Dec 18, 2012

பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரக வாசிகள் வந்திறங்குவதாக தகவல்



‘‘மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் பேரழிவை சந்திக்கப் போகிறது.. tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperடிசம்பர் 21,ம் தேதியோடு உலகம் அழியப் போகிறது’’ , உலகம் முழுவதும் இதுதான் தற்போதைய பரபரப்பு பேச்சு. அந்த சம்பவத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் கவுன்ட் டவுன் பரபரப்பாக உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. ‘அச்சச்சோ என்னவெல்லாம் ஆகுமோ’ என்ற பதற்றத்தில் பிரத்யேக பிரார்த்தனை, பாவமன்னிப்பு ஜெப கூட்டம் ஒரு பக்கம்.. ‘வுடு மாமு. டோன்ட் ஒர்ரி’ என்று டேக் இட் ஈஸியாக உற்சாகம், கொண்டாட்டம், ஸ்பெஷல் பார்ட்டி.. என அமர்க்களமாய் ஒரு பக்கம் என கலவை

சந்திரனில் இரு விண்கலங்களை மோதி வெடிக்கச் செய்த நாசா விஞ்ஞானிகள்!

சந்திரனில் இரு விண்கலங்களை மோதி வெடிக்கச் செய்த நாசா விஞ்ஞானிகள்!
[Tuesday, 2012-12-18
News Service அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது. இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின. கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்த ஆய்வில் நிலவின் ஆழமான பகுதியில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உடைந்த திடப்பொருட்களின் கழிவுகள் படிந்துள்ளதாக தெரிய வந்தது.
  
மேலும் 487 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிலவை ஆய்வு செய்த இந்த விண்வெளி ஓடங்கள், 1,14,000 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 2 விண்வெளி ஓடங்களில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்தது. சந்திரனின் ஈர்ப்பு விசையில் இருந்து 11 கி.மீ தூரத்தில் சுற்றி

மாயன் கலண்டர். இரகுநாதையர் பஞ்சாங்கம், உலக அழிவு

மாயன் கலண்டர். இரகுநாதையர் பஞ்சாங்கம், உலக அழிவு

யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவிலில் இருந்து ஒரு வாக்கிய பஞ்சாங்கம் ஆண்டு தோறும் வெளிவருகிறது. பழைய யாழ்ப்பாண மன்னர்களின் ஆஸ்த்தான சோதிடர்களின் பரம்பரையினர் அதை வெளிவிடுகின்றனர். தற்போது உள்ள ரகுநாதையரின் தகப்பனின் சகோதரரான ரகுநாதையர் உயிருடன் இருக்கும் போது அறுபது ஆண்டுகளுக்கு உரிய பஞ்சாங்கத்தை கணித்து வைத்துவிட்டார்.

இந்துக்களின் 60 ஆண்டுச் சுற்று
ரகுநாதையர் குடும்பத்தினர் என்னை இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் அவர்களது குடும்பம் வாழவேண்டும் என்பது எனது விருப்பம். இந்திய அமைதிப்படையின் குண்டு வீச்சிலோ அல்லது இலங்கைப்படையின் எறிகணையிலோ ரகுநாதையர் குடும்பம் முற்றாக அழிந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர்களின்

Dec 17, 2012

நீங்கள் சோற்றிலே புதைக்கும் பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்.

நீங்கள் சோற்றிலே புதைக்கும் பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்..

News Service பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.
காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத்தணிக்கும்.சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

  
மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த

Dec 13, 2012


பயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்

சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை தேடிஎடுத்து இலவசமாக படித்து பயன் பெற சில தளங்களின் சுட்டிகளை தந்திருக்கிறேன். உங்ளுக்கு தெரிந்ததையும் எல்லோருக்கும் பயன்படுமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவச இணைய மின் நூலகங்கள்:

Dec 12, 2012

வாருங்கள்... வழி காட்டுகிறோம்! --- வேலை வாய்ப்புகள்,




வாருங்கள்... வழி காட்டுகிறோம்!

பிஸினஸ் கேள்வி - பதில்


சுயதொழில் தொடங்க ஆர்வத்துடன் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத்தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...
 ''திருச்சியில், ஹால்மார்க் முத்திரையுடன் 9 காரட் தங்கம் ஒரு கிராம் 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். 22 காரட் தங்கம் 3,600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். 9 காரட் தங்கம் என்றால் என்ன? அதை வாங்குவது நல்லதா? மறுபடியும் விற்பனை செய்ய முடியுமா? இதை வாங்கி விற்கும் தொழிலை மேற்கொண்டால் பலன் கிடைக்குமா?''

