Aug 3, 2012

பத்தே நாளில் 3 கிலோ குறையணுமா?

உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி வேண்டாம். அறுவை சிகிச்சை வேண்டாம், மாத்திரை- மருந்துகள் தேவை இல்லை. இவை எதுவும் இல்லாமல் உங்கள் உடம்பை குறைக்க எளிய உணவு முறை இதோ-

தினந்தோறும் காலையில்...


காட்டு நெல்லிக்காய் தண்ணீர் (இரவில் 4 முதல் 5 காட்டு நெல்லிக்காய் ஊற வைக்கப்பட்ட தண்ணீர்)


காலை உணவு


1 கப் பப்பாளி

1 கப் முளை விட்ட பயிர்கள் மற்றும் எலுமிச்சை தண்ணீர்

2 மணி நேரம் கழித்து


1 டம்ளர் தேங்காய் தண்ணீர் அல்லது தக்காளி ஜுஸ்


மதிய உணவு


லஞ்ச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் அரை டம்ளர் சூடான தண்ணீர்


1 பிளேட் காய்கறிகள் (உருளைக்கிழங்கு தவிர்த்து)

கொஞ்சம் தயிர்
உமியை பயன்படுத்தி செய்யப்பட்ட 2 ரொட்டி (50 சதவீதம் கோதுமை மாவு, 50 சதவீதம் உமி)

மாலை


டீ


1 கிண்ணம் நிறைய பழங்கள் (மாதுளை, ஆரஞ்சு கண்டிப்பாக இருக்க வேண்டும்.)



இரவு உணவு (8 மணிக்கு)


1 கிண்ணம் நிறைய சிக்கன் மற்றும் சலாட்

(அல்லது)
மீன் _ முட்டை மற்றும் சலாட்
(அல்லது)
பன்னீர் சலாட்

இரவு உணவுக்குப் பிறகு அரை டம்ளர் சூடான வெந்நீர்


தவிர்க்க வேண்டிவை; 


வாழைப்பழம், திராட்சை, இனிப்புகள், சர்க்கரை, குளிர்பானங்கள், வறுக்கப்பட்ட உணவு


உட்கொள்ள வேண்டியவை; 


சர்க்கரை இல்லாத மருந்து- மாத்திரைகள், 2 மடங்கு பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் அதன் தயாரிப்புகள்


அடுத்த 2 வாரத்துக்கு நீங்கள் இந்த உணவு முறையை விடாது பின்பற்றி வந்தால் உங்கள் உடல் பருமன் 3 கிலோ அளவுக்கு குறையும்.

பாகற்காயின் மருத்துவ குணங்கள்---உணவே மருந்து

,பாகற்காயின் மருத்துவ குணங்கள்

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம். 

இது சூடு உண்டாக்கும். இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப்

பொடுகை விரட்ட வேப்பம்பூ



பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

Aug 2, 2012

உடலில்இரத்த அணுக்களை அதிகரிக்கும் பீட்ரூட்




உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும்இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகி விடும். மேலும்இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா.

ஆகவே அத்தகையஇரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே.

இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

பீட்ரூட்:இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவுஇரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது.

இரத்த சோகையை குணப்படுத்தும் உலர் திராட்சை



உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன.
இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

1. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

2. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச்

கேரட்டின் மருத்துவ குணங்கள்




காய்கறிகளில் மிகவும் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும், அனைவருக்கும் பிடித்ததுமாக இருப்பது கேரட்.
கேரட் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய உணவுப்பொருளாகும். அந்த கேரட்டின் வேர் சற்று மொறுமொறுப்புடனும், சுவையாகவும் இருக்கும்.

சொல்லப்போனால் இது ஒரு சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் கேரட்டில் அந்த அளவு ஊட்டச்சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளன.

மேலும் இதனை டயட்டில் இருப்பவர்கள், தங்கள் உணவுப் பொருட்களில் தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டால் போதும், உடல் எந்த ஒரு நோயும் வராமல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் நன்கு பிட்டாகவும் இருக்கும்

இவை சரிதானா?


ரத்த அழுத்தமா... கூலா இருங்க!


முருங்கையைவிட வெங்காயத்தில் உள்ளது வயாகரா


முருங்கைக்காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியாகமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்.
 
மிகச்சிறிய குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்து விடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டி விட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள்,

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்


நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும். உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.
அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர்,

பெண்கள் தினமும் இரண்டு ஆப்பிள் சாப்பிடுங்கள்


பெண்கள் தினமும் இரண்டு ஆப்பிள் சாப்பிடுவது மாரடைப்பு போன்ற இதய வியாதிகளில் இருந்த அவர்களை காக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புனோரிடா மாகாண பல்கழைக்கழகம் இதுபற்றிய ஆய்வை நடத்தியது. ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி தமனியை பாதிப்பதால் தான் இதய கோளாறுகளும், மூளைக்கட்டிகளும் ஏற்படுகிறது.
 
மாதவிலக்கு பெண்களில் உடல்ரீதியான மாற்றங்களில் முக்கிய பங்கு வகிப்பது போலவே, மாதவிலக்கு விடைபெறும் மொனோபாஸ் காலமும் பெண்களின் உடலியல் மாற்றத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்தப்பருவத்தில் பெண்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள தெரிவிக்கின்றன

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...