Nov 15, 2013

இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது

நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் உள்ள மாமரத்தை பற்றி கூறினால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வீர்கள் , இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது , இது 3500 வருட பழமை வாய்ந்த மரம் , இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மரத்தின் நாளா புறங்களில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடிய கனிகளை இந்த மரம் தருகிறது

Nov 14, 2013

உலக நீரிழிவு நோய் தினம்!

இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்நோய் காரணமாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், 'சைலன்ட் கில்லர்’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர். எனவே, 'ப்ரீ டயாபீட்டிஸ்’ நிலையில் இருக்கும்போதே வளர விடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்'' என்ற டாக்டர் கருணாநிதி,
''திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உணவுப் பழக்கத்தைத்தான். இஷ்டம்போல சாப்பிடவே கூடாது. குறிப்பாக ஸ்வீட். பொதுவாக, 'ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த பிறகு ஸ்வீட் சாப்பிடக்கூடாது' என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்பதே உணவுக்கு அவசியமல்ல. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க்கரையை எடுத்துக் கொள்ள தேவையில்லை. கண்ணில் கண்ட இடத்தில் எல்லாம் கிடைக்கிறதே என்பதற்காக ஸ்வீட், சாக்லேட் என்று பழக்கப்படுத்துவது பேராபத்து'' என்று எச்சரிக்கை செய்தார்.
வாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்!

உலக நீரிழிவு நோய் தினம்!
சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்’ என ஐக்கிய நாடுகள் சபையால் 2006-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
காலை உணவு... தவிர்க்க வேண்டாம்!
காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணி... இதையட்டிய நேரங்களில் நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் உச்சத்தில் இருக்கும். இந்நேரத்தில் சாப்பிடும்போது... கூடுதல் உழைப்பு இன்றியே, 500 கலோரி வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால், உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனியே சமைக்க வேண்டும் என்பது கிடையாது. சர்க்கரையின் அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். இது உங்களது பசியைக் குறைத்து, உணவு எடுத்துக் கொள்ளும் அளவையும் குறைக்கும். மூன்றுவேளை சாப்பிடும் உணவை, ஐந்து அல்லது ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிடலாம். 'நானெல்லாம் ரொம்ப பிஸி...' என்று அலுவலக வேலைகளில் தீவிரமாக இருப்பவர்கள்... கையோடு காய்கறி மற்றும் பழங்களை சாலட்களாக எடுத்துச் சென்று, டீ குடிக்கும் நேரம்... இடைவெளி கிடைக்கும் நேரம் என்று சாப்பிட்டுக் கொள்ளலாம். தினசரி உணவில் குறைந்தது 25 கிராம் முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
தினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு அல்லது போதுமான உடற்பயிற்சி செய்பவர்கள்... இனிப்பு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம். மற்றவர்கள் இனிப்புப் பொருட்களை தவிர்ப்பதுதான் நல்லது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கருப்பட்டி, வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கலாம்.
துடிப்பான வாழ்க்கைமுறை..!
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள்... இனியாவது தினமும் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்யத் தொடங்குங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். இதைச் செய்ய முடியாதவர்கள் எளிய நடை பயிற்சி, வீட்டு வேலைகளை செய்தல், மாடிப் படிகளில் ஏறி இறங்குதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்தாலே போதுமானது.
உணவு... உஷார்!
தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், பிஸ்கட், மைதாவில் தயாரிக்கப்படும் கேக், பிரெட், பன், பீட்ஸா, பர்கர், கொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சீஸ், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, நண்டு, இறால், ஆடு, மாடு இறைச்சி, மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
குறைக்க வேண்டியவை: தேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு. அசைவம் மிகவும் குறைக்கப்படவேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 கிராம்) அல்லது மீன் (100 கிராம்) எடுத்துக் கொள்ளலாம்.
எடுக்க வேண்டியவை: ஆப்பிள், கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம், பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய பழங்களை... வயது, உடல் உழைப்பு, எடை, இதர நோய்களைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். பழங்களை கடித்துச் சாப்பிட வேண்டுமே தவிர, சாறாக அருந்தக் கூடாது.
சிறுநீரகங்கள் ஜாக்கிரதை!
'அதுதான் சர்க்கரைக்கு மருந்து, மாத்திரைகள் இருக்கின்றனவே...' என்றபடி இஷ்டம்போல மாத்திரைகளை அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தால்... ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்னைகள் ஆரம்பமாகிவிடும். இத்தனை நாட்களாக உங்களுக்கு மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்த அதே டாக்டர், ''அடடா... கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சே. ம்... இத்தனை வருஷமா மருந்து, மாத்திரையா சாப்பிட்டிருக்கீங்க. அதோட வீரியம் சும்மா இருக்குமா, கிட்னியை காலி பண்ணிடுச்சு'' என்று சிம்பிளாக சொல்லிவிடுவார். பிறகென்ன, கிட்னி பிரச்னையும் சேர்ந்து கொள்ள, வாழ்க்கையே நரகமாகிவிடும்!
சர்க்கரை நோயாளிகளுக்கு அழுத்தத்தைத் தாங்கக் கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இப்படி ஆறில் ஒருவருக்கு வருவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இது, கால்களைத் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னையை உருவாக்குகிறது. காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், வீக்கம், நகங்களில் பிரச்னை என இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

