Jan 25, 2013

ஆண்களின் இதயத்துக்கு ஆபத்து!



வயதானவர்களைத் தாக்கும் நோய்களின்  பட்டியலில் முதலிடத்தில் இருந்த மாரடைப்பு, இன்று  இளவயதுக்காரர்களிடம் இடம் பெயர்ந்திருக்கிறது. அதிலும் ஆண்களே அதிகம். ‘ஆம்பிளைங்களுக்கென்ன... பிரச்னையா? கவலையா? வீட்டை விட்டு வெளியேறிட்டா, அவங்க உலகமே வேற... ஃபிரெண்ட்ஸ், ஊர் சுத்தல்னு பிரச்னைகளை மறக்க அவங்களுக்கு ஆயிரம் வழி...’ என்பது பொதுவான கருத்து! உண்மை நிலவரமோ வேறு... வேலையிடத்துப் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாகவும், இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும்

பூமி மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது: அதிர்ச்சி தகவல் வெளியானது - NASA

நாம் வாழும் பூமியின் பெரும் பகுதி சுருங்கி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட லேண்ட்சாட் 5 என்ற விண்கலம், கடந்த 1984ஆம் ஆண்டு விண்ணில்
ஏவப்பட்டது.

கடந்த 29 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விண்கலம், பூமியை 1 லட்சத்து 50 ஆயிரம் முறை சுற்றி வந்துள்ளது.

மேலும் இரண்டரை மில்லியன் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள நிலபரப்பின் நிலை குறித்த

மாடர்ன் பெண்கள் அவர்களின் பாட்டிகளை விட வீக் ஆனவர்களாம்




மாட்ர்ன் பெண்கள் அவர்களின் பாட்டிமார்களை விட வலுவில்லாமல் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

தற்போதைய தலைமுறையினா் அவர்களின் மூதாதையர்களுடன் ஒப்பிடுகையில் உடல் வலுவின்றி உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள தற்போதைய தலைமுறையினருக்கு அவர்களின் மூதாதையர்களுடன் ஒப்பிடுகையில் உடல் வலு குறைவாகவே உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிலும் குறிப்பாக பெண்களின் உடல் வலு குறைந்துள்ளதாம்.

லண்டனைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சாம்மி மார்கோ கூறுகையில், தசை சத்தே இல்லாமல் வீக்காக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை

இதயம் துடிக்கவும் மின்சாரம்.




தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் 'சைனஸ் நோட்'.
மின் விநியோகம் சரியா இருக்கா?

‘சைனஸ் நோட்' பகுதியில் இருந்து இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. இந்த மின்

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா...



இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு,கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்.. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர்

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க...




பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நிறைய உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த உணவுகளைப் பார்த்தாலும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இது கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய உணர்வுகள் தான். சிலருக்கு உணவுகளை சாப்பிடவே தோன்றாது. ஆனால் ஒருசில உணவுகளைப் பார்த்தால், அதன் மீது ஆசை அதிகரிக்கும். அப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுவார்கள். உதாரணமாக, நிறைய கர்ப்பிணிகள் இனிப்புகள், காரமான உணவுகள் அல்லது ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட விரும்புவார்கள்.

அதிலும் குறிப்பாக ஜங்க் உணவுகளை தான் பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவர். ஆனால் அவற்றை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்கக வேண்டும். ஏனெனில் அவை உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அவை சாதாரணமாகவே ஆரோக்கியமற்றது, கர்ப்பிணிகளுக்கு சொல்லவா

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்


‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது  புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன.  எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும்

கூந்தலை நேராக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க..


பண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

ஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது. அதிலும் சுருட்டை முடி இருப்பவர்கள் தான், இந்த மாதிரியான கூந்தலை நேராக்கும் சிகிச்சைகள் பலவற்றை மேற்கொள்வார்கள். இதற்கு காரணம் சுருட்டை முடி இருப்பவர்களுக்கு கூந்தலை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் வெளியே எங்கேனும் செல்ல வேண்டுமெனில், தலை சீவுவதற்காகவே ஒரு மணிநேரத்தை செலவிட வேண்டும். இதற்காகத் தான் அவர்கள் கூந்தலை

மஞ்சள், நீரிழிவை கட்டுப்படுத்தும் அமெரிக்க ஆய்வில் தகவ


மஞ்சளை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்' என, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தை சேர்ந்த டாக்டர் சரஸ்வதி சுகுமார் கூறியதாவது: இந்தியாவில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது. மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக, இருபது ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், மூட்டுவலியை குறைப்பதில், மஞ்சள் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், புற்றுநோய், நீரிழிவு நோய், சரும நோய் போன்றவற்றிலிருந்தும் மனிதர்களை காப்பதில், மஞ்சள் முக்கியப்பங்கு வகிக்கிறது. புற்றுநோயால்

சவுத் ஆப்ரிக்காவில் முதலைகள் ஊருக்குள் புகுந்தது


சவுத் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு முதலை பண்ணை ஒன்றில் இருந்து 15,000 முதலைகள் ஊருக்குள் புகுந்தன. இதனை பிடிக்க அந்நாட்டு ராணுவ உதவி நாடப்பட்டுள்ளது. சவுத் ஆப்ரிக்காவின் வட பகுதியில் அமைத்துள்ளது ரக்வேநா முதலை பண்ணை. இந்த முதலை பண்ணையில் பல ஆயிரம் முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு அண்மையில் பெய்த புயல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரக்வேநா முதலை பண்ணையில் உள்ள அவசர கதவை திறக்கும் கட்டாயம் ஏற்ப்பட்டது.
இதனால் முதலை பண்ணையில் உள்ள வடிகால் வழியாக 15,000 முதலைகள் ஆற்றுக்குள் புகுந்துள்ளன. இதுவரை சுமார் 8000 முதலைகள் வரை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கும் மேற்ப்பட்ட முதலைகளை பிடிக்க அந்நாட்டு ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்கள் உதவி நாடப்பட்டுள்ளது. பல முதலைகளை ரக்வேநா முதலை பண்ணை இருக்கும் இடத்தில இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடங்களில் பிடித்துள்ளனர். இந்த முதலைகள் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது , வேறு எங்கெல்லாம் மறைந்து உள்ளது என்பதை கண்டறிய நீண்ட கால அவகாசம் எடுக்கும் என தெரிகிறது. இதனால் நதிகரை ஓர கிராம மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்


தென் ஆப்பிரிக்காவில் உள்ள ரக்வேனா முதலைகள் பண்ணையிலிருந்து 15,000 முதலைகள் தப்பித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கி‌ல் சிக்கி முதலைகள் உயிரிழப்பதை தவிர்க்கும் பொருட்டு, ரக்வேனா முதலை பண்ணையின் உரிமையாளர்கள், சுமார் 15000 முதலைகள் அடைக்க‌ப்ப‌ட்டிரு‌ந்த தடத்தின் கதவை திறந்துவிட்டனர்.

வெளியேறிய முதலைகள் வெள்ளத்தில் அங்காங்கே அடித்து செல்லப்பட்டு 120 கி.மீ தூரத்து‌க்கு செ‌ன்றதாக பண்ணையின் உரிமையாளர் செங் லாங்க்மன் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் ஹங்வனி முலவ்ட்சி கூறுகையில், பண்ணையிலிருந்து வெளியேறிய முதலைகளை பிடிக்க ராணுவ‌த்த‌ி‌ன் உதவியை நாடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...