Aug 10, 2013

ஈழத்துக் கலைஞர்களின் ”இசைவேளை” லண்டன் இசை நிகழ்ச்சி! (படங்கள்)


பெரும்பாலான ஈழத்துக் கலைஞர்களுடன், தென் இந்திய கலைஞர்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
படங்கள் : Digital Dreams
Isai-Velai47 Isai-Velai64 Isai-Velai81 Isai-Velai106
Isai-Velai20Isai-Velai23 Isai-Velai25 Isai-Velai26 Isai-Velai27 Isai-Velai28 Isai-Velai29 Isai-Velai30 Isai-Velai31 Isai-Velai33 Isai-Velai34 Isai-Velai35 Isai-Velai36 Isai-Velai37 Isai-Velai38 Isai-Velai39 Isai-Velai41 Isai-Velai42 Isai-Velai43 Isai-Velai44 Isai-Velai45 Isai-Velai46 Isai-Velai48 Isai-Velai49 Isai-Velai50 Isai-Velai51 Isai-Velai52 Isai-Velai53 Isai-Velai54 Isai-Velai55 Isai-Velai56 Isai-Velai58 Isai-Velai59 Isai-Velai60 Isai-Velai61 Isai-Velai62 Isai-Velai63 Isai-Velai65 Isai-Velai67 Isai-Velai68 Isai-Velai69 Isai-Velai70 Isai-Velai71 Isai-Velai72 Isai-Velai73 Isai-Velai75 Isai-Velai76 Isai-Velai77 Isai-Velai78 Isai-Velai79 Isai-Velai82 Isai-Velai92 Isai-Velai93 Isai-Velai100 Isai-Velai101 Isai-Velai102 Isai-Velai107 Isai-Velai108 Isai-Velai110 Isai-Velai111 Isai-Velai112 Isai-Velai113 Isai-Velai114 Isai-Velai116 Isai-Velai117
Isai-Velai02 Isai-Velai03 Isai-Velai04 Isai-Velai05 Isai-Velai06 Isai-Velai07 Isai-Velai14 Isai-Velai13 Isai-Velai12 Isai-Velai11 Isai-Velai10 Isai-Velai09 Isai-Velai08 Isai-Velai19 Isai-Velai18 Isai-Velai17 Isai-Velai16 Isai-Velai15


பிரான்ஸைச் சுற்றிப்பார்ப்போம் வாருங்கள் - பகுதி2 (காணொளி)



 நாம் சென்ற பகுதியில் ஈபிள் கோபுரத்தைப் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் உல்லாசப்பயணிகளால் பரிசில் மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் லூவ்ர் அருங்காட்சியகத்தையும் அங்கு நிறுவப்பட்டுள்ள பிரமிட் கோபுரம் பற்றியும் லூவ்ர் அருங்காட்சியகத்தைச் சுற்றி உள்ள அழகான பூங்கா பற்றியும் பார்ப்போம். இது பரிசின் முதலாவது பகுதியில் அமைந்துள்ளது.
லூவ்ர் அருங்காட்சியகமானது (musée du Louvre) உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களுள் ஒன்றும் பரிசின் மிகப்பெரிய அருங்காட்சியகமுமாகும். இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் சதுர மீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் அறுபதினாயிரத்து அறுநூறு சதுர மீற்றர்கள் பரப்பளவில் அருங்காட்சியகத்தின் கண்காட்சிகள் உள்ளன.
 


 இந்த அருங்காட்சியகம் பிரான்சின் வரலாற்றில் மிக நீண்ட வரலாறு உடையது. பல நூற்றாண்டுகளாகப் பிரான்சின் கப்பீசியன் மன்னரான Hugh Capet முதல் பல மன்னர்களால் தமது அரண்மனை ஓவிய மற்றும் சிற்பக் கூடமாகவும் பின்னர் அவர்களது, உலகின் பல பாகங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சிற்ப ஓவியங்களின் வைப்பிடமாகவும் உபயோகிக்கப்பட்ட இராஜாங்க மண்டபமான இன்றைய அருங்காட்சியகத்தின் முக்கிய பகுதியான Palais-Royal 1793 முதல் அருங்காட்சியமாக மாற்றியமைக்கப்பட்டது. அது 1190ம் ஆண்டில் Philippe Auguste மன்னனால் கட்டப்பட்டது.
 
