Sep 19, 2012

மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது: சந்திரபாபு நாயுடு

மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது: சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத், செப். 20 -
 
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கமாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது நம்பிக்கையில்லாமல் வெளியேறியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் தன்னிச்சையான முடிவே காரணம். ஆளும் காங்கிரஸ் கட்சி பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எந்த வலிமையையும் இல்லாமல் இருக்கிறது. இப்போது உள்ள நிலையில் மூன்றாவது அணி அமைவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் பில் கேட்ஸ் Washington வியாழக்கிழமை, செப்டம்பர் 20


 
அமெரிக்க பணக்காரர்கள் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் பில் கேட்ஸ்பார்ப்ஸ் மேகசின் என்ற பத்திரிக்கை, உலகம் மற்றும் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருப்பவர்கள் பட்டியலை வெளியீட்டு வருகிறது.
 
அப்பத்திரிக்கை இப்பொழுது அமெரிக்க பணக்காரர்களில் முதல் பத்து பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸ் இந்த வருடமும் முதலிடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
 
சாப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஜாம்பவானாக

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றி




ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றிஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 29-ம் நிலை வீரர் அஜய் ஜெயராம் (இந்தியா) 21-14, 21-14 என்ற நேர்செட்டில் சிங்கப்பூர் வீரர் ஜி லியாங் டெரக்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து 21-18, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை காரி இமாபெப்பை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 57 நிமிடம் தேவைப்பட்டது.

இந்திய வீரர்கள் காஷ்யாப், குருசாய்துத், சாய் பிரனீத் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை திறப்பு: ஒருநாளைக்கு 900 கிலோ தங்கம் உற்பத்தி

 
 ஜூபா, செப். 20
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை திறப்பு: ஒருநாளைக்கு 900 கிலோ தங்கம் உற்பத்திஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தங்க சுத்திகரிப்பு ஆலையை சூடான் அதிபர் ஓமர் அல்பஷீர் திறந்து வைத்தார். இந்த ஆலை ஒரு நாளைக்கு 900 கிலோ தங்கத்தையும் மற்றும் 200 கிலோ வெள்ளியையும் உற்பத்தி செய்யும். கடந்த வருடம் தெற்கு சூடான் தனியாக பிரிந்து சென்றது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணை வருமான இழப்பை சரிசெய்ய இந்த ஏற்பாடை சூடான் அரசு -செய்துள்ளது.
 
சூடானில் உள்ள தங்கத் தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 328 டன் தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலை உற்பத்தியின் மூலம் சுமார் 300 கோடி டாலர் அளவிற்கு தங்கம் விற்பனை செய்ய எதிர் பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் தங்கம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து வரும் தங்கத்தையும் இங்கு சுத்திகரிப்பு செய்ய முடியும்.

ஈரான் மீது படையெடுப்பதற்கான அதிகாரம் ஒபாமாவுக்கு உள்ளது! - ஐ.நாவுக்கான தூதுவர் தெரிவிப்பு

ஈரான் அணுகுண்டுகளை பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கும் என்று ஐ.நா. அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறினார்

.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து கூறியதாவது.
ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது. இவ்விசயத்தில் அதிபர் பராக் ஒபாமா மிகத் தெள்ளத்தெளிவான முடிவில் உள்ளார். அவ்வாறு நடப்பதை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். ராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முடிவுகளும் அந்நாட்டிற்கு எதிராக தயாராக உள்ளன. இது ஒரு நசுக்கும் கொள்கையாக இருக்கவில்லை.

15 வாரங்களாக கடலில் தத்தளித்தவரை காப்பாற்றிய சுறா!


பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று, வழி தவறி, 15 வாரங்கள் கடலிலேயே தத்தளித்த பிரிட்டன் போலீஸ்காரர்
, சுறா மீன் உதவியால் கரை திரும்பியதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி டோவ்காய் டெய்டோ(42) தன் உறவினர் லெலு பைலலி உடன், பசிபிக் பெருங்கடலில், கில்பர்ட் எலிஸ் தீவில் உள்ள தரவா பகுதிக்கு, படகில் மீன் பிடிக்கச் சென்றார்.
மெயினா தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் எரிபொருள் தீர்ந்து விட்டது. எனவே, இருவரும் படகிலேயே படுத்துத் தூங்கினர். பின், சில வாரங்கள் கடலிலேயே செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். லெலு பைலலி மூச்சுத் திணறலில்

Please do share this as much as you can!!!!

HOW TO SURVIVE A HEART ATTACK WHEN ALONE
Let's say it's 6.15pm and you're going home (alone of course),
...after an unusually hard day on the job. You're really tired, upset and frustrated. Suddenly you start experiencing severe pain in your chest that starts to drag out into your arm and up into your jaw. You are only about five miles (8kms) from the hospital nearest your home. Unfortunately you don't know if you'll be able to make it that far. You have been trained in CPR, but the guy that taught the course did not tell you how to perform it on yourself..!!

NOW HOW TO SURVIVE A HEART ATTACK WHEN ALONE..

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!



நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

கருமையான கூந்தலை விரும்புவர்களா? உங்களுக்கான வழிமுறைகள்

கருமையான கூந்தலை விரும்புவர்களா? உங்களுக்கான வழிமுறைகள்

கூந்தல் கருமையாக வைத்திருக்கத்தான் அனைவரும் விரும்புவர். இளமையிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்தாலோ, செம்பட்டையாக காணப்பட்டாலே தாழ்வுமனப்பான்மையில் தவித்து போகின்றனர் இளைய தலைமுறையினர். உடம்பில் பித்தம் அதிகரிப்பதால் முடி நரைக்கத் தொடங்குகிறது.
நமது தலை முடியின் நிறம், பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. முடிஉறை அடியிலிருக்கும் மெலானோசைட்ஸ் நம்முடிக்கு நிறமளிக்கும் செல்கள். இவை மெலானின் என்ற நிறமியை தயாரிக்கின்றன.

மெலானின் அளவுப்படி தோல், முடி நிறங்கள் அமைகின்றன. வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து பின் நின்று விடும். வயதால் முடி நரைத்தால் அதற்கு மாற்று இல்லை. நரைமுடியை மீண்டும் கறுப்பாக மாற்ற வழி இல்லை. ஆனால் இளம் வயதிலேயே தலை நரைத்தால் அதை குணப்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

வைட்டமின் பற்றாக்குறை 
பரம்பரை – பெற்றோர்களுக்கு, முடிக்கு நிறம் தரும் மெலானின் குறைபாடு இருந்தால், அவர்களின் மக்களுக்கும் இளநரை தோன்றும் வாய்ப்புகள் அதிகம். உடல் ஆரோக்கிய பாதிப்புகளும், உணவுச்சத்து குறைபாடுகளும் காரணமாகலாம். குறிப்பாக வைட்டமின் பி குறைபாடுகளும், தைராய்டு பிரச்சினையும் நரை தோன்ற காரணமாகும்.

வைட்டமின் பி உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். வைட்டமின் கே குறைபாடும் நரை வர காரணமாகலாம். இந்த வைட்டமின் கறிவேப்பிலை, நெல்லிக்காய், சுண்டைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், நாவல் பழம் இவற்றில் உள்ளது அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இளநரையை தவிர்க்கலாம்.

இளநரையை தடுக்க
மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் கலந்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து அலசி குளித்தால் இளநரை முடி, கறுப்பாகும். இதே போல கறிவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளை பயன்படுத்தலாம். மேற்சொன்ன கீரைகளுடன், கீழாநெல்லியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு கைப்பிடி அளவு பச்சைத்துளசி இலையை எடுத்து ஒரு கப் தண்ணீரில் இட்டு காய்ச்சி பின்னர் இந்த நீரை எடுத்து இளம் சூட்டோடு தலையில் உரசி முடி வேர்க்கால் முதல் நுனிவரை தினசரி தடவி வந்தால் நரை நீங்கும். முடி கறுமை நிறம் பெறும்.

மருதாணி தைலம்
ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை எடுத்து மைபோல அரைத்து அத்துடன் 50 மிலி தேங்காய் எண்ணெயையும் 25 மிலி தண்ணீரும் சேர்ந்து காய்ச்சி எண்ணெயை எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி குளிக்கும் முன்பு தலையில் அரைமணி முன்பாக தடவி பின்பு குளித்து வர, நரை நீங்கும்.

மருதாணி பொடி – 1 டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன், வெந்தயப்பொடி – 1 டீஸ்பூன், காபி – 1 மேஜைக்கரண்டி, புதினா சாறு – 2 மேஜைக்கரண்டி, துளசி சாறு – 2 மேஜைக்கரண்டி, இந்த விழுதை தலையில் 2 லிருந்து 4 மணி நேரம் வைத்து ஊறவைக்கவும். பிறகு இயற்கை ஷாம்புவால் அலசவும்.

ஊட்டச்சத்துணவுகள்
கறிவேப்பிலையை தினசரி உணவில், சாம்பார், ரசம் தாளிக்கையில், சட்னியாக, துவையலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து உபயோகித்தால் அதன் முழுப்பலன் கிடைக்கும். கறிவேப்பிலையை பச்சையாகவே பெறும் வயிற்றில், காலையில் சாப்பிட்டு வரலாம்.

கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளும், முடி கருமையாக வளரவும், நரை வராமல் தடுக்கவும் செய்யும். இந்த மூன்று கீரைகளையும் இரண்டு மாதம் பயன்படுத்தினால் உடற்சூடு தணிந்து, கண்கள் குளிர்ந்து, முடியும் ஆரோக்கிய மடையும்.

இஞ்சியை சீவி, தேனுடன் கலந்து வைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இதேபோல் வைட்டமின் பி சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதனால் இளநரையை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கூந்தல் கருமையாக வைத்திருக்கத்தான் அனைவரும் விரும்புவர். இளமையிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்தாலோ, செம்பட்டையாக காணப்பட்டாலே தாழ்வுமனப்பான்மையில் தவித்து போகின்றனர் இளைய தலைமுறையினர். உடம்பில் பித்தம் அதிகரிப்பதால் முடி நரைக்கத் தொடங்குகிறது.
நமது தலை முடியின் நிறம், பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. முடிஉறை அடியிலிருக்கும் மெலானோசைட்ஸ் நம்முடிக்கு நிறமளிக்கும் செல்கள். இவை மெலானின் என்ற நிறமியை தயாரிக்கின்றன.

தலைமுடி உதிராமல் இருக்க




பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?



1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும் போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.

மனித ரத்தம் ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?


ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு
சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்
ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு
அணுக்களைச் செலுத்துவார்கள்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...