Jul 6, 2012

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி


உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.
பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.
உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

Jul 3, 2012

மசாலா பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி?--சமையல் குறிப்புகள்


ளதள தக்காளி குருமா, கமகமக்கும் கறிக்குழம்பு, பெப்பர் பீஸ் மசாலா... நினைக்கும்போதே, நாக்கில் எச்சில் ஊறும்தானே! வாய்க்கு ருசியையும் சுண்டி இழுக்கும் மணத்தையும் ஒருசேர அளிப்பவை மசாலாப் பொருட்கள். ஆனால், இவை எந்த அளவுக்கு உடலுக்கு நல்லவை?

''பொதுவாக மசாலா சேர்த்த உணவு வகைகளைக் பகல் பொழுதில் சாப்பிடுவதுதான் நல்லது. அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் உள்ள நார்ச்சத்து உடலில் கொழுப்பைச் சேரவிடாமல் வெளியே தள்ளிவிடும். அதே சமயம், மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும். உமிழ்நீர் சுரப்பை அதிகப்படுத்தி உணவு ஜீரணத்துக்கு மசாலா

சர்க்கரையைக் கரைக்கும் ஓமக்களி --சமையல் குறிப்புகள்


ர்க்கரை விலை எகிறும் வேகத்தில்... சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் எகிறுவதுதான் வேதனை. சர்க்கரை நோயாளிகளின் பட்டியலில் உலக அளவில் சீனாவுக்கு முதல் இடம். இந்தியாவுக்கு இரண்டாவது இடம். நினைத்துப் பாருங்கள்... நம் முன்னோர்களில் இவ்வளவு பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது கிடையாது. காரணம், அவர்களின் உணவுப் பழக்கம். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே...

மாம்பருப்புத் துவையல்

தேவையானவை: மாம்பருப்பு - 200 கிராம், மிளகு, சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை தேக்கரண்டி, பூண்டு - 6 பல், கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து - 4 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2, தேங்காய் - ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் -

விளாம்பழத்தில் மருத்துவ மகத்துவங்களும் அதிகம்-பழங்களின் பயன்கள்



ணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு மிகச் சரியான உதாரணம், விளாம்பழம். இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியோடு, இனிய மணத்தோடு இருக்கும் விளாம்பழத்தில் மருத்துவ மகத்துவங்களும் அதிகம். விளா மரத்தின் ஒவ்வொரு பாகமும் அபூர்வமான மருத்துவ குணங்கள் அடங்கியதே.
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி

செல்லும் சாலையில் உள்ள திருநின்றியூர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் தல விருட்சம் இதுதான். இந்த மரத்தின் பழங்களைக் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுவதால், வட மொழியில் 'கபி ப்ரியா’ என்றும் ஆங்கிலத்தில், 'மங்கி ட்ரீ’ என்றும் விளா மரத்துக்குப் பெயர்கள் உண்டு. சுத்தியால் உடைத்துத்தான் விளாம்பழத்தின் ஓட்டை உடைக்க முடியும். உள்ளே இருக்கும் பிசின் போன்ற சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் சர்க்கரை அல்லது தேங்காய்ப் பால் மற்றும் வெல்லத்துடன் பானமாக்கி, குடிப்பதும் உண்டு. விளா மரத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி பட்டுக்கோட்டை சித்த மருத்துவர் பாலசங்கரியிடம் கேட்டோம். அத்தனைவிதமான பலன்களையும் ஆர்வத்தோடு விவரித்தார்.
விளா மரத்தின் இலை, காய், பழம், பழத்தின் ஓடு, பட்டை, பிசின், வேர்

பயமே விஷம் ஆகலாமா? --உபயோகமான தகவல்கள்



'ஒரு விஷயம் தெரியுமா? பாம்பு கடித்த ஒருவர் அதன் விஷத்தால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் 'பாம்பு கடித்துவிட்டதே’ என்ற அதிர்ச்சி காரணமாகப் பாதிப்படைகின்ற நிகழ்வுகளே இங்கு அதிகம்.
ஆம், எல்லாப் பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியாவில் காணப்படும் சுமார் 200 வகைப் பாம்புகளில் நச்சுத்தன்மை கொண்டவை வெறும் 52 வகை மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் கட்டு விரியன், கண்ணாடி விரியன், ரம்பச் செதில் கொண்ட விரியன், நாகப் பாம்பு, பவழப் பாம்பு, ராஜநாகம் போன்றவைதான் கொடிய விஷம் கொண்டவை.
கடித்த பாம்பைப் பொருத்து பாதிப்பு ஏற்படும். உரிய தருணத்தில் சரியான முதல்