The largest anaconda I have ever seen

Nov 11, 2013

பிலிப்­பைன்ஸை தாக்­கிய ஹையான் சூறா­வ­ளியில் சிக்கி குறைந்­தது 10,000 பேர் பலி­யா­கி­யி­ருக்­கலாம் என அஞ்சப்படுகிறது. — படங்கள்: பேரழிவை ஏற்படுத்திய பிலிப்பைன்ஸ் சூறாவளி (14 படங்க










உலகம் | திங்கள், நவம்பர் 11, 2013,








பிலிப்பைன்ஸ் நாட்டில் 'ஹையான்' புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அதில் சமர், லிதே தீவுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 325 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

அதனால் பலத்த மழை கொட்டியது. கடலில் சுமார் 15 அடி முதல் 20 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. அதனால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

'ஹையான்' புயலின் கோர தாண்டவத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள லிதே தீவு கடும் பாதிப்புக்குள்ளானது. லிதே மாகாணத்தின் தலைநகர் தக்லோபான் நகரம் ஆக்ரோஷமான கடல் அலைகளால் கடும் சேதத்துக்கு ஆளானது.

இதனால் கடற்கரை ஓரம் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இது தவிர வெள்ளப் பெருக்கில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

பிலிப்பைன்சை சூறையாடிய ஹயான் புயல் வியட்னாமையும் தாக்கியது! - அடுத்த குறி சீனா.


பிலிப்பைன்சை சூறையாடிய ஹயான் புயல் வியட்னாமையும் தாக்கியது! - அடுத்த குறி சீனா.
[Monday, 2013-11-11
News Service பிலிப்பைன்ஸ் புரட்டி போட்ட ஹயான் புயல் வியட்நாமில் இன்று கரையை கடந்தது. பிலிப்பைன்சை தாக்கிய ஹயான் புயலில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அங்கு 315 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியில் 44 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களில் ஹெலிக்கொப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் அரசுக்கு அமெரிக்கா, ஜெர்மனி பொன்ற நாடுகள் உதவ வந்துள்ளன. இந்தநிலையில், ஹயான் புயல் வியட்நாம் நாட்டின் மத்திய கடற்பகுதியான ஹைவாங்கில் இன்று அதிகாலை கரையை கடந்தது.
  
வலு இழந்த நிலையில் சீனாவை நோக்கி இது நகர்கிறது, முன் எச்சரிக்கையாக கடலோர

பூரான் கடிதால் என்ன செய்வது ?

பூரான் கடிதால் என்ன செய்வது ?

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.
பூரான் கடிதால் என்ன செய்வது ?

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். 1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின்

Nov 10, 2013

பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை மிரட்டும் ஹையான் சூறாவளி:6 லட்சம் மக்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை மிரட்டும் ஹையான் சூறாவளி:6 லட்சம் மக்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை மிரட்டும் ஹையான் சூறாவளி:6 லட்சம் மக்கள் வெளியேற்றம்
ஹனாய்,நவ.11-

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்சில் 7000-த்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. வருடத்திற்கு 20 பெரும் புயல்களை சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மையப்பகுதியில் ஹையான் என்ற கடும் சூறாவளி தாக்கியது.

