Jun 12, 2013

புதன் கோள் (Mercury)

புதன் (கோள்)

புதன்
Mercury in color - Prockter07.jpg

விளக்கத்துடனான பெரிய படிமம்
சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரித் தூரம் 0.387AU
Mean ஆரை 57,910,000 கிமீ
வட்டவிலகல் 0.20563069
சுற்றுக்காலம் 87நா 23.3ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
115.88 நாட்கள்
சராசரிச் சுற்றுவேகம் 47.8725 கிமீ/செக்
சாய்வு 7.004°
உபகோள்களின் எண்ணிக்கை 0
பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ2
திணிவு 3.302×1023 கிகி
Mean அடர்த்தி 5.43 கி/சமீ3
மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
சுழற்சிக் காலம் 58நா 15.5088ம
அச்சுச்சாய்வு
Albedo 0.10-0.12
தப்பும்வேகம் 4.25 கிமீ/செக்
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
மேற்பரப்பு வெப்பநிலை:
தாழ் இடை உயர்
90 K 440 K 700 K
வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம் trace
பொட்டாசியம் 31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை(angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.
தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக்(craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. புதனுக்கு நிலவுகள் கிடையாது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. இதன் புறப்பரப்பு வெப்பநிலையின் நெடுக்கம் (range) −183 °C முதல் 427 °C வரை உள்ளது.
புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது.

பொருளடக்கம்

உட்கட்டமைப்பு

இது 2,439.7 கிமீ ஒரு நில ஆரம் கொண்டு, சூரிய குடும்பத்தின் மிகச்சிறிய கிரகமாக இருந்தாலும் இதன் அடர்த்தி 5,515 கிராம்/சதுர சென்டிமீட்டராக உள்ளதுடன் சூரிய மண்டலத்தின் இரண்டாவது அடர்த்தியான கிரகமாக அறியப்படுகிரது. இக்கிரகம் சுமார்

Jun 11, 2013



உங்கள் செல்போனின் SAE Value (எஸ்.ஏ.ஆர் வால்யூ) பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

வாழ்க்கை வசதிக்கான பொருளாக அறிமுகமாகி, வாழ்வின் தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டதில் செல்போனுக்கே முதலிடம். “செல்போன் இல்லாமல் வாழ முடியாது’ என்ற நிலைக்கு இன்றைய இளைய, வளரும் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டதைக் காண்கிறோம்.

எந்த ஒரு பொருளுமே தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடும்போது, அதன் மூலம் மனித இனம் அபாயத்தைத்தான் அதிகம் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது கண்கூடு.

செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இவை ஊகங்கள்தான் என புறந்தள்ளுவோரும் உண்டு. இருந்தாலும், பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதன் விளைவுகளை இத்தகைய அலட்சியப் போக்குள்ளவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனமே அழிந்துவருகின்றன. செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள். அது, செல்போனில்

8 கமெராக்களை ஒரே கொன்ரோலில் இயக்கும் ரொபோட்டிக் கமெரா அறிமுகம்!


கேமராக்களின் வளர்ச்சி எவ்வளவு எட்டியிருந்தாலும், ஒவ்வொரு டெக்னாலஜிக்கும் தனி தனி கேமராதான் பயன்ப்டுத்த் படுகிறது.

ஒவ்வொரு கேமராவும் ஒவ்வொரு ஃபார்மட் என்பதால் கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது ரிஸ்ல்ட்ஸ் வேறுபடும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு என் ஹெச் கே என்னும் ஜப்பான் நிறுவனம் 8 கேமராவை ஒரு கன்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபாட்டிக் கேமராவை கண்டுபிடித்திருக்கிறது.

இதன் மூலம் ஒரு தடவை ஷூட் செய்யும் போது அனைத்து ஆங்கில்களும் ஒவ்வொரு கேமரா மூலம் தனி தனியாய் கிடைக்கும் – 3டி கிடைக்கும் அது போக் ஸ்லோமோஷனும் 360 டிகிரியில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இல்லாமல் கிடைக்க பெறலாம். இது ஷூட் செய்வது மட்டுமில்லாமல் பேன் லெஃப்ட் / பேன் ரைட் / டில்ட் அப் / டில்ட் டவுன் கூட செய்யலாம். இது இரண்டு சூப்பர் மோட்டார்கள் மூலம் எல்லா கேமராவும் ஒரே நேரத்தில் செயல்ப்படும்.

இந்த வீடீயோவை பார்த்தால் பிரமித்து போவீர்கள். இதே போல் தற்போது நடந்து வரும் சாம்பியன்ஷிப் டிராப்பி கிரிக்கெட்டில் பழைய கால டெக்னாலஜி ஆன கருப்பு வெள்ளை மற்றும் எக்ஸ்ரே டெக்னாலஜியை ஸ்லொ மோஷன் அவுட் ஆப்ஷனுக்கு யூஸ் பண்ணி துல்லியமாக கண்காணிக்கறாங்க- ஆங் – இன்று இந்தியா வெஸ்ட் இன்டீஸ் மேட்ச்சில் பாருங்களேன்!……

Jun 10, 2013

குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்


 தற்போது குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு குழந்தை செல்வத்தின் மகிமையைப் பற்றி பல பெற்றோர்கள் உணராமல் இருப்பதே காரணம். 
 
வேலைக்காகவும், பிஸியான சமுதாயத்திற்காகவும், இப்படி பலவித காரணங்களுக்காகவும் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை குறைக்கின்றது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் வாழ்க்கை நிலையை உயர்த்தக் கூடியவர்கள். அதற்கான பல காரணங்களை நம்மால் கொடுக்க முடியும். அப்படிபட்ட முக்கியமானதாகவும், கவனிக்கக்கூடிய சில காரணங்களையும் பார்போமா!!!
 
