May 27, 2013

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு புழுங்கல் அரிசியே சாலச்சிறந்தது!

News Service பச்சரிசி உணவை சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை உடனே ரத்தத்தில் கலந்து விடும். இதனால் தான் உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். வளரும் குழந்தைகளுக்கு பச்சரி உணவு தான் ஏற்றது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதை உண்ணக் கூடாது. புழுங்கல் அரிசியை உணவாக கொண்டால் அதில் உள்ள சர்க்கரை மெருவாகத் தான் ரத்தத்தில் கலக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் புழுங்கல் அரிசியை உண்ணலாம். இந்த அரிசி சற்று பழுப்பு நிறமாக இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. இந்த நிறம் தான் இந்த அரிசியின் சிறப்புக்கே காரணம். நெல்லை அவிக்கும் போது தவிட்டில் உள்ள உயிர்ச்சத்துகள் அரிசியில் இறங்கும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கூடுதாலக் கிடைக்கின்றன.
  
முன்பெல்லாம் நெல்லை அவிக்கும் முன் நீரில் கொட்டி நன்றாக ஊற வைப்பார்கள். அதன் பின்பு ஊறிய நெல்லை அவிக்கும் பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைப்பார்கள். இப்போதெல்லாம் நெல்லை நேரடியாக நீராவியில் வேக வைக்கும் முறை வந்து விட்டது. அதனால் ஊற வைக்கும் போது வீணாகும் உயிர்ச்சத்து. இப்போது நீராவியில் வேக வைப்பதால் முழுவதுமாக கிடைக்கின்றன, இந்த முறையில் இன்னும் கூடுதலாக உயிர்ச்சத்துக்கள் புழுங்கல் அரிசிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் தான் உடலுழைப்பு அதிகம் உள்ளவர்கள் புழுங்கல் அரிசியையும், உடலுழைப்பும் குறைவானவர்கள் பச்சரிசியும் சாப்பிடும் முறையை குறைவானவர்கள் வகுத்தார்கள். சர்க்கரை நோயளிகள் பச்சரி சாப்பிடுவதை விட புழுங்கல் அரிசி சாப்பிடுவது மேலானது

பெண்கள் எதிர்கொள்ளும் உடற்பிரச்சினைகளும் அவற்றிற்கான சில தீர்வுகளும்!

News Service பெண்கள் வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழவழப்பான சருமம் எண்ணெய் நிறைந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக்கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிகமாய் வளர்கிறது. ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை கூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்குள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறுகின்றன. சரியாக குளிப்பதில்லையோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் உரசும் போது வலியும், அசவுகரியமும் ஏற்படுகிறது.
  
இதோடு கூட, மாதவிடாய் சுழற்சியிலும் கோளாறு ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு மாதவிடாயே ஏற்படாமல், திடீரென அளவுக்கு அதிகமாய் உதிரப் போக்கு ஏற்படும் நிலை உருவாகும். அடி வயிற்றில் கடுமையான வலி, விட்டு விட்டு ஏற்படும். தொட்டால், இன்னும் அதிக வலி ஏற்படும். 14 முதல் 40 வயதுக்குட்பட்ட, பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. கர்ப்பப் பை கட்டியால் அவதிப்படுகின்றனர். கட்டி உள்ளவர்களின் கருப்பையில் உள்ள முட்டைகள், போதுமான வளர்ச்சியடைய வழியில்லாமல் போவதால், முதிர்ச்சியும் அடைவதில்லை. இதனால், மாதவிடாயும் ஏற்படுவதில்லை.
முட்டை வளர்ந்து, வெளிவந்தால் தான், குழந்தை பிறக்க வழி உண்டாகும். முட்டை முதிர்வடையவில்லை எனில், மகப்பேறுக்கான வாய்ப்பே இல்லாமல் போகும். இதனால், பயந்து போகும் பெண்ணின் பெற்றோர் மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெறாமல், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், மாதவிடாய் சீராகும்; ஆண் ஹார்மோன்கள் அளவு குறையும். முகத்தில் பருக்களும் குறையலாம்; ஆனால், மகப்பேறு தவிர்க்கப்படும். மாத்திரையை நிறுத்தி விட்டால், மீண்டும் பிரச்னைகள் முளைக்கும்.
அதிக உடல் எடையில் 10 சதவீதத்தை குறைத்தாலே, கர்ப்பப் பையில் கட்டி உள்ளவர்களின் மாதவிடாய் பிரச்னை சீராகும். கர்ப்பப் பை கட்டி உள்ளவர்கள், மற்றவர்களை விட, குறைவான அளவு உணவே உண்ண வேண்டும். மற்றவர்கள் உதவி இன்றி நடப்பது, மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது, ஒரு மணி நேர நடைபயிற்சி மேற்கொள்வது ஆகியவை, பருவமடைந்த பெண்களுக்கு, உடல் எடையை சீராக்க உதவும். மேலே சொன்ன பிரச்னைகளிலிருந்து வெளிவர உதவும்.

பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

News Service பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுவும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது.
  
இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. சரி, இப்போது முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
புற்றுநோய்
முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அல்சர்
அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
நோயழற்சி பொருள்
உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.
கண்புரை
முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.
எடை குறைவு
எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
அல்சைமர் நோய்
தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற முட்டைகோஸ் சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், மூளையில் ஏற்படும் பிளேக்கை குறைக்கும்.
மலச்சிக்கல்
முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
சருமம்
முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
தசைப் பிடிப்புகள்
முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

தோலை அழகாகவும், சுருக்கமின்றியும் வைத்திருக்க உதவும் நலுங்குமாவு பாசிப்பயறு!

News Service அழகிய தோலுக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. தோல் அழகாக வைத்திருப்பது மட்டுமின்றி தோலில் சுருக்கமில்லாமல், வறட்சியில்லாமல் வைத்திருப்பது மிகவும் கடினம். சுற்றுப்புற சூழலில் வெப்பமாற்றத்திற்கு ஏற்றவாறு நம் தோலும் மாறிக்கொண்டே இருக்கும். வெயில் காலத்தில் தோல் சுருங்கி தொங்குவதும், குளிர் காலத்தில் தோல் வறண்டு வெடிப்பதும் இயற்கையே. இதற்கேற்றாற் போல் நாமும் நமது தோலை பக்குவமாக பராமரிக்காவிட்டால் தோலில் பல தொல்லைகள் உண்டாகிவிடும்.
  
தோலை சுத்தமாக வைப்பது அவசியம். ஏனெனில் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான நுண்கிருமிகள் மற்றும் சீதோஷ்ண மாற்றம், வேதிப்பொருட்களின் தாக்கம் என தோலுக்கு நேரடியாக தொல்லை தரக்கூடிய வாய்ப்புகள் ஏராளம் உண்டு. ஆகவே நாம் ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் பொழுதும் அல்லது வெளியிலிருந்து வந்த பின்பும் தோலினை

கண் பார்வையை விருத்தி செய்யும் கரட்டின் ஏனைய நன்மைகள்!

News Service காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதன் சுவையாலேயே, இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும். இத்தகைய கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அனைவருக்கும் தெரிந்தது, கண் பார்வை கூர்மையாகும் என்பது தான். ஆனால் அதைத் தவிர, அதனை சாப்பிட்டால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சாப்பிட்டால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சனைகளையும் தடுக்கலாம். இப்போது அந்த கேரட் சாப்பிட்டால்

முறையற்ற இதயத்துடிப்பைக் கொண்டவர்களுக்காக வருகின்றது "இதய வாட்ச்மேன்

News Serviceஅமெரிக்காவின் பாஸ்டன் சயின்டிஃபிக் நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் இந்தப் புதிய கருவியின் பெயர் 'வாட்ச்மேன்'. பெரும்பாலும் முறையற்ற இதயத் துடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்டிரோக் தாக்கும் அபாயம் உள்ளது;அச்சமயம் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்துவிடும் ஆபத்தும் உண்டு. இதனால் ஆபத்தில் உள்ளவர்கள், எந்த நேரமும் துரத்தும் மரணத்தைத் தவிர்க்க மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
   இதற்கு பதிலாக இதயத்தில் பொருத்திக் கொள்ளும் கருவியாக இதை உருவாக்கியுள்ளனர். முதற்கட்ட பரிசோதனையில், இது பாதுகாப்பானது என்று உறுதியாகிவிட்டது. எனவே இன்னும் சில வாரங்களில் இது இறுதி வடிவம் பெற்று விற்பனைக்கு வரக் கூடும்.

குருத்து உயிரணுக்களின் மூலம் வாதத்தை குணப்படுத்தலாம் - ஆய்வில் அறிகுறிகள்!

