Mar 22, 2013

எல்லா நோய்களுக்கும் தண்ணீர் சிறந்த மருந்து!


மாற்றம் செய்த நேரம்:12/12/2012

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.

இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது

அதிக தண்ணீர் அதிக ஆயுள்

Smith says the university health adviser:'' When one patarrampat increases their unarccittanmai. If you can reduce the amount of   exercise and mental tension silent.

மாற்றம் செய்த நேரம்:1/22/2013

அமெரிக்கா பல்கலைக்கழக உடல் நல ஆலோசகர் ஸ்மித் கூறுகிறார்: ‘‘ஒருவர் பதற்றம்படும்போது அவர்களது உணர்ச்சித்தன்மை அதிகரிக்கிறது.  இவர்கள் உடற்பயிற்சி செய்தால் மனம் அமைதிப்பட்டு பதட்டத்தின் அளவை குறைக்க முடிகிறது.

ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே  பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர்  அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன்

உலகை வாழ வைக்கும் அமிர்தம், தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்

Today is World Water Day. 'The world can be dry,' Come to the New Century. 'Water is the elikcar of Life' is. I mean, the world, the world will live lives like Amirtham water

மாற்றம் செய்த நேரம்:3/22/2013 

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. 

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில்

பூமியைத் தாக்கவரும் அனைத்து விண்கற்களையும் அடையாளம் காண முடியாது - நாசா



நமது பூமியைச் சுற்றி அதன் அருகே உள்ள விண்கற்களில் 95% வீதமானவை நம்முலகில் மனித இனத்தைப் பூண்டோடு அழித்திடப் போதுமானவை எனவும் இவற்றில் எதேனும் ஒன்று கூட நமக்கு உடனடி அச்சுறுத்தல் கிடையாது எனவும் நாசா தெரிவித்துள்ளது.
மேலும் நாசா இயக்குனரான சார்லஸ் போல்டேனிடம் நியூயோர்க் நகரை நோக்கி மிகப் பெரிய எரிகல் வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது என்று கேட்கப் பட்டது.
இதற்கு அவர் நகைச்சுவையாகப் பதில் சொன்னார். அதாவது எரிகல்லின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என முதலில் கணித்த பின் அதைத் திசை திருப்ப அல்லது சிறு சிறு துகள்களாக வெடிக்க வைக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் கடவுளைப் பிரார்த்திக்க

Mar 21, 2013

பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்


பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள் குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால்,வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.

மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால்,அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர்

ஜின்ஜெங் (ginseng) வேரின் அற்புதங்களை உணர்ந்த ஜரோப்பியர்கள்

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.
ginseng root is one of nature's greatest giftஇந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.
காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

Mar 17, 2013

மாதுளையின் மருத்துவக் குணங்கள்:


மா
துளையின் மருத்துவக் குணங்கள்:

1 மாதுளையில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும்,சர்க்கரையும் மிகுந்து உள்ளதால் பிணியாளர்கள்,குழந்தைகள் நல்ல பலன் பெறுவர்.வயிற்றுப் புண்,வயிற்று வலி,வயிற்று உளைச்சல்,ஜீரணக் கோளாறு,பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு.
2 மனதிற்கும்,உடலுக்கும் பூரிப்பும்,மகிழ்ச்சியும்,புத்துணர்வும் தரும் சாறு.
3 குளிர்ச்சியான பானம்,உடல் சூடு,மூலம்,கருப்பை சார்ந்த பிணிகள் நீங்கும்.இதயம் வலிமை அடையும்.
4 வயிறு உப்புசம்,காய்ச்சல்,மலேரியா,அம்மை கண்ட காலத்தில் இது நல்ல மருந்தாக உள்ளது

ஆடாதோடை

Photo: ஆடாதோடை
1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

5) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.ஆடாதோடை
1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப்

பிரண்டையின் மருத்துவ குணங்கள்





உடல் தேற
...................
சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமல் நீங்க
..............................................
வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி

பௌர்ணமியே வராத மாதமும் உண்டு


நமது உலகத்தில் பல்வேறு அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. அவற்றை நாம் தெரிந்து கொண்டால், நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் இருக்கும் போது துணுக்காக சொல்லி உடன் இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்த பயன்படும். எனவே இதுபோன்ற துணுக்குகளைப் படிக்க எப்போதுமே ஆர்வம் அதிகம்.
சரி உங்களது ஆர்வத்தை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். இதோ உங்களுக்காக சில துணுக்குகள்..
மில்லியன் ஸீரோக்களைக் கொண்ட எண்ணை கூகுள் என்று அழைப்பார்கள். இப்போது புரிகிறதா.. கூகுளின் கீழ் உள்ள G000000000GLEன் அர்த்தம்.
டைட்டானிக் கப்பலை கட்டி முடிக்க வெறும் 7 மில்லியன் டாலர்களே செலவானது. ஆனால், அது பற்றி படம் எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது.
யாராவது மூன்று பேர் ஒன்றாக அமர்ந்திருந்தால் அவர்களை மூன்று குரங்குகளுடன் ஒப்பிடுவோம். அந்த குரங்குகளின் பெயர் என்ன தெரியுமா.. மிசரு (தீயவற்றை பேசாதே), மிகசரு (தீயவற்றை கேட்காதே), மசரு (தீயவற்ற

Mar 16, 2013

டென்மார்க்கில் பனிப்புயல் வீச ஆயத்தம்


March 16, 2013
டென்மார்க்கில் வரும் திங்கள், செவ்வாய் இருதினங்களும் பனிப்புயல் வீசப்போகிறது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திங்கள்தானே பார்க்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு விட்டேனா பார் என்று இன்றே பாறாத்தை ஆய்ச்சியின் மெல்லிய இடியப்ப கந்துபோல பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது.
நாளை ஞாயிறும் பனிப் பொழிவு தொடர்ந்தாலும் திங்கள்தான் அது கனவேகமடையும், ஆஸ்திரிய பகுதியில் இருந்து வரும் குளிர்காற்று டென்மார்க்கிற்குள் நுழைந்து ஆட்டம் போடப்போகிறது.
குளிர்காற்றும், பனியும் இணைந்தே வீசுவதால் இதன் பாதிப்பு மோசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு யூலன்ட் பகுதியில் திங்கள் முற்பகல் ஆரம்பித்து, புதன் மதியம் முடிவடையும், யூலன்ட் பகுதியில் திங்கள் பிற்பகல் ஆரம்பித்து புதன் பிற்பகல் முடிவடையும்.
சேலன்ட் பகுதியில் திங்கள் பிற்பகல் தொடங்கி புதன் இரவுவரையும் நீடிப்புப் பெறும்.
அதிகமாக நாடு முழுவதும் இதன் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...