Apr 11, 2013

இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி அசத்தும் அமெரிக்க சிறுவன்!

american teenagerஅமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது சிறுவன், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறான். நியூயார்க்கைச் சேர்ந்த திமோதி டோனருக்கு, சிறுவயது முதலே பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் இருந்தது.
இதற்காக அவர் பெரிய பயிற்சி நிறுவனங்கள் எதையும் நாடவில்லை. மாறாக, அன்றாடம் தான் தொடர்பு கொள்ளும் நபர்கள் மூலமாகவே தனது மொழிப்பயிற்சியை வளர்த்திருக்கிறார். உள்ளூர் டாக்சி டிரைவர்களுடன் அடிக்கடி பேசுவது, ஓட்டல்களில் சந்திக்கும் நபர்களுடன் தொடர்ந்து பேசிப் பழகுதல் மற்றும் இ-மெயில் மூலம் உலகம் முழுவதிலும் உள்ளவர்களுடன் பழகி, அவர்களின் மொழியைப் பற்றி அறிந்துள்ளார்.
இவ்வாறு இந்தி, அரபு, குரோஷியன், டச்சு, ஆங்கிலம், பார்சி, பிரெஞ்சு, ஜெர்மன், ஹவுசா, ஹீப்ரு, இந்தோனேசியன், இஷிஹோசா, (தென் ஆப்பிரிக்க ஆட்சி மொழி), இத்தாலி, மாண்டரியன், ஒஜிப்வே (அமெரிக்க உள்ளூர் மொழி), பெர்சியன், பாஷ்டோ, ரஷ்யன், ஸ்பானிஷ், ஸ்வாஹிலி, துருக்கிஷ், வோலோப், யித்திஷ் என 23 மொழிகளையும் கற்றுத் தேர்ந்துள்ளான்.
அதன்பின்னர் டோனர் தனது மொழித் திறமையை வீடியோ பதிவுகளாக யுடியூப் மூலம் வெளியிட ஆரம்பித்ததால், அவரது பன்மொழித் திறமை உலகிற்கு தெரியவந்தது. இதனைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள், டோனரின் திறமையை பாராட்டி, ஊக்கம் அளித்துள்ளனர். அவற்றில் ஒரு வீடியோவில் 20 மொழிகளில் தொடர்ந்து பேசியதன் மூலம் டோனர் மிகவும் பிரபலம் ஆகியுள்ளான்.

மருத்துவரை நாட உதவும் இணையதளம்



இணையத்தில், நம் உடல் நிலை, அதற்கான மருத்துவம் குறித்த பல தளங்கள் இயங்குகின்றன. உடல் நலத்தில் பிரச்னை ஏற்படுகையில், மருத்துவர் ஒருவரை நாடி, சரியான முறையில் சிகிச்சை பெறுவதுதான் நல்லது. 

இருப்பினும், நம் பிரச்னை மட்டுமின்றி, உடல்நலம் குறித்த பொதுவான தகவல்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் இயங்கும் தளங்களில்,www.askthedoctor.com/ என்ற முகவரியில் இயங்கும் ஒரு தளம் வித்தியாசமான முறையில் தகவல்களைத் தந்து நம் சந்தேகங்களையும் தீர்க்கிறது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி, மருத்துவர்களும் இந்த தளம் சென்று, நோய், அதன் தன்மை, அதற்கான மருத்துவம் குறித்துத் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, இந்த தளத்தில் தொடர்பு கொண்டுள்ள மருத்துவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். 
ஏற்கனவே இது போன்று கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு அளிக்கப்பட்ட பதில்களும் இந்த தளத்தில் கிடைப்பதால், சிரமமின்றி எளிதாகவும், விரைவாகவும் தகவல்களை அறியலாம். புதியதாக அறிய வேண்டும் எனில், இந்த தளத்தின் மூலம், மருத்துவ வல்லுநர் ஒருவரைத்

Apr 10, 2013

உணவுகளை செரிக்கும் பீட்ரூட்!

சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன.

பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன.
இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக்

மருத்துவரின் காதலி கடுக்காய்!

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது ஒரு துளி அமிர்தம் சிந்தியது. அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணங்கள் தெரிவிக்கின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு

ஆஸ்துமா தீர்க்கும் முள்ளங்கி

நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.
முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.
முள்ளங்கியின் நறுமணம்:
முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது

Apr 8, 2013

பொதுஅறிவு:- *நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது
*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் 
தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.


via - சுபா ஆனந்தி

மார்கரெட் தாட்சருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு

மார்கரெட் தாட்சருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குஇங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் (வயது 87) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

வழக்கமான தலைவர்களுக்கு அரசு மரியாதையுடன் நடக்கும் இறுதிச்சடங்கை விட தாட்சரின் இறுதிச்சடங்கு சற்று வித்தியாசமாக நடைபெற உள்ளது. அதாவது, ராஜகுடும்பத்தினர் மற்றும் குறிப்பிடத்தக்க முக்கிய பிரமுகர்களுக்கான ராஜமரியாதை அவருக்கு வழங்கப்படுகிறது. செயின்ட் பால் தேவாலயத்தில் இச்சடங்குகள் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து வேறு இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று, ராஜகுடும்பம் அல்லாத வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதையுடனான இறுதிச்சடங்கு, கடைசியாக 1965ல் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.


ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல்

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள்



பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள்

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...