 
 
இங்கு பிரபலமான இத்தாலிய ஓவியரான  லியோனார்டோ டாவின்சியின் பிரபல ஓவியங்களின் உண்மைப்பிரதிகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதும் உலகப் புகழ் பெற்றதுமான மோனாலிசா (Portrait of Lisa Gherardini, wife of Francesco del Giocond) ஓவியத்தைக் காண உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வருகின்றார்கள். எகிப்திய கிரேக்க நாகரிகங்களின் அரும்பெரும் சிற்பங்கள் இங்கு சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. பிரான்சின சக்கரவர்த்தி நெப்போலியனின் முடிசூட்டு விழா, சமத்ராஸ் வெற்றிச் சிறகு, கொராத்தியின் போர்ப்பிரகடணம், வீனஸ் கடவுள் போன்றவை மிகவும் பிரபலமான அரும்பெரும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களாகும்.
 
 
 
 
இந்த அருங்காட்சியகம் பெரும்பாலும் எகிப்திய நாகரிகத்தைப் பிரதிபலிப்பதால் அதன் ஒரு வாசற்பகுதியில் பெரும் கண்ணாடிப் பிரமிட் ஒன்று நிரமாணிக்கப்பட்டுள்ளது. இது அருங்காட்சியகத்தின் நெப்போலியன் சதுக்கத்தில் பெரும் கண்ணாடித் துண்டுகளால் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா மித்தரோனால் 1983 இல் இப் பிரமிட்டின் நிர்மாணத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. பின்னர் 30 மார்ச் 1989 இல் திறந்து வைக்கப்பட்டு 1ம் திகதி ஏப்ரல் மாதம் 1989 இல் மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது
இப் பிரமிட்டானது சீன அமெரிக்கக் கட்டட விற்பன்னரான லியோ மிங்க் தலைமையில் கட்டப்பட்டது. இதன் அடிப்பகுதி 35,42 மீற்றர் நீளத்தில் ஆரம்பித்து 21,64 மீற்றர் உயரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது 603 சதுரக் கண்ணாடிகளாலும் 70 முக்கோணக் கண்ணாடிகளாலும் உருவாக்கப்பட்டது.
 
 
 
 
அருங்காட்சியகத்தின் சுற்றுவெளிப்புறங்கள் மிகவும் அழகிய பூங்காக்களினால் நிரப்பப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவின் நீண்ட வழி ஒன்று துய்லறிப் பூங்காவரை நீண்டு செல்கின்றது. வழியெங்கிலும் மிக அழகிய செப்புச் சிலைகள் உங்கள் மனங்களைக் கொள்ளை கொள்ளும்.
இந்த அருங்காட்சியகமும் பிரமிட்டும் அதன் பூங்காக்களும் இரவு வேளைகளில் மனதைக் கொள்ளை கொள்ளும்.
 
 
 
 
 
 
திறந்திருக்கும் நேரங்கள்
 
இவ் அருங்காட்சியகம் திங்கள்,, சனி, ஞாயிறு : காலை 9 மணிமுதல் மாலை 18 மணிவரை 
புதன், வெள்ளி: காலை 9 மணிமுதல் மாலை 21:45 மணிவரை 
 
கட்டணங்கள்
 
நிரந்தரக் கண்காட்சிச் சாலைக்கு மட்டும் 12€
நெப்போலியன் மண்டபத்தின் கண்காட்சிகளிற்கு மட்டும் 13€
அனைத்தையும் பார்வையிட 16€
ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிறும் பிரான்சின் தேசிய தினமான யூலை 14ற்கும் அனுமதி இலவசம். (நெப்போலின் மண்டபம் தவிர)
 
 பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டவர்கள் லூவ்ர் அருங்காட்சியகம் மற்றும் Eugène Delacroix அருங்காட்சியகமும் இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
 
- ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் 18 முதல் 25 வயதுடையவர்கள்
- கலைகள் மற்றும் சரித்திரம் கற்பிக்கும் ஆசிரியர்கள்.
- பிரான்சின் அரசுதவி பெறும் தனியார் மற்றும் அரச கல்லூரி மற்றும் பாடசாலை ஆசிரியர்களிற்கு
- வேலையற்றோர் மற்றும் வேலை தேடுவோர் மற்றும் அரச உதவிகளில் வாழ்வோர் (தகுந்த ஆறுமாதத்திற்குட்பட்ட ஆவணங்களுடன்)
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் ஊனமுற்றோரிற்கும் அவர்களை அழைத்து வரும் துணையாளருக்கும்.
 



பெல்ஜியத்தை சூழ்ந்த மேகப்புயல்... அழிவிற்கான அறிகுறியா?..

பெல்ஜியத்தை சூழ்ந்த மேகப்புயல்... அழிவிற்கான அறிகுறியா?..

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

கோடைகாலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீர் பிரச்சினைகள்!


Urinary Infections and crystals during Summer - Food Habits and Nutrition Guide in Tamil கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.
கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.
கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.
நோய்க்கான அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...