Jun 30, 2012

கூந்தலுக்கு வைத்தியம்!



* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை.

ரத்தசோகை - கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை--


கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின் போது பொதுவாக அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்த சோகை நோய் இருந்தால் ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும்.
 
தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால் இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும்.
 
கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள்,சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. வலி நிவாரணி, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும்.
 
இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைகீரை, அரைக்கீரை, ஆரைக்கிரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது.
 
இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும் மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத்தங்களி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது

முகத்தில் வடியும் எண்ணெய்த் தன்மையைப் போக்க சில டிப்ஸ்


வெயில் காலத்தில் வெளியில் போவ தென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்து விடும். கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்
எண்ணெய் பசை நீங்க:

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன் பால்

ஆமணக்கு மிகச் சிறந்த மருந்து

ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக் கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச் சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத் துகின்றார்கள்.
 
ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படு கின்றன.
குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு வித மான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள்.
சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறி து அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு க் கொடுத்து வர, சளித்தொல்லை குணமா கும்.
இதன் இலைகளை கீழாநெல்லி இலைகளு டன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று மு றை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோ ய் தீர்ந்துவிடும்.
சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால்

நம் உடலில் குரோமியம் தாது உப்பின் அளவு குறைந்தால்


நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.


இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில்

Jun 28, 2012

ஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகள்

ஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகளைக் கடைபிடிப்பது மிகவும் எளிதானது. சில விதிமுறைகளை மனதில் வைத்துக்கொண்டலே போதும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக நாம் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியதில்லை.


முக்கியமான விதிமுறைகள்:

1. பசுமையான, புதிய, அன்று சமைக்கப்பட்ட உணவுதான் மிகச்சிறந்தது. ஜங்க் ஃபுட், பதனிட்ட உணவுகள், மற்றும் இரசாயனப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும். மைதா மாவில் செய்த ரொட்டியைவிட முழுத்தானிய மாவில் செய்த ரொட்டிதான் நல்லது. வேகவைத்து சமைக்கப்ட்ட மீன் குழம்பு வறுத்த மீனைவிட ஆரோக்கியமானது. இதேபோல் இறைச்சி குழும்பு வறுத்த மாமிசத்தைவிட நல்லது. சமைப்பதற்கு நல்ல தாவர எண்ணைய்களைப் பயன்படுத்துங்கள். பச்சைக்காய்கறிக் கலவைக்கு ஆலிவ் எண்ணையை உபயோகப்படுத்துங்கள். மலிவான, தரமில்லாத எண்ணைகள் நல்லதல்ல. இவைகளில் கெடுதலான ட்ரான்ஸ்-கொழுப்புக்கள் இருக்கும். சமைக்க அதிக நேரம் இல்லாவிட்டால் பசுமையான, புதிய காய்கறிகளை

கொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்! இயற்கை தரும் இளமை வரம்!


இயற்கை தரும் இளமை வரம்!

ஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும் வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்று. பச்சை, பூவன், மலை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்.. என சுவை சொட்டும் இதன் வகைகள் ஏராளம்; அது தரும் சரும பலன்களும் தாராளம்! வயோதிகத்தைத் தள்ளி வைத்து, இளமையை தக்க வைத்து நம் வனப்பைக் கூட்டும் வாழைப்பழத்தின் அழகு பலன்களைப் பார்ப்போமா?
வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது 'வாழைப்பழ பேஸ்ட்'..
ஒரு வாழைப்பழத்துடன் (வெறும் வாழைப்பழம் என்றால், அது பூவன் பழத்தையே குறிக்கும்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.
இந்த வாழை - வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு

பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்! --உபயோகமான தகவல்கள்


பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்!

Driving anxiety... சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கார் ஓட்டுபவர்களைத் துரத்தும் லேட்டஸ்ட் பிரச்னை இதுதான்! கார் ஓட்டும்போது இனம் புரியாத பதற்றம், தலைச் சுற்றல், மயக்கம், குமட்டல் போன்றவை ஏற்பட்டால், அவை 'டிரைவிங் பதற்ற’த்துக்கான அறிகுறிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 95 சதவிகித விபத்துகள்

அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்


'அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''
விஜயலட்சுமியின் வியூகம்
''அடுத்த படத்துக்காக இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'' - பொய் சொல்கிறார் விஜயலட்சுமி. ''ஐயோ, சத்தியமா இப்போ வெயிட் போட்டிருக்கேன். இயல்பாவே நான் ரொம்ப ஸ்லிம். கொஞ்சமா வெயிட் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சும்மாவே பிரியாணின்னா, நான் வெளுத்துக் கட்டுவேன். வெயிட் போடணும்னு சொன்னதும் கேட்கவா வேணும்? தினமும் பிரியாணியா பிரிச்சு மேயுறேன்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்


உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
 
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...