Jul 17, 2013

SD Card பயன்பாட்டில் சிக்கல்கள்



மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. (SDSecure Digital) கார்ட்களே. 

மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம். மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை மேற்கொள்ளாது. 

அந்த வேளைகளில் நாம் சற்றுப் பொறுமையினை இழந்து, கார்டினைக் குறை கூறத் தொடங்குவோம். இந்த கார்ட் பயன்படுத்துவதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.

பலரின் மனதில் தோன்றும் ஒரு கேள்வியை முதலில் காணலாம். இந்த கார்டுகளில் உள்ள டேட்டாவினைக் காந்தக் கதிர்கள் அழிக்குமா? அல்லது சிதைக்குமா? என்பதுதான். காந்தக் கதிர்கள் எளிதில் அழிக்கும் அளவிற்கு ப்ளாஷ் மெமரி கார்டுகள் செயல்படுவதில்லை. 
காந்தக் கதிர்கள் டேட்டாவினை அழிக்கும். ஆனால், அதனைச் சாதாரணமாக நாம் வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தும் காந்தங்கள் அழிப்பதில்லை. மிக மிக சக்தி வாய்ந்த காந்தத் தகடுகளால் மட்டுமே, இந்தக் கார்டுகளில் உள்ள டேட்டாவினைச் சிதைக்க முடியும். எனவே, காந்தம் அருகே கொண்டுபோனதால், நம் எஸ்.டி. கார்ட் கெட்டுப் போய்விட்டது என்ற மாயையிலிருந்து விடுபடுவோம்.
இருப்பினும், பல்வேறு காரணங்களினால், நம்மால் சில வேளைகளில் எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். கீழே இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவோர் சந்திக்கும் ஆறு வகையான சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது. 
1. தவறான பார்மெட்: 
உங்களிடம் எந்த டேட்டாவும் இல்லாத எஸ்.டி. கார்ட் ஒன்று உள்ளது. அதனைப் பயன்படுத்த நீங்கள் தயாராகிறீர்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ, அது செயல்பட மறுக்கிறது. கார்டைச் சபிக்காமல், ஏற்கனவே அதனை எந்த சாதனங்களில் பயன்படுத்தினீர்கள் என எண்ணிப் பார்க்கவும். பலவகை மொபைல் போன்கள், கேமராக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தினீர்களா? பிரச்னை அங்குதான் உள்ளது. 
உங்களிடம் உள்ள எஸ்.டி. கார்ட் வேறு ஒரு வகை சாதனத்திற்காக பார்மட் செய்யப்பட்டதாயிருக்கும். எப்படி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பார்மட் செய்யப் பட்ட ஹார்ட் டிஸ்க், வேறு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படாதோ, அதே போலத்தான் இதுவும். 
இந்த மாதிரி பிரச்னை ஏற்பட்டால், முக்கிய பைல் ஏதேனும் கார்டில் பதியப்பட்டிருந்தால், அதனை இயக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி, பைலைப் பாதுகாப்பாக மாற்றிவிட்டு, தற்போதைய சாதனத்திற்காக பார்மட் செய்திடவும்.
2. பாதுகாப்பில்லாத வழியில் எடுத்தல்: 
நம்முடைய எஸ்.டி. கார்ட்களைப் பயன்படுத்திய பின்னர், அதன் சாதனத்தில் இருந்து பாதுகாப்பான முறையில் (safely remove), இணைப்பை நீக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் நீக்கினால், விபரீத விளைவு ஏற்படும். அந்த எஸ்.டி. கார்ட் மீண்டும் பயன்படுத்த முடியாமல் போகலாம். 
வேகமாக பல சக்கரங்களுடன் இயங்கும் ஓர் இஞ்சினில், ஒரு பெரிய குறட்டினைத் தூக்கி எறிந்தால் என்னவாகும்? அந்த விளைவுதான், ஓர் எஸ்.டி. கார்ட் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், சாதனத்திலிருந்து நீக்கப்பட்டால் ஏற்படும். இந்த விளைவு உடனே ஏற்படாது. 
பைல்கள் கெட்டுப் போகாமல் காட்டப்படும். நாமும் கார்டைத் தொடர்ந்து பயன்படுத்து வோம். திடீரென அதன் இயக்கம் முடங்கிப் போகும். இந்தச் சூழ்நிலையைச் சந்திக்காமல் இருக்க, பிளாஷ் ட்ரைவ் கார்டினைப்பாதுகாப்பான முறையில்தான் நீக்க வேண்டும்.
3. கவசம் சேதம் அடைந்திருத்தல்: 
எஸ்.டி. கார்ட்களைக் கொண்டிருக்கும் கவசம் சேதம் அடைந்திருந்தால், நம்மால் அந்தக் கார்ட்களைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் பேக் அப் செய்து வைத்த பைல்களை மீண்டும் பெற இயலாமல் போய்விடும். இந்த பைல்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தரும் சேவையினைச் சில பொறியாளர் கள் செய்து தருகின்றனர். ஆனால், அதற்கென நாம் செலுத்த வேண்டிய கட்டணம் மிக அதிகமாக இருக்கும்.
4. பூட்டப்பட்ட கார்ட்: 
எஸ்.டி. கார்ட்களைப் பூட்டி வைக்கலாம். இந்த வசதி கார்ட்களில் உள்ளதனைப் பலரும் அறியாமல் இருக்கிறோம். இதன் மூலம் அதில் பதியப்பட்ட பைல்கள் அழிக்கப்படாமலும், திருத்தப்படாமலும் பாதுகாக்கலாம். கார்டின் ஒரு புறத்தில் பார்த்தால், இந்த பூட்டு இருப்பது தெரிய வரும். பொதுவான கார்டின் வண்ணத்திலிருந்து இது வேறான வண்ணத்தில் இருக்கும். இதனை எளிதாக இழுத்தால், கார்ட் பூட்டிக் கொள்ளும். மீண்டும் இதனைத் திறந்தாலே பயன்படுத்த முடியும்.
5. மெதுவாக இயங்கும் கார்ட் ரீடர்: 
எஸ்.டி.கார்ட்களை அதற்கான ரீடர் சாதனத்தில் வைத்துப் பயன்படுத்துகையில், அந்த ரீடரின் செயல் வேகம் மிகவும் மெதுவாக இருந்தால், கார்டைப் பயன்படுத்துவது வீண் போலத் தெரியும். மிகப் பழைய கார்ட் ரீடரை வைத்திருப்பவர்கள் இந்த சூழலைச் சந்தித்திருக்கலாம். இந்த பிரச்னையைச் சந்திப்பவர்கள், வேகமாக இயங்கும் எஸ்.டி.கார்டினையும், அதற்கான ரீடரையும் புதியதாக மாற்றிக் கொள்ள வேண்டும். 


