Dec 2, 2013

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்




மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!



'என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம்.
'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.
நம் உடல் செல்கள் உற்பத்திய£வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' என்றவர் கொலஸ்ட்ரால் கண்டறியும் முறை, தடுக்கும் வழிகளைப் பட்டியலிட்டார்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்
கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை

நோக்கியா 515


நோக்கியாவின் இரண்டு சிம் போன்களில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான நோக்கியா 515 சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. 

இரண்டு சிம் இயக்க போன்களைத் தாமதமாகவே தயாரித்த நோக்கியா நிறுவனம், தற்போது இந்த வரிசையில் பல போன்களைக் கொண்டு வந்துள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்கலாம். 

இதன் பரிமாணம் 114 x 48 x 11 மிமீ. எடை 101.1 கிராம். பார் டைப் வடிவிலான இதில் வழக்கமான ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. 

இதன் டச் ஸ்கிரீன் திரையில் மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. 

இதன் மைக்ரோ எஸ்.டி. போர்ட்டில் கார்ட் மூலம் 32 ஜிபி வரை இதன் ஸ்டோரேஜ் திறனை உயர்த்தலாம். இதன் முகவரி ஏட்டில், 1000 முகவரிகள் வரை பதிந்து வைக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் ஆகியவை 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி திறனை அளிக்கின்றன

பேஸ்புக் களப் பதிவு நீக்கம்


வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நாம் நம் உணர்ச்சி உந்துதலில், பல தகவல்களை, செய்திகளை, நம் கருத்தினப் பதிவு செய்துவிடுகிறோம். பின்னரே, சிலவற்றைப் பதியாமல் இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். 

பதிந்தவற்றை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் பலர் உள்ளனர். இது மிகவும் எளிதான ஒன்றாகும். நீங்கள் பதிந்தவற்றை எப்போது வேண்டுமானாலும், நீங்கள் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.


நீங்கள் மாற்ற அல்லது நீக்க விரும்பும் பதிவின் வலது மூலையில், கர்சரைக் கொண்டு சென்று சற்று நகர்த்திப் பார்க்கவும். அப்போது கீழ் நோக்கிய சிறிய அம்புக் குறி ஒன்று காட்டப்படும். 

அதனைக் கிளிக் செய்தால், பதிவினை மாற்ற (edit or delete) அல்லது நீக்க என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து

கூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2





ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் தமிழ் உள்ளீடு செய்வதற்கான, பயன்பாட்டு தொகுப்பான, செல்லினம், தற்போது கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு பதிப்பு 2 ஆகக் கிடைக்கிறது. 

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், தமிழில் உள்ளீடு செய்வதற்கென, மலேசியா வினைச் சேர்ந்த முத்து நெடுமாறன், செல்லினம் என்ற பயன்பாட்டு தொகுப்பினை பத்து மாதங்களுக்கு முன்பு, தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

இந்த தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் கொடுத்த பின்னூட்டத்திலும், ஆய்வின் அடிப்படையிலும், இந்த தொகுப்பு மேம்படுத்தப்பட்டு, ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் செல்லினம் பதிப்பு 2 ஆக வெளிவந்துள்ளது. 

இதனையும் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இலவசமாகத் தங்களின் ஆண்ட்ராய்ட்

Nov 29, 2013

இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதா? மீளப் பெற என்ன செய்யலாம்?


இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது என்றே கூறலாம்.


மேலும், தற்போது கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால், இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை ஆகிறது. குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்; மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது.

பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம். நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங் களையும் செய்து பார்க்கலாமே வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள்.

ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை ஆன் செய்திடுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துவோரே அதிகம். அவர்கள் அதனை மட்டும் ரீபூட் செய்தால் போதும். உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள்.

மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று பொருள். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள்.

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள். அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் குறையினைத் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில், ரன் பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் மானிட்டர் திரையில், கறுப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும்.

அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig /all என டைப் செய்திடுங்கள். உங்களுடைய default gateway மற்றும் DNS servers அறிந்து கொள்ளுங்கள். பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள். பதில் கிடைக்கிறதா? இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சினை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும்.

traceroute என்பது ஒரு கட்டளைச் சொல். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கெங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும் ஒரு கட்டளை. traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியைத் தர வேண்டும்.

பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்துவிட்டுப் பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

முதலில் உங்கள் யூசர் நேம் கொடுக்கவும். அவர்கள் உங்கள் அக்கவுண்ட்டினைச் சார்ந்த மேலும் சில தகவல்களை உறுதி செய்வார்கள். அவர்கள் கூறும் செயல்பாடுகளையும் பொறுமையாக மேற்கொண்டு, பதில் கொடுங்கள்.

நிறுவனத்தின் சர்வரில் பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனே அதனை உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் குறை எந்த எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எத்தனை மணி நேரத்திற்குள் அது சரி செய்யப்படும் எனவும் கூறுவார்கள். பொறுமையாகக் காத்திருக்கவும்.

தொடர்ந்து சரி ஆகவில்லை என்றால், மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தினைத் தொடர்பு கொண்டு நினைவு படுத்தவும். நிச்சயம் இணைப்பு சரி செய்யப்படும்


இன்று கம்பியூட்டர் துறையில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருப்பது இருப்பது யார் என்று கேட்டால் நாம் அனைவரும் கூறும் பதில் மைக்ரோசாப்ட் தான். மைக்ரோசாப்ட் கம்பெனி ஆரம்பித்தவுடனே இவ்வளவு பெரிய இடத்துக்கு வரவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


மிகவும் கஷ்டப்பட்டு போராடி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறது அத்தகைய மைக்ரோசாப்டின் மிகப் பெரும் சாதனை எது என்றால் அது விண்டோஸ் தான். இன்றும் ஓ.எஸ் களில் விண்டோஸ் தான் நம்பர் 1 இது யாரும் மறுக்க முடியாத உண்மை இந்த மைக்ரோசாப்டின் நீங்கள் அறியாத சில உண்மைகளை இங்கு பார்ப்போமா.....

உலகில் விண்டோஸ் பயன்படுத்துவர்களை கணக்கில் எடுத்தால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையையும் விஞ்சும்

விண்டோஸ் 95 மொத்தம் விற்றது 4 கோடி பிரதிகள் மட்டுமே ஆனால் இன்று விண்டோஸ் 8 இதுவரை மட்டும் 10 கோடி பிரதிகள் விற்றுள்ளது மைக்ரோசாப்ட்

Cooksville-பகுதியில் பாரிய தீவிபத்து

mississaugafiredundasnov28-635x423Cooksville-பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டு கட்டிடத்தின் ஒருபகுதி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் 1-பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
டன்டாஸ் வீதி கிழக்கில் ஹியுரொன்ராறியோ கிழக்கு வீதிக்கண்மையில் அமைந்துள்ள பாத்திமா குறோசர்ஸ்சில் அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக மிசிசாகா தீயணைப்பு அவசர சேவை பிரிவு தலைமை அதிகாரி அலன் ஹில்ஸ் தெரிவித்துள்ளார்.
மளிகைக் கடையில் ஏற்பட்ட இந்த தீ அக்கடைத்தொடரில் அமைந்திருந்த ஏனைய கடைகளிலும் பரவ முன்னதாக காலை 7.30மணியளவில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டனர். தீயை அணைப்பதற்கு ஆயிரக்கணக்கான கலன்கள் தண்ணீர் பாவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அவ்விடத்தில் ஏற்பட்ட வெப்பமான பகுதிகள் மற்றும் சிறிய சுவாலைகள் போன்றனவற்றை

முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவக் குணம்

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. ஆகையினால் தினம் ஒரு கீரையைப் பயன்படுத்தி முன் கூட்டியே நோய் வராமல் பாதுகாப்போம்.
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கையும் ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் விற்றமின் A,B,C  ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. இது குளிர்ச்சியைத் தர வல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது.
பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். சிலருக்கு குரல் வளையில் வீக்கமும் வலியும் இருக்கும். அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும் வலியும் குணமாகும். வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது. உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க உதவும்.
மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றில் வேண்டாத புழு, பூச்சிகள் இருந்தாலும் அதை மலத்துடன்

50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்

பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது.
Freedom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Freedom Ship இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்பையும் கப்பல் வழங்குகிறது.
 
கப்பல் உருவாக்கப்பட்டுள்ள விதம் குறித்தான வரைபடத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு கப்பலில் உலகத்தைச் சுற்றிவர பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...