May 8, 2013

முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது?


முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது?
முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர் களையும் இப்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது
. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது!

* தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?

“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம்,

பொதிகை மலை அதிசயங்கள்

Pothigai Malai (hills)

வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென்கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசுவதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து அது புறப்படுவதாகத்தான் பேச்சு.

‘சூரியனோடும், தமிழோடும் தோன்றிய மலை‘ என வில்லிபுத்தூரார் பாடியது தற்புகழ்ச்சியோ, உயர்வு நவிற்சியோ அல்ல. பூமி தோன்றிய போதே தோன்றிய போதே பொதிகையும் இருந்திருக்கலாம் என நிலவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மலையில் வாழும் மனித குல முன்னோர்களான மந்திகளை பார்த்த உயிரியல் வல்லுநர்களும் இதை ஒத்துக்கொள்கின்றனர்.
உலகில் பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த 18 மலைத்தொடர்களில் அஸ்ஸாம் முதல் சிக்கிம் வரை உள்ள வடகிழக்கு மலைத்தொடரும், குஜராத் முதல் குமரி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையும் அடங்கும். ஆனால், ஆன்மீக சிறப்பும் மூலிகை செழிப்பும் பொதிகையின் புகழை பல அடி உயர்த்தியுள்ளன.

தமிழ் தோன்றிய இடமாகக் கருதப்படுவதால் பொதிகை தமிழ் கூறும் நல்லுலகின் தனிக்கவனம் பெறுகிறது. அருவிகள் ஆர்த்தெழும் திருக்குற்றாலம் அடங்கலாக பொதிகை மலைத்தொடர் அகன்று அமைந்திருக்கிறது. இத்தொடரின் முத்தாய்ப்பாக அகத்தியர் தங்கிய ஏக பொதிகை இலங்குகிறது. குற்றாலம் தேனருவிக்கு

May 7, 2013

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு.

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியா ன மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந் ததி என்ற பெயருக்கு கண வனின் எண்ணம் அறி ந்து கற்பு நெறியுடன் வாழ்பவ ள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்ச பூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திரு மண பந்தத்தில் இணை யும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன் னையும் தன் உடலையு ம் காமக்கண்ணுடன் பிற ர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர் ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத் திக் கொள்வதுடன், தன் னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்க ரத்தை கணவனுக்கு முழுமையா கக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகி றாள். பெண்ணின் கழுத்தில் மங் கல நாண் சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுட னும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அத ன் சாட்சியாக உன் கா லில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகி ன்றான். மணப் பெண் ணானவள், தன் கழுத் தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந் ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின் றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்த ப்படுத்திக்கொண்டு ஆணை யும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்து க்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரி யாகத் திகழ்கின்றாள்

100 மில்லியன் விற்று தீர்த்த WINDOWS 8

MICROSOFT நிறுவனத்தின் அண்மைய பதிப்பான WINDOWS 8 இயங்குதளமானது 100 மில்லியனிற்கும் மேற்பட்ட பதிப்புகளுக்கான உரிமங்களை விற்றுள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பாக MICROSOFT நிறுவனத்தின் WINDOWS விற்பனைத்துறைக்கு பொறுப்பான  Tami Reller தெரிவிக்கையில் "பொது விற்பனைக்காக  WINDOWS 8 அறிமுகப்படுத்தப்பட்ட தினமான சென்ற வருடத்தின் OCTOBER 26 இலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் 100 மில்லியனிற்கும் மேற்பட்ட பதிப்புகளை விற்பனை செய்துள்ளோம். இது எமது கடந்த பதிப்பான WINDOWS 7 இன் முதல் ஆறுமாத விற்பனையினை ஒத்திருக்கிறது." என்றார்.

மேலும் MICROSOFT நிறுவனம் WINDOWS 8 இற்கான UPDATE ஆன WINDOWS
BLUE இனை  இந்த வருடம் வெளியிடும் என நம்பப்படுகிறது . இது WINDOWS 8 இல் இல்லாத WINDOWS க்கே உரிய START BUTTON ஐ கொண்டிருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

May 5, 2013

சரித்திர மாவீரன் நெப்போலியன்!


தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும்.

எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.

வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.

ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு

May 4, 2013

ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டிவரும்

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால்கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'
களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும்"கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட"கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்தவெப்பம் காரணமாக,"கப்'பிலிருக்கு ம் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது .
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடிஅல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன . ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டிவரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
உங்கள் விழிப்புணர்வுக் காக!

மனிதனின் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி கண்டுபிடிப்பு!


News Serviceமனிதனின் மூளையில் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஒருவர் முதுமை அடைவதைக் கடுப்படுத்தும் பகுதியை தாம் கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.எலிகளில் செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ''நேச்சர்'' என்னும் சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர். வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது.
   ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் பெருமளவு சம்பந்தப்பட்டிருகிறது என்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. எலிகளின் மூளையின் இந்தப் பகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்தது.
வயதாகச் செய்யும் இரசாயனம்
அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரசாயனணத்தை தடுத்தால் அந்த எலி நீண்ட நாட்களுக்கு வாழ்வது கண்டறியப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான ஒரு எலி 600 முதல் 1000 நாட்கள்

கொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைநாண் கொடி, மெட்டி அணிவதன் தார்ப்பரியம் என்னவென்று தெரியுமா?

News Serviceதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
   அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல

அழகுடன் கூடிய ஆரோக்கியமான சருமத்தை தரும் வைன்!

News Serviceஒயின் ரொம்ப பிடிக்குமா? அதனால நல்லா இளமையாகவும், பொலிவோடும் இருக்குறீங்களா? இதுல எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஒயின் குடித்தாலும், சருமத்திற்கு பயன்படுத்தினாலும், நல்ல பொலிவான சருமம் கிடைக்கும் என்று ஆய்வுகள் பல நிரூபிக்கப்பட்டுள்ளன. அதுவும் ஒயின் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, இருவருக்குமே நல்ல பலனைத் தரக்கூடியது என்றும் ரிச்சாட்டு ஏ. பாக்ஸ்டர் கூறியுள்ளார். அதுவும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இளமைத் தோற்றத்தை தக்க வைக்கக் கூடியது என்றும் அவர் கூறுகிறார். குறிப்பாக ஒயினில் ரெட் ஒயின் குடித்தால், அதன் நன்மையே தனி தான். அதிலும் தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், நல்ல ஸ்ட்ராங் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு அலர்ஜி மற்றும் இயற்கையான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலத்துடன் கலந்து வினைபுரிவதால், அவை பொலிவான சருமத்தை மட்டுமின்றி, சருமத்தை நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
   இளமைத் தோற்றம்
ஒயினில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால் இருப்பதால்,

Welcome Welcome ஆபத்து மிகுந்த மூளை இரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளமையை கண்டுபிடிக்க சில வழிகள்!


News Serviceமூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவது ஒரு தொற்றுநோய் அல்ல. இது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால், வயது அதிகரிக்கும் போது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை. பரம்பரை மரபணு, கதிர்வீச்சு, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என சில காரணங்களால் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. மின் கம்பிகளுக்கு அருகே வசித்தல், அலைப்பேசிகளை அதிகமாக பயன்படுத்துவது, ஆஸ்பிரின் பயன்பாடு ஆகியவற்றுக்கும் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கும் தொடர்பு உண்டு என்று பரவலாக பேசப்பட்டாலும், அவை நிரூபிக்கப்படாத காரணங்களாகவே இருந்து வருகின்றன. மூளை ஓடு, மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அல்லது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படும் இடத்தில் இயக்கக்கோளாறு ஏற்படுவதால், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம். மேலும் வேறு சில அறிகுறிகள் கொண்டும், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறியலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகரித்த எடையால் அவதிப்படுகின்றீர்களா? இதோ உங்களுக்காகவே ஒரு இயற்கை மருந்து!


News Serviceஎடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.
   வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...