6. கார்டின் செயல் வேகம் குறைவு: 
மிகப் பழைய எஸ்.டி. கார்ட்கள் எனில், அவற்றில் டேட்டா எழுதப்படும் வேகமும் மிகவும் குறைவாக இருக்கும். எனவே, நம் பணி விரைவில் முடிக்கப்படாமல் இருக்கும். இதற்கு ஒரே தீர்வு, வேகமான டேட்டா பரிமாற்ற வேகம் கொண்டுள்ள புதிய கார்ட் ஒன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான்.

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்




விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. 

இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. 

இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன. 

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்

கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?


உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரில் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். 

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொண்டுள்ளவர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ்டம் பைல்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். 

அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்துபவர்களின் அமைப்பை பாதிக்கலாம். இந்த இரு வகை அக்கவுண்ட்கள், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் தான், மற்றவர்கள், உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது. முக்கியமான பைல்களை அழிக்க முடியாது. இஷ்டத்திற்கு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முடியாது.

சிஸ்டம் அமைப்புகளை மாற்றக் கூடிய சில புரோகிராம்களை, எடுத்துக் காட்டாக ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல், நீங்கள் இயக்க
யுவான் சுவாங்
இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறிய மூலிகைகளுள் ஒன்று தூதுவேளை.அறிவை விளக்க,நினைவாற்றலை பெருக்க,கபத்தை கரைக்க தூதுவேளை உண்ணவேண்டும் என்கிறார் வள்ளலார்.சிறிய முட்கள் உடைய இலைகள்,பச்சைநிறமான காய்கள்,சிகப்புநிற பழங்களுடன் காணப்படும் கொடியினம் தூதுவேளை.தமிழகம் முழுவதும் காண்ப்படுகிறது. இதன் பயன்கள்.
1.இலையை நெய்யில் வதக்கி துவையலோ,அல்லது கடைந்து குழம்பாகவோ சாப்பிட்டு வர கபம் நீங்கி உடலுக்கு வலு கொடுத்து அறிவாற்றலை அதிகரிக்கும்.
2.இலைச்சாற்றை காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர எலும்புருக்கி,மார்புசளி நீங்கும்.
3.காயை தயிர்,உப்பில் ஊறவைத்து பதப்படுத்தி வறுத்து உண்டுவர இதய பலவீனம்,மலச்சிக்கல் தீரும்.
4.இதன் முழு சமூலத்தையும் 50கிராம் அளவு நீரில் காய்ச்சி கஷாயமாக காலை,மாலை அருந்திவர இரைப்பு,சளி,இருமல் தீரும்.
5.பத்து அல்லது 12 தூதுவேளைப்பூக்கள் எடுத்து பாலில் காய்ச்சி ஒரு மண்டலம் சாப்பிட்டுவர உடல் பலம், முகத்தில் வசீகரமான அழகை பெறலாம்.
6.தூதுவேளை,பற்படாகம்,விஷ்ணுகிரந்தி,கண்டங்கத்திரி இவற்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி 8 ல் ஒரு பங்காக சுண்ட செய்து கிடைப்பது தூதுவேளை குடிநீர்.இதனை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை 10மி.லி கொடுத்துவர நிமோனியா,டைபாய்டு போன்றவை குணமாகும்.
தெருமுனையில் வெய்ட் பண்ணறேன்,ஒரு கைப்பை எடுத்துக்கொண்டு வாங்க,தூதுவேளை பறிக்க போகலாம்இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறிய மூலிகைகளுள் ஒன்று தூதுவேளை.அறிவை விளக்க,நினைவாற்றலை பெருக்க,கபத்தை கரைக்க தூதுவேளை உண்ணவேண்டும் என்கிறார் வள்ளலார்.சிறிய முட்கள் உடைய இலைகள்,பச்சைநிறமான காய்கள்,சிகப்புநிற பழங்களுடன் காணப்படும் கொடியினம் தூதுவேளை.தமிழகம் முழுவதும் காண்ப்படுகிறது. இதன் பயன்கள்.
