பு   இவைகளுடன்  சிறிதளவு ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்  அரைக்க வேண்டும்.
    இப்பொழுது சுவையான நிலக்கடலைப்பால் தயார். இதை உணவாகப் பருகலாம்.

மருத்துவக் குணங்கள்:

    மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
    எல்லாவிதமான ரத்தப்போக்கை

முளைக்கீரை


மருத்துவக் குணங்கள்:

    முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவும், மருத்துவச் சிறப்புக்காகவும் பயிரிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிரிடப்பட்ட நிலங்களிலும், தாரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.
    முளைக்கீரையும் தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத் தண்டுக்கீரை எனவும் குறிப்பிடப்படுகிறது.
    முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிர். 45 நாட்கள் வரை வளரக் கூடிய கீரை. அதற்கு மேல் விட்டால்

சிறுகீரை

சிறுகீரைச்சாறால் கண்களைப் பற்றி கவலைப் படாமல் வாழலாம்.
சிறுகீரைக்குச் சில்லி, சாகினி, மோகநாதம் என்னும் பெயர்களும் உண்டு. சாதாரணமாக இந்தியாவெங்கும் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது.
இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது செங்குத்தாக வளரும். நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய

சுண்ணாம்பு

மருத்துவக் குணங்கள்:

    சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே.
    விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.
    இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக் கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.
    மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம். கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்.

பேரிக்காய்

மருத்துவக் குணங்கள்:

    பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. எனினும் ஆப்பிளில் அறவே இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக் குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கிடைக்கும்.
    எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல்

Apr 25, 2012

மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்

மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்



மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.

ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.

மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போ ஹைட்ரேட் 14.5 விழுக்காடும், தாதுக்கள் 0.7 விழுக்காடும், சுண்ணாம்புச் சத்து 10 விழுக்காடும், மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளன.

இதுதவிர, சிலிக் திராவகம் 14 மில்லி கராம், கந்தகம் 12 விழுக்காடு, குளோரின் 20 விழுக்காடு, தயாமின் 0.46 விழுக்காடு, பாஸ்பரம் 1.33 விழுக்காடு, செம்பு 0.2 விழுக்காடு, நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன.

மேலும், வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு

கடுக்காய்

மருத்துவக் குணங்கள்:

    கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
    திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய

நித்திய கல்யாணி

மருத்துவக் குணங்கள்:
  1. நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தாம். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். அரிய உள்ளடக்கங்கள் மேலும் இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமானதுதான்.

உலர்ந்த திராட்சை



மருத்துவக் குணங்கள்:

    ஆரம்ப காலத்தில் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிஸ்மஸ் பழம் எனப் பெயரிட்டனர். பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயாசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
    இதில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது தான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
    உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும்.
    குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
    இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...