May 4, 2013

மனிதனின் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி கண்டுபிடிப்பு!


News Serviceமனிதனின் மூளையில் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஒருவர் முதுமை அடைவதைக் கடுப்படுத்தும் பகுதியை தாம் கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.எலிகளில் செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ''நேச்சர்'' என்னும் சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர். வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது.
   ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் பெருமளவு சம்பந்தப்பட்டிருகிறது என்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. எலிகளின் மூளையின் இந்தப் பகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்தது.
வயதாகச் செய்யும் இரசாயனம்
அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரசாயனணத்தை தடுத்தால் அந்த எலி நீண்ட நாட்களுக்கு வாழ்வது கண்டறியப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான ஒரு எலி 600 முதல் 1000 நாட்கள்

கொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைநாண் கொடி, மெட்டி அணிவதன் தார்ப்பரியம் என்னவென்று தெரியுமா?

News Serviceதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
   அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல

அழகுடன் கூடிய ஆரோக்கியமான சருமத்தை தரும் வைன்!

News Serviceஒயின் ரொம்ப பிடிக்குமா? அதனால நல்லா இளமையாகவும், பொலிவோடும் இருக்குறீங்களா? இதுல எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஒயின் குடித்தாலும், சருமத்திற்கு பயன்படுத்தினாலும், நல்ல பொலிவான சருமம் கிடைக்கும் என்று ஆய்வுகள் பல நிரூபிக்கப்பட்டுள்ளன. அதுவும் ஒயின் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, இருவருக்குமே நல்ல பலனைத் தரக்கூடியது என்றும் ரிச்சாட்டு ஏ. பாக்ஸ்டர் கூறியுள்ளார். அதுவும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இளமைத் தோற்றத்தை தக்க வைக்கக் கூடியது என்றும் அவர் கூறுகிறார். குறிப்பாக ஒயினில் ரெட் ஒயின் குடித்தால், அதன் நன்மையே தனி தான். அதிலும் தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், நல்ல ஸ்ட்ராங் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு அலர்ஜி மற்றும் இயற்கையான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலத்துடன் கலந்து வினைபுரிவதால், அவை பொலிவான சருமத்தை மட்டுமின்றி, சருமத்தை நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
   இளமைத் தோற்றம்
ஒயினில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால் இருப்பதால்,

Welcome Welcome ஆபத்து மிகுந்த மூளை இரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளமையை கண்டுபிடிக்க சில வழிகள்!


News Serviceமூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவது ஒரு தொற்றுநோய் அல்ல. இது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால், வயது அதிகரிக்கும் போது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை. பரம்பரை மரபணு, கதிர்வீச்சு, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என சில காரணங்களால் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. மின் கம்பிகளுக்கு அருகே வசித்தல், அலைப்பேசிகளை அதிகமாக பயன்படுத்துவது, ஆஸ்பிரின் பயன்பாடு ஆகியவற்றுக்கும் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கும் தொடர்பு உண்டு என்று பரவலாக பேசப்பட்டாலும், அவை நிரூபிக்கப்படாத காரணங்களாகவே இருந்து வருகின்றன. மூளை ஓடு, மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அல்லது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படும் இடத்தில் இயக்கக்கோளாறு ஏற்படுவதால், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம். மேலும் வேறு சில அறிகுறிகள் கொண்டும், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறியலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகரித்த எடையால் அவதிப்படுகின்றீர்களா? இதோ உங்களுக்காகவே ஒரு இயற்கை மருந்து!


News Serviceஎடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.
   வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

பாலினால் உச்ச ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக பின்பற்றவேண்டிய சில வழிமுறைகள்!

News Serviceஉண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஏனெனில் அன்றாடம் காலையில் எழுந்ததும், முதலில் தண்ணீர் குடிக்கிறோமோ இல்லையோ பாலை, டீ அல்லது காபி போட்டு குடிக்காமல் இருக்கமாட்டோம். அந்த அளவில் பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. குறிப்பாக பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீன் மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்று. மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு ஒரு காரணம் கால்சியம் குறைபாடு என்றும் சொல்லலாம். ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் சேர்க்க வேண்டும். சிலருக்கு பால் வாசனை பிடிக்காது. பாலை கண்டாலே ஓடிவிடுவார்கள்.
   அத்தகையவர்கள் பாலை வேறு வழியிலாவது நிச்சயம் குடிக்க வேண்டும். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள். இப்போது இந்த பாலை எப்படியெல்லாம் வித்தியாசமான முறையிலும், ஆரோக்கியமானதாகவும் சாப்பிடுவது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளோம், அதைப்

அலைமுதிர்ச்சோலை:

அலைமுதிர்ச்சோலை:


COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

C - Common
O - Oriented
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and

R - Research

COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் வசித்து வரும் அவருக்கு, இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை திரையுலக பிரமுகர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பார்த்து வருகின்றனர்.

dead_body தீக்காயங்களுடன் வயோதிபரின் சடலம் மீட்பு

dead_bodyயாழ்.நல்லூர் அரசடிப் பகுதியில் தன்னைத் தானே தீ மூட்டி  எரிந்துள்ள வயோதிபர் ஒருவரை சடலமாக யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அரசடியைச் சேர்ந்த நவரட்ணம் கணேசமூர்த்தி (வயது 55) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நல்லூர் அரசடிப் பகுதியில் தன்னைத் தானே தீ மூட்டி  எரிந்துள்ள வயோதிபர் ஒருவரை சடலமாக யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அரசடியைச் சேர்ந்த நவரட்ணம் கணேசமூர்த்தி (வயது 55) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கினிநாள் இன்று முதல் ஆரம்பம்: வெப்பநிலை அதிகரிப்பு


sun heat

வருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று 4ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவடைகின்றது.
இந்த அக்கினி நாள் காலங்களில் கிரகப் பிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட நாள்கள் எனவும், நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் (தானிய வகை) நாற்று நடும் வேலைகளை செய்யக் கூடாது எனவும், நிழல் தரு விருட்சங்களை கத்தி கொண்டு வெட்டி அழிக்கக் கூடாது என எமது இந்து மத சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருப்பதுடன், இயலுமான அளவு மரங்களை போஷிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கின்றன.
மேலும், ஆசியப் பிராந்தியத்தின் வெப்ப வலைய பகுதிகளில் சூரியனின் வெப்பம் மிக கடுமையான அளவு இருக்கும். எமது அண்டை நாடான இந்தியாவில் இக் காலப் பகுதியில் நிலவும் கூடுதலான வெப்பத்தினால் பலர் மரணிப்பதும் சில பிரதேச பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதும் உண்டு.
இந்த அக்கினி நாள் காலப் பகுதியிலேயே கிழக்கில் கண்ணகி அம்மன் சடங்குகள் இடம் பெறுவது வழக்கம், அம்மன் சடங்குகள் (வைகாசி பூரணை) இம் மாதம் 24ஆம் திகதி அக்கினி நாளின் அகோர வெப்பம் குறைவடையும் என்பது எமது பிரதேச மக்களின் நம்பிக்கையாகவும் இருந்து வருகின்றன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...