Mar 23, 2013


இஸ்லாமிய மருத்துவம்...



1. பேரிச்சம்பழம்

செய்வினை – விஷம் குணமாக!
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோஎந்தவிதமான விஷமோ, ய்வினையா அவரை அண்டாது.
வாய்வுத் தொல்லை நீங்க!
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.

2. ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம்40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்.

வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால்மறந்து போனது நீங்கி இரத்த

ஓட்டம் சீராகி விடும்.

3. பேரிக்காய்

இதயம் வலுவடைய
“அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

அழகான குழந்தை பிறக்க
“கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம்,இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.


4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.
சர்க்கரை வியாதி நீங்கிட
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும்.

மாரடைப்பிற்கு வழிகோலும் புத்துணர்ச்சிப் பானங்கள் - ஆய்வில் வெளியானது அதிர்ச்சித் தகவல்!

உடலரிப்பை ஏற்படுத்தும் படைகளை இலகுவாக நீக்கும் நெட்டிலிங்கம்!

News Service வெயில் காலத்தில் உடலில் அங்கங்கு அரிக்க ஆரம்பிக்கும். சிலர் பேசிக்கொண்டே அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு, கணுக்கால் என பல இடங்களை மாற்றி, மாற்றி சொறிந்துக் கொண்டே இருப்பார்கள். பொதுவிடங்களில் இது போல் சொறிவதால் பிறரின் கேலிக்கும், ஏளனத்துக்கும் ஆளாக வேண்டிவரும். சிலர் வெளியிடங்களில் அரிப்பு ஏற்பட்டால் சொறியாமல், கஷ்டப்பட்டு அரிப்பை அடக்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்தவுடன் நன்கு சொறிந்து தள்ளிவிடுவார்கள். இதனால் அரிப்புள்ள இடங்களெல்லாம் இரத்தக் களறியாக மாறிவிடும். பின் எரிச்சல் அதிகரித்து, வலி தாங்காமல் ஏதாவது எண்ணெயை தடவி அரிப்பை தணித்துக்கொள்வார்கள். வெயில்காலத்தில் மட்டும் இந்த அரிப்பு அதிகமாவது ஏன் தெரியுமா? நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே அரிப்புக்கு காரணமாகும்.
  
பூஞ்சைக் கிருமிகளுக்கு ஈரம் மிகவும் பிடித்த விடயம். அதுவும் துர்நாற்றத்துடன் தோலின்

சிறுநீரகக் கற்களால் அவதிப்படுகின்றீர்களா? எலுமிச்சை இருக்க கவலை எதற்கு?

News Service இன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும்.
  
அந்த பிரச்சனையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவது தான். இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்ல. ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் விரைவில்...அறிமுகமாகின்றது #

News Service பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய இரண்டும் இணையத்தின் பிரிக்கமுடியாத அங்கங்களாக மாறிவிட்டன. தகவல் பரிமாற்றத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இரு ஜாம்பவான்களாக இவற்றைக் குறிப்பிடுவதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்கப் போவது இல்லை. குறிப்பாக அரபு வசந்தத்தில் இவற்றின் பங்குகள் அளப்பரியன. மத்திய கிழக்கில் சில நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவை பெருந் துணையாக இருந்தன. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இரண்டும் பொதுவாக சமூக வலையமைப்புகள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டாலும், மேலெழுந்தவாரியாக ஒரே மாதிரியானதென குறிப்பிடப்பட்டாலும் இவை இரண்டிற்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. இவை இரண்டினதும் நோக்கம் என்னவோ தகவல் பரிமாற்றம், இணையத்தோடு இணைந்திருத்தல் என தெரிவிக்கப்பட்டாலும்

முக அழகு - பயன்தரும் எளிய குறிப்புக்கள்..

MS Powerpoint - இல் படங்களை விரும்பிய கோணங்களில் மாற்றியமைப்பதற்கு...

News Serviceபவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில், அதில் உள்ள டெக்ஸ்ட்டுடன் சில வேளைகளில் படங்கள் மற்றும் உருவங்களை அமைக் கிறோம். இந்த ஆப்ஜெக்ட்களை, நம் விருப்பத்திற்கேற்ப சாய்வான கோணங்களில் வைக்க விரும்புவோம். அப்போது அவை நாம் எதிர்பார்க்கும் வகையில் சரியாக அமையாது. இதற்கென என்ன நடவடிக்கை எடுத்தாலும், சிறிய அளவிலாவது அது மாறுதலாகக் காட்சி அளிக்கும். ஆனால், சில வழிகளை மேற்கொண்டால், ஆப்ஜெக்டுகள் அனைத்தும் நாம் விரும்பிய வழிகளில், கோணங்களில் அவை அமையும். அவற்றை இங்கு காண்போம்.
  
1. மாறுதலான வகையில் தோற்றமளிக்க விரும்பும் ஆப்ஜெக்டை முதலில் தேர்ந்தெடுக் கவும்.

Mar 22, 2013

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்

There are numerous benefits to everyone in attippalat. Vitamin A, high in fiber, these nutrients are abundant attippalat.
அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. 

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். 

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். 

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்?


What explains the Special Nutrition Ambika banana Shekhar ... '' A lot of important nutrients, including Banana fruit types. Tamil culture   is one of three fruilts. Food suitable for all seasons. banana in vitamin C, potassium, fiber, nutrients are included.
வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல் நியூட்ரிஷியன் அம்பிகா சேகர் விளக்குகிறார்...   ‘‘நிறைய சத்துகளையும் உள்ளடக்கிய பழ வகைகளில்  வாழைப்பழம் முக்கியமானது. தமிழ்ப் பண்பாடு சொல்லும் முக்கனிகளில் ஒன்று. எல்லா பருவங்களிலும் சாப்பிடுவதற்கு ஏற்றது. வாழைப்பழத்தில்  வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. 

வளரும் குழந்தைகளுக்கு இச்சத்துகள் அவசியம். வாழைப்பழம் வளர்சிதை மாற்றம் குறையாமல் பார்த்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும்  வைத்திருக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள், ஃபிட்னஸ் பிரியர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. எனர்ஜி லெவலை  எப்போதும் சரியாக வைத்திருக்கும் குணம் வாழைக்கு உண்டு. 

செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பெண்களுக்கு நல்லது. இதய நோயாளிகளும் வாழைப்பழத்தை அளவாக சாப்பிடலாம்.  வாழையில் சர்க்கரை அதிகம்

உடல் நலம் தரும் சமையலறை மருந்து

100 grams of coriander seeds, known as coriander, try removing the nerve to the skin up to 100 grams (Chuck always have to use nerve removed) and 1 tsp cardamom powder 100 g varuttu slight amount of treble. As tikaksan daily coffee making, milk or honey mixed in a drink.

தனியா எனப்படும் கொத்துமல்லி விதை 100 கிராம், தோல் சீவி நரம்பு நீக்கிய சுக்கு 100 கிராம் (எப்போதும் சுக்கை நரம்பு நீக்கி உபயோகிக்க வேண்டும்) ஏலக்காய் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து. தினசரி காபி டிகாக்ஷன் போல் தயாரித்து, பால் அல்லது தேனில் கலந்து பருகவும். 

மணத்தக்காளி வற்றல்: 

மணத்தக்காளி வற்றல் வாய்ப்புண் ரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் மணத்தக்காளி வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். காரக்குழம்பு வைக்கிறபோது அதிலும் மணத்தக்காளி வற்றலைச் சேர்த்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி வற்றலை விட மணத்தக்காளிக் கீரையை, சிறிதளவு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும். 

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக இருந்தால் சுண்டைக்காயை வறுத்து,  உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவும் சாப்பிடலாம். வறுத்து எடுத்த சுண்டைக்காயைப் பொடி செய்து சாம்பார் ரசத்திலோ பொரியலிலோ கூட சேர்த்த்து விடலாம். குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள். பொதுவாக வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது. 

வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அமீபியாசிஸ் காரணமாக வரும் வயிற்றுப் போக்குக்கு சுண்டைக்காய் வற்றல் மிகவும் நல்லது. 

மாரடைப்பை தடுக்கும் திராட்சை!



இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்  ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற  வேதிப்பொருள் உதவுகிறது. ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான்  பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...