Apr 2, 2014

ஆமவாதம் ஆயுர்வேத மருத்துவம்:-


ஆமவாதம் ஆயுர்வேத மருத்துவம்:-

மூட்டுக்களில் தீவிர வலி மூட்டுகளை அசைப்பது பெரும் பிரயத்தனமாகும்.
சிகிச்சை செய்யாவிட்டால் பாதிப்பு நிரந்தரமாகி விடும். மூட்டுகள் விறைத்து விடும்.

ஜுரம், வலியுடன், பாதிக்கப்பட்ட பகுதிகள் விறைத்து விடும். அதுவும் அதிகாலையில் அதிகமிருக்கும்.

விரல்கள், மணிக்கட்டு, முழங்கை, முட்டி, கணுக்கால் - இவை பெரும்பாலும் பாதிக்கப்படும் உறுப்புகள்.

பொதுவான ஆயுர்வேத சிகிச்சை

இலகுவான உணவு, புலால், குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சி உணவுகள், மைதாவில் செய்யப்பட்ட உணவு, சீஸ், நார்ச்சத்து குறைந்த உணவுகள் - இவற்றை தவிர்க்க வேண்டும். தயிர், மீன், வெல்லம், பால், உ.பருப்பு, அரிசிமாவு இவற்றையும் குறைக்கவும்.

ஸ்வேதனா - (ஒத்தடம்), கசப்பான, கடுமையான உணவு, கழிவுப்பொருள்களை அகற்றுதல், தைல சிகிச்சை, வஸ்தி (எனிமா)

உள்ளுக்கு ஆயுர்வேத மருந்துகள்
ரஸ்நாதஷமூலா கஷாயம்
ரஸ்னபஞ்சகா
சுண்டி - கோக்சூரக்ஷ்யா
வைஸ்வாரை சூரணம்
யோக ராஜ குக்குலு
சிம்ஹநாத குக்குலு
ஸைந்தவாடி தைலம் (வஸ்தி சிகிச்சைக்கு)
க்ஷ£ர வஸ்தி (வஸ்தி சிகிச்சைக்கு)

வெளி சிகிச்சைக்கு

மணல் நிரம்பிய முடிச்சால் ஒத்தடம்
நீராவி குளியல், பாதிக்கப்பட்ட இடத்தின் மீது நீராவி செலுத்தல்

வாத - ரக்தா (Gout)

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால், மூட்டுக்களில் தேங்கி அழற்ச்சியை உண்டாக்கி வலி அதிகமிருக்கும். முதலில் சிறு மூட்டுகளில் வலி ஏற்படும். எரிச்சல், நிறம் மாறுதல் ஏற்படும்.
வாத சீர் குலைவினால், மூட்டுகளில் ரத்தம் தேங்கிவிடுவது காரணம் என்கிறது ஆயுர்வேதம்.

சிகிச்சை உள்ளுக்கு

குடூச்சிஸ்தவா, குக்குலு சேர்ந்த குடூச்சிஸ்தவா, கைசோரா குக்குலு.
வெளிப்பூச்சிக்கு - பிண்ட தைலம்.

சந்தி - வாதா (Osteo - arthritis)

பரவலாக காணப்படும் மூட்டுவியாதி. மூட்டின் குருத்தெலும்புகள், மூட்டுகளின் முடிவில் உள்ள மிருதுவான வழவழப்பான லைனிங் (லிவீஸீவீஸீரீ) இவற்றை பாதித்து மூட்டின் வடிவத்தையே மாற்றும். மூட்டில் திரவம் சேர்ந்து, சுற்றியுள்ள தசைகள், தசை நாண்கள் எல்லாமே பழுதடைந்து வலியை உண்டாக்கும்.

சந்தி வாதத்தில் மூட்டுக்கள் உராய்வதால் நடக்கும் போது வலி ஏற்படும்.

உள் சிகிச்சை
பாலாதி தைலம்
மஹாவல தைலம்
அஸ்வகந்தாக்ய க்ருதம்
வெளி சிகிச்சை
கோலகுலத்தாடி லேபம்
பற்று போடுதல், தைல சிகிச்சை, மசாஜ், கட்டுதல் முதலியன
லகுவான உடல் பயிற்சி, நீச்சல்,
சத்தான உணவு (பால் முதலிய) வைகளை உட்கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் தீராத சிக்கல், மலச்சிக்கல் தீர



மலச்சிக்கல் தீராத சிக்கல், மலச்சிக்கல் தீர:-

உலகில் உள்ள அனைவரும், தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் வராமல் இருந்திருக்க மாட்டார்கள். மலச் சிக்கலுடனேயே பலர் வாழ்கின்றனர்.

