Nov 9, 2012

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் எடை குறையுமாம் ஆய்வில் தகவல்.



அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.
காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய

வெள்ளரிக்காயின் மருத்துவக் குணங்கள்.

வெள்ளரிக்காயின் மருத்துவக் குணங்கள்.சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் பச்சைக் காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய். தண்ணீர்ச்சத்து நிறைந்த இது உடலுக்கு மிகமிக அவசியமான பல சத்துப்பொருட்களை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை அறிவோமா...

* வெயில் காலத்தில் குளிர்ச்சியை அள்ளி வழங்குவதற்காகவே வெள்ளரிக்காய் விளைவது இயற்கை அதிசயமாகும். வெள்ளரிக்காய் வடஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட பழமையான காய்கறியாகும். இது குக்குர்பிட்டா குடும்பத்தைச் சேர்ந்த கொடியில் விளையும் காயாகும். பல்வேறு வடிவம், அளவு, நிறம், பாரம்பரியம் கொண்ட வெள்ளரி வகைகள்

மூட்டுவலியும் (Arthritis) முடக்காத்தானும் (Balloon Vine) !


நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை

மூளை சுறுசுறுப்புக்கு மீன் அவசியம்



நியூசிலாந்தின் மஸ்ஸே பல்கலைக்கழக பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர், ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர், இவர்களுக்கு பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.
மீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்தபோது, ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரியவந்தது. அதாவது, மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே, மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது? என ஸ்டோன்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை யூஸ் பண்ணுங்க..

hair loss tips with natural oils
தற்போது இருக்கும் பிரச்சனைகளிலேயே பெரும் பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது தான். இதனால் தற்போது அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மாசற்ற சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இல்லாதது போன்றவைகளே, இந்த பிரச்சனைகளுக்கு பெரும் காரணம். அதுமட்டுமல்லாமல், கூந்தலுக்கு போதிய சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சரியாக சாப்பிடுவதில்லை. இவ்வாறெல்லாம் இருந்தால், கூந்தல் கொட்டாமலா இருக்கும். ஆகவே அத்தகைய கூந்தல் உதிர்தலைத்

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் சிறந்தது



மலர்களில் மணம், நிறம் மட்டும்தான் உண்டு என்று பலர் நினைக்கின்றனர். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் பூக்கள். 
இதனால்தான், நம் முன்னோர்கள் இறைவனை பூஜிப்பதற்கும், பெண்களின் தலைக்கு சூடவும் மலர்களை பயன்படுத்தினர்.
 
மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது.  அதுபோல் மருத்துவத்திற்கு சிறந்ததாக பயன்படுகிறது.  
 
இதை மலர் மருத்துவம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.
 
தற்பொழுது, ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க

சலரோக நோயை உடனடியாய் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர சிறந்தது வெண்டிக்காய்



அநேகமானவர்களுக்கு இருக்கும் நோய்களில் ஒன்றுதான் சலரோக நோய். இந் நோய் குறிப்பாக வயது வந்தவர்களுக்கே அதிகம் ஏற்படுகின்ற போதிலும் வயது குறைந்தவர்களும் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 
சலரோக நோயை உடனடியாய் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர நாம் அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக்கொள்ள பயன்படுத்தும் வெண்டிக்காய் மிகப்பெறும் பங்கு வகிக்கிறது.
 
இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டிக் காயை வாங்கி வைத்துக்

அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றலுள்ளது மஞ்சள்



மங்களகரமான பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. 
குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு கொடுப்பார்கள்.
 
மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் தாலிக் கயிறில் பூசப்படுகிறது.
 
மங்களகரமான வைபவங்களுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சளின் மருத்துவ குணம் நிறையவே காணப்படுகின்றது. 
 
நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி

மீன் எண்ணெயின் மருத்துவக் குணம்



மீனிலிருந்து தயாரிக்கும் எண்ணெய் மருத்துவக் குணம் கொண்டது.
மீன் எண்ணெய் rickets & tuberculosis நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. தீக்காயங்கள் மற்றும் புண்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
 
மீன் எண்ணெயில் cods, halibut, shark liver oil என்று பல வகையுண்டு.
 
ஆனால் சுறா மீனிலிருந்து மடடும்தான அதிகளவில் எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.
 
மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
 
இந்த ஆராய்ச்சியில் ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த

மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க




மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும். கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.


* போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும். 
*மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா? பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. 
*குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும்.
* இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும். பேசுவதனைத் தவிர்க்கவும்.
*இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம். 
* பயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனைப் பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவிற்குள்ளாக உள்ள போனை மட்டுமே பயன்படுத்தவும். 
*உங்கள் அருகே லேண்ட் லைன் போன் உள்ளதா? மொபைல் போனுக்குப்

உடலுக்கு பலம் தரும் ஆவாரை

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு பாத்திரதஙதல் போட்டு 3டம்ளர் தண்ணீர் விட்டு  அடுப்பில் வைத்து எரித்து பின்னர் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் போன்றவை குணமாகும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...