News Service மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் வரும் வாத நோய் வந்து நடமாட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நபர்களுக்கு குருத்து உயிரணுக்களைக் கொடுத்து ஸ்கொட்லாந்தில் செய்யப்பட்ட பரிசோதனை முறை சிகிச்சையில் அவர்கள் குணமடைவதற்கான சிறு அறிகுறிகள் தென்படுகின்றன. மனிதக் கருவிலிருந்து எடுக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை இந்த நோயாளிகளின் மூளையில் செலுத்தி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  
இவர்களது உடல் அசைவுகளிலும், விழாமல் நிற்பதிலும், சுற்றியிருப்பதை உணர்ந்துகொள்வதிலும் முன்னேற்றங்கள் தென்படுவதாகவும், இந்த சிகிச்சையால் பாதகமான மாற்றம் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை என்றும் ஆய்வு காட்டுகிறது.இந்த முன்னேற்றங்களைக் கண்டு தாம் வியந்துபோயுள்ளதாக பரிசோதனை மேற்கொண்ட எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த சிகிச்சை முறையின் தீர்க்கமான முடிவாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது என்று இவர்கள் கூறுகின்றனர். நோயாளிகளுக்கு குருத்து அணுக்களைக் கொண்டு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலகில் நடந்துவரும் முதல் சில ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!

News Service வாழ்க்கையின் அந்திம காலத்தைக் கடப்பது தொடர்பான கவலை நம்மில் அத்தனை பேருக்கும் இருக்கிறது. முதுமையைத் தொட்டிருப்பவர்களும், தொட இருப்பவர்களும் இப்பருவம் குறித்த எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறார்கள்.பணம் படைத்தவர்கள் முதல் பாட்டாளிகள் வரையில் முதுமையை அடையும் மனிதர்களுக்கு சமூகம் அளிக்கும் அங்கீகாரம் அல்லது உரிமைகள் குறித்த விஷயத்தில் கேள்விகள் தொக்கி நிற்கின்றன. சமூகத்தில் தாங்கள் புறந்தள்ளப்பட்டதாக முதியவர்கள் எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள்.இதற்கு பல்வேறு சமூகக் காரணங்களை அடுக்கலாம். உழைத்து சம்பாதிக்கும்வரை வீட்டின் தலைமகனாக மதிக்கப்பட்டவருக்கு முதுமைப் பருவத்தில் அளிக்கப்படும் மரியாதை தேய்வதால், முதியோர் இல்லங்களே மேல் என்று பலர் கருதுகின்றனர்.
  
முதியவர்களைப் பெரும் சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு அனாதைகளாகவே விட்டுவிடும் அவலம் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் இதை உணர்த்துகின்றன.
மதுரையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு முதியவர் தனது தள்ளாத வயதில் உயிரிழந்தார். இதையடுத்து முதியோர் இல்லப் பொறுப்பாளர்கள், அந்த முதியவர் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அவரை

உடலை சீராக இயக்குவதற்கு உதவும் பருப்பு வகைகள்!

News Service உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவாளர்களுக்கு என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒரு ஒன்று என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம். மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் கைகளையும், அதில் உள்ள சத்துக்களையும்

ஸ்கைப் சேவையினை பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ காத்திருக்கின்றது பாரிய அதிர்ச்சி!

News Service வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தான். இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யபடுகின்றது அது தெரியுமா உங்களுக்கு. மேலும் ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்....
  
இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரி எளிதாக அவர்களைச் சென்றடையும். இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கம்ப்யூட்டரில் வந்து விடும். பின்னர் இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது. அதனை இயக்குபவர், அங்கிருந்தே, உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படும். இதனைத் தவிர்க்க, ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது.

May 26, 2013

ரயிலில் மேற்கூரையில் சாகசப்பயணம் செய்த இளைஞர் மரணம்



பாரிஸ் மெட்ரொ ரயில் கூரையின் மீது சாகசப்பயணம் நடத்திய இளைஞர் ஒருவர் தன் நண்பரை கைகொடுத்து மேலே தூக்கிய பொழுது குகையின் விளிம்பில் முட்டி மரணம் அடைந்தார்.இரவு பத்து மணியளவில் நடந்த இந்த விபத்தில் ரயிலின் கூரையின் மீது நின்றவர் ரயில் பெட்டிகளுக்கு இடையே தூக்கி எறியப்பட்டு மண்டை உடைந்து பிணமானார்.
இவர் கைகொடுத்து தூக்கிய நண்பரோ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தங்களின் சாகசப்பயணம் You tubeல் வெளி வர வேண்டும் என்று விரும்பி இவர்கள் இருவரும் தங்களுக்குள் கமெராவை பொருத்தி இருந்தனர்.
இது போன்ற கரணம் தப்பினால் மரணம் என்ற சாகச விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்கள் பெரும்பாலும் சம்பவ இடத்திலேயே பலியாவதாக ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பொலிசார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...