1.இலையை நெய்யில் வதக்கி துவையலோ,அல்லது கடைந்து குழம்பாகவோ சாப்பிட்டு வர கபம் நீங்கி உடலுக்கு வலு கொடுத்து அறிவாற்றலை அதிகரிக்கும்.
2.இலைச்சாற்றை காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர எலும்புருக்கி,மார்புசளி நீங்கும்.
3.காயை தயிர்,உப்பில் ஊறவைத்து பதப்படுத்தி வறுத்து உண்டுவர இதய பலவீனம்,மலச்சிக்கல் தீரும்.
4.இதன் முழு சமூலத்தையும் 50கிராம் அளவு நீரில் காய்ச்சி கஷாயமாக காலை,மாலை அருந்திவர இரைப்பு,சளி,இருமல் தீரும்.
5.பத்து அல்லது 12 தூதுவேளைப்பூக்கள் எடுத்து பாலில் காய்ச்சி ஒரு மண்டலம் சாப்பிட்டுவர உடல் பலம், முகத்தில் வசீகரமான அழகை பெறலாம்.
6.தூதுவேளை,பற்படாகம்,விஷ்ணுகிரந்தி,கண்டங்கத்திரி இவற்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி 8 ல் ஒரு பங்காக சுண்ட செய்து கிடைப்பது தூதுவேளை குடிநீர்.இதனை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை 10மி.லி கொடுத்துவர நிமோனியா,டைபாய்டு போன்றவை குணமாகும்.
தெருமுனையில் வெய்ட் பண்ணறேன்,ஒரு கைப்பை எடுத்துக்கொண்டு வாங்க,தூதுவேளை பறிக்க போகலாம்

Jul 16, 2013

வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள் சில..


வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள் சில...


* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் எலுமிச்சை சாறு கலந்து போடலாம்.
* பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.
* கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
* எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.

பொலிவான முகம் வேண்டுமா? ஆவி பிடிங்க...


பொலிவான முகம் வேண்டுமா? ஆவி பிடிங்க...


சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று சருமத்திற்கு பலவிதமான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அத்தகைய அழகுப் பொருட்கள் தற்காலிகமான அழகைத் தான் தரும் இதற்கு உதாரணம், ஒவ்வொரு நாளும் அன்றைய நாள் முடிவில் சருமமானது பொலிவிழந்து, கருமையாக காணப்படும்.
ஏனெனில் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் அப்படியே தங்கியிருப்பதால், அவை பொலிவிழந்த சருமத்தை வெளிப்படுத்துகிறது.
இதனால் சிலர் முகத்திற்கு சவர்க்காரம் அல்லது 'ஃபேஸ் வாஷ்' போன்றவற்றை பயன்படுத்துவார்கள். இருப்பினும், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்காமல், அவை வறட்சியான சருமத்திற்கு தான் வழிவகுக்கும்.
ஆகவே, பலர் இதற்காக 'ஃபேஸ் மாஸ்க்', 'ஸ்கரப்' போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆவி பிடிப்பதற்கு சமமாகாது. ஏனெனில் ஒருமுறை முகத்திற்கு ஆவிபிடித்தாலும், சருமத்துளைகள் நன்கு தளர்ந்து, அங்கு தங்கியிருக்கும் இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை முற்றிலும் அகற்ற முடியும்.
மேலும் ஆவி பிடித்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை போக்கலாம். பொதுவாக ஆவி பிடிப்பது என்பது மிகவும் எளிமையானது. அத்தகைய ஆவி பிடிப்பதில் பல வழிகள்

Hereafter (2010) - Realistic Tsunami Scene Scary..



நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது


இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு ராணுவ பயன்பாடு உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில் அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத




Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...