Apr 29, 2012

ஆயுர்வேத மருந்துகள்

ஆயுர்வேதம் மிக பழமையானது. வேதங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு வரும் ஆயுர்வேதம், நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் நீண்ட கால வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை.
ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். அலோபதி முறையில் உள்ள மாத்திரைகள், கேப்ஸ§ல்கள், இன்ஜெக்ஷன், சிரப் போலவே ஆயுர்வேதத்திலும் பல வகைகளாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்
1. அர்க்கங்கள் – திரவப் பொருட்களுடன் மருந்து சரக்குகள் கொதிக்கும் போது எழும் நீராவி பல மருத்துவ குணங்கள் உடையது. மூலப்பொருட்களில் உள்ள சில குறைகள் (துர்வாசனை போன்ற) இந்த முறையில் நீக்கப்படுகிறது. நீராவியை குளிர வைத்து நீராக்குவதால் மருந்துகள் உட்கொள்வது சுலபமாகிறது. சாதாரணமாக கொதிக்க வைக்கும் போது நஷ்டமாகும் சில சத்துக்களை, அர்க்க முறையால் நஷ்டமாகாமல் தடுக்கலாம். தவிர

நோய் கண்டறியும் முறை


“திடமான, குழப்பமடையாத மனநிலை, புரிந்துக் கொள்ளும் திறமை இவை உள்ள மருத்துவர், அறிகுறிகளை கவனித்து, சரியான வியாதிகளை கண்டறிய வேண்டும். – சரக சம்ஹிதை”
ஆயுர்வேதம், ஆங்கில வைத்யம், யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் எதுவானாலும் சரி, நல்ல மருத்துவரை இனங்காட்டும் அறிகுறி அவரது நோய் கண்டறியும் திறமை. இதை நாம் டாக்டரின் ‘கை ராசி’ என்கிறோம். ஒரு மருத்துவரின் நோயறியும் திறமை, நோய் உண்டான காரணங்கள், சரியான சிகிச்சை முறைகள், நோயாளியின் உடலுக்கேற்ற மருந்துகள் இவைகளை உணர்ந்து செயல்படும் ஆற்றல் படைத்த மருத்துவர்கள் தான் சிறந்த மருத்துவர்கள்.
ஆயுர்வேதம் வாழ்க்கையின் விஞ்ஞானம். ‘ஆயுர்’ என்றால் வாழ்க்கை; வேதம் என்றால் அறிவு, ஞானம். ‘சாங்கிய’ வேதாந்தத்தை தழுவியவை ஆயுர்வேத கோட்பாடுகள். வியக்தி (வெளிக்காட்டு) வெளிப்பாடில்லாத ‘அவியக்தி’யிலிருந்து உருவானது

ஆயுர்வேதத்தின் தோற்றம்

நமது இந்திய தேசத்தின் வரலாறு தொன்மையானது. உலகின் பெரும் பகுதி நாகரிகமே அடையாமல் இருளடைந்து இருந்த போது நமது தேசம் கலாச்சாரத்தில் முன்னேறி ஆன்மீகத்திலும் வாழ்க்கை கல்வி முறைகளிலும் சிறந்திருந்தது. நமது முனிவர்கள் நமக்கு வைத்த செல்வங்கள் தான் நான் மறைகள் (நான்கு வேதங்கள்). இவை யாராலும் எழுதப்படாமல் முனிவர்கள் வெளிப்படுத்திய வாழ்க்கை நெறியின் உண்மைகள் வியாச முனிவரால் பிற்காலத்தில் நான்காக தொகுப்பட்டன. அவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள். இதில் மிகப் பழமையானது ரிக்வேதம்.
ஆயுர்வேதம் அதர்வண வேதத்தின் சுயேச்சையான

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் – சமாளிப்பது எப்படி?
உயர் ரத்த அழுத்தம் தற்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அதுவும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இல்லையென்றால் அது ஒரு அதிசயம் தான்! இரத்த அழுத்தத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமுன், நாம் இதயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதயம்
இதயம் ஓய்வின்றி உழைக்கும் அவயம். கூம்பு வடிவத்தில் 275 லிருந்து 400 கிராம் எடையுடன், கை முட்டி அளவில் அமைந்திருக்கிறது. இதன் முக்கியமான பணிகள் நமது வீட்டு தோட்டத்தில் உள்ள பம்ப் போல் இதயம் எல்லா அவயங்களுக்கும் ரத்தத்தை

தொந்தி ஒரு தொந்தரவா இதய நோயைத் தவிர்க்க !

உணவில் தினமும் கோதுமை அல்லது சோளம் சேர வேண்டும். சோயா பீன்ஸ் சேருவதும் நல்லது. இவற்றில் உள்ள செலினியம் என்ற தாது உப்பு இதயத் தசைகளை சிறப்பாகப் பாதுகாத்து இதய நோய்களைத் தடுத்துவிடுகிறது. தினமும் குடிக்கும் குடிகாரர்கள் உடலில் செலினியம் உப்பு எப்போதும் பற்றாக்குறையிலேயே இருக்கும். இவர்கள் மேற்கண்ட உணவு வகைகளுடன் மீனையும் சேர்த்து வரவேண்டும்.

ஒயின் நல்லது!

பீர், பிராந்தி, விஸ்கி இவற்றைவிட ஒயின் நல்லது

வரும்முன் காப்போம் – கண்களைக் காக்க…


ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும். இந்த இதழில் ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும்.

உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று.

இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது

கண்களைப் பாதுகாக்க முருங்கை !



பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும்

சீனி : சில கசப்பான உண்மைகள் !

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.

சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் உ2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.

அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு

நீரிழிவு நோய் – 2 டென்மார்க்கில் இளையோரையும் தாக்குகிறது !

நீரிழிவு நோய் – 2 என்பது முன்னர் வயோதிபர்களுக்கான சல வருத்தம் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. இப்போது டென்மார்க்கில் வயது குறைந்த இளையோருக்கும் நீரிழிவு நோய் – 2 வருவதாக புதிய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வானது ஆச்சரியப்படத்தக்க வகையில் உயர்வு கண்டிருப்பதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. பத்தாண்டுகளுக்கு முன்னவர் 40 வயதுடையோரில் வருடாந்தம் 1713 பேர் சலரோகம் – 2 ஆல் பாதிக்கப்பட்டனர். இன்றோ இத்தொகை 2945 ஆக உயர்வு கண்டிருக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு, உடலின் பல பாகங்களில் உண்டாகும் இரத்தத் தடை, பார்வைக்குறைவு, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பல்வேறு உயிராபத்து விளைவிக்கும் வியாதிகளை இளம் வயதிலேயே மக்கள் எதிர் கொள்ள நேரிடுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு உணவுப் பழக்கம்

நீரிழிவை முற்றாகக் குணப்படுத்த மருந்து !

 டென்மார்க்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நீரிழிவு நோய் பாரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதிலிருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்று பல வகையாக ஆராய்ந்து, சென்னை முழுவதும் உள்ள புத்தகக் கடைகள் எல்லாம் ஏறி இறங்கி பல நூறு நூல்களை சேகரித்து வாசித்தோம். அதில் ஒரேயொரு புத்தகம் மட்டும் நீரிழிவை முற்றாக நிறுத்தலாம் என்று கூறியது. 136 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் இருந்து ஒரு முக்கியமாக இருந்த ஒரு பகுதியை இங்கே தருகிறோம். நீங்கள் வைத்தியருடன்

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள் !



நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.

முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...