மணிக்கு 315 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த சூறாவளிக்கு லெய்ட் மாகாணத்தின் டாக்லோபான் நகரின் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் தரைமட்டமாயின. 2,22,000 மக்களை கொண்ட இந்நகரில் 100-க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே இறந்து கிடந்தனர்.

மேலும் சூறாவளிக்காற்றுடன் 10 மீட்டர் அளவிற்கு எழுந்த சுனாமி போன்ற கடல் அலைகள் தாக்கியதில் கடற்கரை நகரங்களின் வீடுகளும் பாதிக்கப்பட்டன. மின்சாரம், சாலை போக்குவரத்துகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாததால் உயிருக்காக பலர் போராடிக்

வெங்காய வைத்தியம்

வெங்காய வைத்தியம்

* வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும்.

* குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும்.

* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.

* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

* காதிரைச்சல், காதில் சீழ்வடிதல் முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.

* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.

* வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தவிர்க்கலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் இது பயன்படுகிறது.

* இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.

* முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வ¡ந்திபேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது வாந்திபேதியின்போது உண்ட¡கும் தாகம், அயர்ச்சி முதலியவைகளுக்கு நல்லது.

* பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

* நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்:-

ஈரப்பதம் - 86.6%
புரதம் - 1.2%
கொழுப்புச்சத்து - 0.1%
நார்ச்சத்து - 0.6%
தாதுச்சத்து - 0.4%
கார்போஹைட்ரேட்டுகள் - 11.7%
வெங்காய வைத்தியம்
* வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும்.

* குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும்.

* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.

* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

* காதிரைச்சல், காதில் சீழ்வடிதல் முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.

* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு

கணனிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு வைரஸ்

கணனிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு வைரஸ் போன்ற கோப்பினை உருவாக்குவோமா?

இதனை நீங்கள் உருவாக்கிய பின் இதனை Double Click செய்தால் குறிப்பிட்ட கணணி Restart செய்யப்படும். இதனை வேடிக்கைகாக உங்கள் நண்பருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.
 

இதற்கு பின்வரும் படிமுறையினை பின்பற்றுக 

1. Desktop இல் Right Click செய்து New Shortcut என்பதனை தெரிவு செய்க.

2. இனி தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் பகுதியில் C:\WINDOWS\system32\shutdown.exe -r -t 00 என்பதனை இட்டு Next அலுத்துக.

3. பின் தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் இடத்தில் குறிப்பிட்ட கோப்புக்கு நீங்கள் விரும்பும் பெயரைஇட்டு Finish அலுத்துக.

 4. இனி நீங்கள் இட்ட பெயரில் Desktop இல் ஒரு Shortcut உருவாகியிருப்பதனை அவதானிப்பீர்கள். பின் அதனை Right Click செய்து Properties ஊடாக குறிப்பிட்ட கோப்புக்கு கவர்சிகரமான ஒரு Icon ஐ இடுக.

 அவ்வளவுதான்.

இனி அதனை யாரும் Double Click செய்தால் கணணி Restart ஆகும்.

#நன்றிபோன்ற கோப்பினை உருவாக்குவோமா?
கணனிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு வைரஸ்

இதனை நீங்கள் உருவாக்கிய பின் இதனை Double Click செய்தால் குறிப்பிட்ட கணணி Restart செய்யப்படும். இதனை வேடிக்கைகாக உங்கள் நண்பருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.


இதற்கு பின்வரும் படிமுறையினை பின்பற்றுக

1. Desktop இல் Right Click செய்து New Shortcut என்பதனை தெரிவு செய்க.

2. இனி தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் பகுதியில் C:\WINDOWS\system32\shutdown.exe -r -t 00 என்பதனை இட்டு Next அலுத்துக.

3. பின் தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் இடத்தில் குறிப்பிட்ட கோப்புக்கு நீங்கள் விரும்பும் பெயரைஇட்டு Finish அலுத்துக.

4. இனி நீங்கள் இட்ட பெயரில் Desktop இல் ஒரு Shortcut உருவாகியிருப்பதனை அவதானிப்பீர்கள். பின் அதனை Right Click செய்து Properties ஊடாக குறிப்பிட்ட கோப்புக்கு கவர்சிகரமான ஒரு Icon ஐ இடுக.

அவ்வளவுதான்.

இனி அதனை யாரும் Double Click செய்தால் கணணி Restart ஆகும்.

#நன்றி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...