வேர் உண்டு வினை இல்லை! --இய‌ற்கை வைத்தியம்

சங்குப்பூக்கொடிக்கு மாமூலி, கன்னிக்கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவற்றை மருத்துவத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

கீழாநெல்லியின் முழுச் செடி, யானை நெருஞ்சில் இலை, அருகம்புல்,  சங்குப்பூக்கொடியின் வேர் என அனைத்திலும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றோடு ஐந்து மிளகையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குத் தினமும் காலையில், இந்தக்

இதயத்தை காக்கும் மூலிகை! --இய‌ற்கை வைத்தியம்




மூலிகைகளால் முடியாதது எதுவும் இல்லீங்க. நீங்க மனசு வச்சா தினந்தோறும் சில நடைமுறைகளை ஒழுங்கா பின்பற்றினாலே எந்தவித நோ‌ய் நொடியும் இல்லாம நீங்க வாழலாம். முதல்ல இதய நோ‌ய் வராமலும், நோ‌ய் வந்தபின் இதயத்தை எப்படி காப்பதுங்கிறது பற்றியும் சொல்றேன்.

இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கதனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படுமசெம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

இஞ்சிப் பால்--சமையல் குறிப்புகள்


தேவையான பொருட்கள்

இஞ்சி - சிறிய  துண்டு
பால் - 1 கப்
தேன் - 1 ஸ்பூன்

செய்முறை...

• இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும்.

•  நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும்.

• தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும்.

*  ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும்.

• அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான

சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க



இன்று, சர்க்கரை நோய் ரொம்ப `பொதுவான' வியாதியாகிவிட்டது. `40'-ஐ தாண்டிவிட்டாலே சர்க்கரை நோய் சாதாரணம் என்ற நிலை உருவாகிவிட்டது. உலகிலேயே அதிக செலவு வைக்கக்கூடிய வியாதியாக `டைப் 2' சர்க்கரை நோய் கருதப்படுகிறது. சர்க்கரை நோயுள்ள வயது வந்தோருக்கு, சர்க்கரை நோயில்லாதவர்களை விட இதய நோயால் உயிரிழப்பு அபாயம் நான்கு மடங்கு அதிகம் என்று அச்சுறுத்துகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு முந்திய `பிரி டயபடீஸ்' நிலையும் அதிகரித்து வருகிறது. விடலைப் பருவத்தினர் மற்றும் வயது வந்தோரில் 13 சதவீதம் பேருக்கு `பிரி

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்



கைக் குழந்தைகளுக்கு ஏதாவது வியாதி என்றால், மிக கவனமுடன் கையாளுங்கள். வாய் திறந்து அவர்கள் பேசும் பருவம் வரும்வரை , மிக மிக கவனத்துடன் பராமரிப்பது அவசியம் .

அறிகுறிகளும், பாதிப்புகளும்
* உடலில் இருந்து அதிக அளவில் நீர் உப்புகள், வைட்டமின்கள் வெளியேறுகின்றன.
* சத்துக் குறைபாடு ஏற்படும்.
* உணவில் இருந்து மைக்ரோ மற்றும் மேக்ரோ நுணூட்டச் சத்துகளை திசுக்கள் உறிஞ்ச முடியாமல் போகும்.
* புரோட்டின் சத்தும் வீணாகும்.
* பசி எடுக்காது.
* ரத்த அளவு குறையும்.
* நாடித் துடிப்பும் குறையும்.
* ரத்த அழுத்தம் குறையும்.
* கை, கால்கள் சில்லிட்டுப் போகும்.
* வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும்.
* சிறுநீரகம் பாதிக்கப்படும்.
*ரத்ததில் பொட்டாசியம் அளவு குறைவதால் வயிறு வீக்கம், குடல் வேலை

ஆன்மீகம் மற்றும் மருத்துவம் கூறும் துளசியின் மகத்துவம் தெரியுமா?



  



Stay connected to temple.dinamalar.com
துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...