Jun 7, 2013

முத்துக்கள் பத்து! --- கணிணிக்குறிப்புக்கள்,



முறையான ஷட் டவுன்... முக்கியம்!
பலரும் கம்ப்யூட்டரை அணைப்பதை மின்விளக்கை அணைப்பதைப்போலச் செய்வார்கள். பலவிதமான பிரச்னைகளுக்கும் இது முக்கியமான காரணம் ஆகிவிடும். ஒவ்வொரு விண்டோவையும் முறையாக நிறுத்திவிட்டுப் பின்னரே கம்ப்யூட்டரின் திரையையும், சி.பி.யூ-வையும் அணைக்க வேண்டும். இல்லை என்றால்... கம்ப்யூட்டரின் மூளை குழம்பி, அடுத்த முறை ஆன் செய்யும்போது பலவிதமான பிரச்னைகளையும் கொடுக்கும்.
பாக்கெட் மணி!
'செபி’யின் இணையதளத்தில் (http://investor.sebi.gov.in/fevernacular.html) 'பணம்’ என்ற தலைப்பில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் குழந்தை களுக்கான நிதிக்கல்வி விவரங்கள் இருக்கிறது.http://www.nism.ac.in என்ற வலைதளத்தில், 'ஃபைனான் ஷியல் எஜுகேஷன்' என்கிற தலைப்பில், குழந்தைகளுக்கான நடைமுறை நிதிக்கல்வி, 'பாக்கெட் மணி' என்கிற பெயரில் தரப்பட்டிருக்கிறது. இதை

வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா..



drinking-hot-waterஎளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘வெந்நீர்’.
தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம்.

* காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* ஏதாவது எண்ணைப் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பின்னர் நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.
* தொடர்ந்து வெந்நீர் குடித்தால் உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.
* மூக்கடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு ‘ஆவி பிடித்தால்’ மூக்கடைப்பு,

மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!



Mango-fruitமாம்பழத்தில் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன.
இந்த சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்களுக்கு இயங்கு உறுப்புகளை நடுநிலையாக்கும் சக்தி உள்ளது. இயங்கு உறுப்புகளால் அணுக்கள் பாதிக்கப்பட்டு ஏற்படும் நோய்களே இருதய நோய்கள், குறித்த காலத்திற்கு முன் வயதிற்கு வருதல், புற்று நோய் மற்றும் சிதைத்தல் நோய். சரி… மாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்களால் ஏற்படும் உடல் நல நன்மைகளை பார்க்கலாமா?
இரத்த அழுத்தம்
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகம். இது நமக்கு

விஸ்கியின் மருத்துவ குணங்கள்!


Whiskyஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும்.
ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா…!
நல்ல தூக்கம்- உடல் அதிக அசதியுடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.
நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.

 

ஆண்களின் முடி உதிர்வு பிரச்சினைக்கு எளிய 20 தீர்வுகள்

male-baldnessமுடி உதிர்தல் என்பது உலகளாவிய பிரச்சனை ஆகும். அதற்கு உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, பலவித மருந்துகளை உண்ணுதல், மன அழுத்தம், சுகாதார சீர்கேடு மற்றும் மரபியல் போன்ற பல காரணங்கள் உள்ளன.
தொப்பி மற்றும் ஹெல்மெட் அணிவதாலும், ஆண்களுக்கு முடி உதிரும். இதனால் சிலருக்கு இளமையிலேயே வழுக்கை தலை ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர்.
இத்தகைய முடி உதிர்தலை குறைக்க, எளிய 20 தீர்வுகள் இதோ…
01. சீரான இடைவெளியில் தலைமுடியை கழுவுதல்
சீரான இடைவெளியில் முடியை அலசினால், தலையும் தலைச் சருமமும் சுத்தமாக இருக்கும். அதனால் முடி உதிர்தல் குறையும். இது தொற்று மற்றும் பொடுகு பிரச்சனைகளில் இருந்தும் தலையை காப்பாற்றுவதால், முடி உடைதலும், உதிர்தலும் கணிசமான அளவு குறையும். இது போக சுத்தமான தலைமுடி தோற்றத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.
02. முடியை ஆரோக்கியமாக பேண தேவைப்படும் வைட்டமின்களை எடுத்துக்கொள்ளல்
வைட்டமின்கள் உடல்நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின் ஏ தலையில் உள்ள மயிரடிச்சுரப்பு வளமாக

தயிரில் இருக்கும் நீங்கள் அறிந்திராத மருத்துவ குணங்கள்!

curdதயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது.
தயிர் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும்.

தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும். தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட மருத்துவர்கள் சொல்வது இதனால்தான்.
அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும்.
பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் எட்டப் போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் தேவையானது உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன. கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பதற்கான சில சூப்பர் டிப்ஸ்!

நீரிழிவுநீரிழிவு நோய்க்கு பெரியோர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அளவுக்கு அதிகமான அளவில் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய சர்க்கரையானது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, இந்நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கும் தான் பாதிப்பை ஏற்படுத்தும். எப்படியெனில் அதிகப்படியான அளவில் சர்க்கரையை சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, நீரிழிவு ஏற்படுவதோடு, இதய நோய், மூட்டு வலி மற்றும் புற்றுநோய்க்கும் வழிவகுக்கும்.
பெரும்பாலானோர் டீ, காபி போன்றவற்றில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்து தான் குடிப்பார்கள். மேலும் சிலர் இனிப்பு உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இவ்வாறு இனிப்பு சுவைக்கு பலர் அடிமைகளாக உள்ளனர். ஆனால் அதிகம் சர்க்கரை உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் உடனடியாக முற்றிலும் சர்க்கரையை குறைக்கக்கூடாது. அது மிகவும் தவறான செயல். அதற்குபதிலாக, கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இனிப்புக்களை குறைக்க வேண்டும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகள்!

காய்கறிகள்


வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், பாகற்காய், சேப்பங்கிழங்கு, பீட்ரூட், வெண்டைக்காய், கோவைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், சுரைக்காய், குடைமிளகாய், சௌசௌ, அவரைக்காய், காரட், கொத்தவரங்காய் மற்றும் கத்தரி பிஞ்சு ஆகிய காய்கறிகளின் மருத்து குணங்களைப் பார்ப்போம்.
வாழைப்பூ:
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத்

குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – 2013


astrology
குரு பகவான் விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி (28-5-2013) செவ்வாய்க்கிழமை இரவு 9.18 மணியளவில் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கக் கணக்கு. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வைகாசி- 17 (31-5-2013) குருப்பெயர்ச்சி.
கீழே உள்ள பொத்தான்களில் உங்கள் ராசி உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் குருபெயர்ச்சி பலன்களை அறிந்துகொள்ளலாம்.
எதற்கும் கலங்காத மனமும் எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதவர்கள் நீங்கள். வருங்கால முன்னேற்றம் பற்றியே எப்பொழுதும் சிந் தித்துக் கொண்டிருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதியான

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்

Beetrootஇனிப்புச் சுவையுடைய அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம். இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!!!
அல்சர்
அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால்

Jun 6, 2013

இந்தியாவில் முதன் முறையாக 50 அடி தூரத்துக்கு தூக்கி நகர்த்தப்பட்டது வீடு!



வீட்டை நகர்த்தும் முறை (கோப்புப்படம்)
இந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் 400 டன் எடை கொண்ட வீடு இடிபடாமல் 50 அடி தூரத்துக்கு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா கோயில் மேட்டுப்பாளையம் சாலையில் தங்கவேல் என்கிற ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு சொந்தமான் வீடு உள்ளது. இவரது தந்தை வழக்கறிஞர் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இந்த வீட்டை கட்டி முடித்தார். இந்த வீடு இரு தளங்களுடன் 8 அறைகள் கொண்ட வீடு. வீட்டின் பக்கவாட்டில் இன்னொரு வீடுகட்ட முடிவுக்கு வந்த தங்கவேலுவுக்கு இந்த வீட்டை இடிக்க மனம் வரவில்லை.

அதனால் வீட்டை அப்படியே நகர்த்தும் தொழில் நுட்பம் தெரிந்த நிபுணர் ஒருவரை ஹரியானாவில் இருக்கும்  கம்பெனி ஒன்றின் மூலம் வரழைத்தார். வீட்டை நகர்த்தும் பணி  கடந்த மார்ச் மாதம் துவக்கப்பட்டது. செப்டிக் டெங்க் இணைப்பு, அஸ்திவாரம் துண்டிக்கப்பட்டு, ஜாக்கிகள் உதவியுடன் வீடு ஒன்றைரை அடி உயரம் உயர்த்தப்பட்டது. பின்னர் அதன் கீழ் இரும்பு ரோலர்கள் பொருத்தப்பட்டு வீட்டை அணு அணுவாக நகர்த்தும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...