பொறுப்புணர்ச்சி 
 
குழந்தைக்கு தாயாகும் முன் நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஆனால் தாயான பின் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்பான அம்மாவாக இருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வதை விட, வேறு எந்த வேலையும் முக்கியமில்லை. குழந்தையை கையில் ஏந்தும் தருணத்திலிருந்து பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரை பொறுப்புகள் குறைவதில்லை. இந்த அக்கறை என்னும் பண்பு சிறந்த தாயாக உருவெடுக்க செய்கின்றது.
 
மகிழ்தல்
 
குழந்தை தூங்குவதை கண்டு மகிழ்வதென்பது, இது நாள் வரை பார்த்த விஷயங்களிலேயே சிறந்தது என்று கூறுவர். மேலும் அது நம்மை பரவச படுத்தும் காட்சி என்றும் சொல்வார்கள். அத்தகைய குழந்தையை தொடும் பொழுதும், நெஞ்சோடு அணைத்து கொள்ளும் போது ஒருவித அதிர்வை உணர நேரிடும். அதுவே தாங்க முடியாத மகிழ்ச்சி.
 
குழந்தைப்பருவம் 
 
குழந்தை வளர வளர நாமும் குழந்தையாய் ஆகின்றோம். முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் விஷயம் என்று எதை நினைக்கின்றீர்களோ, அதை குழந்தையுடன் மகிழ்ச்சியாக செய்வோம். குறிப்பாக தலையணை சண்டை, சிறு பிள்ளை விளையாட்டு போன்றவை.
 
புதிய பந்தம் 
 
குழந்தைக்கும், தாய்க்குமான உறவை போல வேறு எந்த உறவையும் காண முடியாது. இதில் எல்லா வகையான உணர்ச்சிகளை உணர முடியும். குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், இவை அனைத்தையும் இழக்க நேரிடும்.
 
வாழ்க்கையின் புதிய கோணம் 
 
குழந்தையின் சூழ்நிலையை அனுகும் திறனை கொண்டு, இக்கட்டான சூழ்நிலையை கையாளும் திறனை கற்றுக்கொள்ளலாம். அதிலும் இந்த உலகத்தில் எது தேவை, எது தேவையற்றது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
 
மன அழுத்தம் 
 
குழந்தைகள் இருந்தால் தேவையில்லாத டென்ஷன் என்று நம்பும் பெண்கள், தயவு செய்து உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதை உணர்வீர்கள். நாள் முழுவதும் வேளையில் அவதிப்பட்டு வீடு திரும்பும் தாய்மார்கள், வீட்டில் குழந்தைகளால் எவ்வளவு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் எவ்வளவு டென்ஷன், விரக்தி இருந்தாலும் குழந்தையின் அரவணைப்பில், அனைத்தும் மறந்து போகும் என்பதை உணர முடியும்.
 
உறவு
 
குழந்தை செல்வம் கணவருடனான உறவை பலப்படுத்தும். திருமண வாழ்க்கையில் குழந்தை பல அற்புதத்தை நிகழ்த்துகின்றது. குழந்தை பிறந்த உடன் தம்பதியினருடனான அன்பு பலப்படுத்தப்படுகின்றது. மேலும் இடையில் தொலைந்து போன அன்பை திருப்பி தருவது குழந்தை செல்வமே.
 
முதுமையில் பலம் 
 
வயதானவுடன் உடல் சோர்வடையும் போது, உடல் அளவிலும், மனதளவிலும் ஊன்றுகோளாய் இருப்பது குழந்தைகளே. கவலைகளை கேட்பதற்கும், தோள் சாய்வதற்கும் நம் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.
 
நம்பிக்கை 
 
வாழ்க்கையில் பலவித பாதைகளை கடக்கின்றோம். சில வேலைகளையும், சில விஷயங்களையும் நாம் சுமந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் எழுகின்றது. சில வேளைகளில் விழுவதும் உண்டு. ஆகவே குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையில் முன்னோக்கி செல்லும் ஆற்றல் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பது சத்தியம்.

Jun 9, 2013

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்

பெரும்பான்மையான மக்க‍ளின் உடலில் உள்ள இரத்த அணுக்க ளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிகளவில் பாதிக் கப்படுகின்றனர். ஆகவே அத்தகைய இரத்தத்தை அதிகப்படுத்த கடை களில் நிறைய மருந்துகள் விற்கப் படுகின்றன. ஆனால் அவற்றை சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தின மும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இரு க்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மே லும் இரத்த அணுக்களின் எண்ணி க்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண் ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச் சத்துக்கள்

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்!


முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப் பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசி யாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவு ம், மற்ற உணவை செரிமானமாக்க வும் பயன்படும். மலச்சிக்கலால் பாதி க்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள். பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படு ம். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன்

வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக
்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.

வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...

எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம்

மனித உடலைப் பற்றி அறிவோம் !



மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639
* மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
* மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
* மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400
* மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33
* மனித மூளையின் எடை 1.4 கிலோ
* உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்
* மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்
* உடலின் மெல்லிய சருமம் கண் இமை
* மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி
* ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
* மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
* நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது.

அவர்கள் சொல்வாக்கு மற்றும் செல்வாக்குடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர்.

அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர்.

எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளை தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!


..! வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...