- ஏ.ராஜேஸ்வரி சின்ஹா, திருச்சி

''சொக்கத் தங்கம் என்பது 24 காரட். இதில் 99.9 சதவிகிதம் தங்கமாக இருக்கும். சொக்கத் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. செம்பு (காப்பர்) கலந்து செய்தால்தான் நகை உறுதிபெறும். சாதாரணமாக 8 முதல் 9 சதவிகிதம் செம்பை கலந்து செய்வார்கள். இப்படி தயாராகும் நகைகள் 22 காரட். இதற்கும் கீழே... 18, 14, 9 ஆகிய காரட்களிலும் நகைகள் கிடைக்கும். எந்த அளவுக்கு செம்பு சேர்க்கப்படுகிறதோ... அதை

Calendar 2013 December Vector Illustration stock vector

Calendar 2013 December Vector Illustration stock vector

Dec 11, 2012

எதற்கு இந்த குறிப்பிட்ட தேதிக்கு இவ்வளவு மவுசு? டிசம்பர் 11,2012




Temple imagesஎதற்கு இந்த குறிப்பிட்ட தேதிக்கு இவ்வளவு மவுசு? அது, 12.12.12 என்பதால் தான். அதாவது, டிசம்பர் மாதம், 12ம் தேதி, 2012ம் ஆண்டு இந்த, 12.12.12 மிக அதிர்ஷ்டமான தேதி. அது ஆயிரம் ஆண்டுகளுக்கு, 12 முறை மட்டுமே வரும்.
பன்னிரண்டு என்ற எண்ணுக்கு, பல மகத்துவங்கள் உண்டு. ஆண்டுக்கு, 12 மாதங்கள். ராசிகளின் எண்ணிக்கை, 12. ஒரு  டஜன் என்றால் எவ்வளவு? 12 தானே! கடிகாரத்தை பாருங்கள், 12 என்ற எண் வரை எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும். பன்னிரண்டு, ஆறு, நான்கு, மூன்று, இரண்டு ஆகிய அத்தனை எண்களாலும் பின்னம் இல்லாமல் வகுபடும் சிறிய எண் 12 தான். அவ்வப்போது, இது போன்ற தினங்கள் குறித்து, (10.10.10 - 11.11.11 போன்று) பரபரப்போடு ஒரு பயமுறுத்தல் எப் போதும் எழுப்பப் படுவது வழக்கம். 12.12.12 அன்று உலகம் அழிந்து விடும் என்று, இப்போதும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
மேற்கத்திய ஜோதிடர்கள் கூறுவது இதைத்தான் 12.12.12  அன்று தொடங்கும்

Dec 10, 2012

உலகின் வேகமான அதி வேக சுப்பர் கணனி அமெரிக்காவிடம்!





உலகின் அதி வேக சுப்பர் கணனியை ( Super Computer ) கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.

அதிவேக சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை எப்பொழுதும் ஒரு நாட்டிடம் மட்டும் இருப்பதில்லை காரணம் சுப்பர் கணனிகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையினாலாகும்.

குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பெருமை ஜப்பானின் சுப்பர் கணனியான 'K' உலகின் அதிவேகமானது என்ற பெருமையைக் கொண்டிருந்தது.



அதற்கு சில காலங்களுக்கு முன்னர் சீனாவின் டியானி (Tianhe ) - 1 A உலகின் அதிகவேகக் கணனி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) இக் கணனி உருவாக்கப்பட்டது.

இதன் அப்போதைய வேகம் 2.50 பெடாப்லொப்ஸ் (Petaflops) அதாவது ஒரு செக்கனில் 2,50 குவாட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியது என்பதாகும்.


சீனாவின் டியானி ( Tianhe ) - 1 A ஆனது 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது. சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.



இக்கணனி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் (CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) அக் காலப்பகுதியில் கொண்டிருந்தது.

இதற்கும் முன்னர் அமெரிக்காவின் கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணனியாக இருந்து வந்தது. இது அக்காலப்பகுதியில் 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டிருந்ததுடன் அப்போதைய இதன் வேகம் 1.75 பெடாப்லொப்ஸ் (Petaflops) ஆகும்.

இந்நிலையில் உலகின் சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை மீண்டும் அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.

அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வுகூடத்திலுள்ள டைடன் 'Titan Cray XK7' உலகின் தற்போதைய அதிவேக சுப்பர் கணனியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.



இது கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் (Cray XT5 Jaguar) சுப்பர் கணனியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

டைடனானது 560,640 புரசசர்களயும், 261,632 NVIDIA K20x எக்ஸலேடர் கோர்களையும் (accelerator cores) கொண்டுள்ளது.


இதன் வேகம் 17.59 பெடாப்லொப்ஸாக கணிக்கப்பட்டுள்ளது. இது செக்கனில் 17.59 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது.

இதேவேளை உலகின் 2 ஆவது அதிகவேகக் கணனி என்ற பெருமையும் அமெரிக்காவுக்கே கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் லோரண்ஸ் லிவ்மோர் தேசிய ஆய்வுகூடத்தின் சிகோய்யா ' Sequoia' கணனியே இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை 3 ஆவது இடத்தை ஜப்பானின் 'K' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலகின் அதிவேக சுப்பர் கணனிகள் 10.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...