மலச்சிக்கல் மலம் கழிப்பதில் ஏற்படும் கோளாறு. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழித்தல் 'நார்மல்'. மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒன்று வெளியேறும் மலத்தின் அளவு குறையும். இரண்டாவது பல நாட்களுக்கு மலமே வெளியேறாது. அதுவும் மலம் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் வயிறு (மலக்குடல்) நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். உடலில் பல நாள் கழிவுப் பொருட்கள் தேங்கியிருப்பது ஒரு வித சங்கடத்தை உண்டாக்கும். நாள்பட்ட மலச்சிக்கல் பல கோளாறுகளை உண்டாக்கும்.

மலச்சிக்கல், வயிற்று வலியை உண்டாக்கலாம். மலம் கெட்டிப்பட்டு

வெப்பம் நல்லது:-


வெப்பம் நல்லது:-

உடம்பில் உயிர் நிலைத்திருக்க இன்றியமையாதவையாக இருப்பவை நீரும், நெருப்பும். இவை இரண்டும் இல்லையென்றால், உடம்பில் உயிர் தங்காது. உடம்பு பிணமாகிப் போகும். உடம்பில் நெருப்பு என்று குறிப்பிடுவது, சூடாகும். சூடு இல்லாமல் போனால், ரத்தம் உறைந்துவிடும். பனிமலைகளில் ஆடையோ தகுந்த பாதுகாப்போ இல்லாமற் போனால், ரத்தம் உறைந்து இறக்க நேரிடும். ஆகவே, உடம்பிலுள்ள சூடு, உடலெங்கும் பரவியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உடம்பில் சூடு இல்லாத இடமோ, அல்லது உறுப்புகளோ இல்லை. உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் சூடு பரவி நிறைந்துள்ளது. அதனால், அவை இயங்கிக் கொண்டு இருக்கின்றன.


நீரின்றி அமையாது ஆரோக்கியம்:-



இயற்கை மருத்துவம் பல அங்கங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் நீர் மருத்துவம். மனித உடல் பஞ்சபூதங்களின்கூட்டாகவும், அண்ட கோளங்களின் பிம்பமாகவும் அமைந்திருக்கிறது. மனித உண்ணும் உணவை ஒதுக்கிவிட்டு நீர், காற்று, சூரிய ஒளி ஆகிய இம்மூன்றை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தால், மனித உடல் அழிந்துவிடாமல் நீண்ட நாள் வாழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு ஆதாரமாக விளங்குவது நீர் மருத்துவம்!

நிலவுலகம் தோன்றி சுமார் 60 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலத்தில் முதன் முதலில் உயிரினம் நீரிலிருந்துதான் தோன்றியது. நீரில் தோன்றிய உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியால்தான் மனிதன் நிலத்துக்கு வந்தடைந்தான். பரிணாம வளர்ச்சியில் மேலும் வளர்ந்து மனிதன் தோன்றினான். மனிதனின் ஆதி உணவு நீர் என்பதால், நீர் மனித உடலைப் பாதுகாக்கும் என்று நம்பலாம். நீர் மருத்துவம் மனித உடலையும் உயிரையும்

பெண்கள் இதய நோயை தக்காளி கட்டுப்படுத்தும்:-



அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:

அசைவ உணவை காட்டிலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும். காய்கறிகளில் முக்கிய சத்துகளாக பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மக்னீசியம், கால்சியம், இரும்பு, போலேட் (பி வைட்டமின்), வைட்டமின் சி, இ, கே, நார்சத்து ஆகியவை உள்ளன.அதிக உடல் எடை ‘டைப் 2’ சர்க்கரை நோய்க்கு அழைத்து செல்லும். இது பின்னர் இதய நோய், கிட்னி செயலிழப்பு, விரைவில் இறப்பு போன்றவற்றுக்கு காரணங்கள் ஆகின்றன. காய்கறிகள் வயிற்றை நிரப்பி, பசியை குறைக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்சத்து இதய நோய்க்கு காரணமாகும் கொழுப்பை குறைக்கிறது. மலச்சிக்கலை

உணவே மருந்து

 

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்:-


இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது
தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம்
ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்
சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள்

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது:-



உணவே மருந்து

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது... இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது..

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்.. ஆனால் இப்போது டைனிங் டேபிள்.... இது சரியா தவறா ?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன..

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.

Apr 1, 2014

அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்


உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது. ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது இன்னும் பல கொடிய நோய்கள் வராமல் தடுக்கிறது. சரி, இப்போது கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
புற்றுநோய் கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொன்றுவிடும்.
இதய நோய் கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வர, இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.
நீரிழிவு நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலையில் 10 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைக்கலாம்.எடை குறைவு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது கரைந்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்கண் பார்வை பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலை தூக்கி எறியாமல் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.இனிமையான குரல் கறிவேப்பிலை இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், குரலானது இனிமையாகும்.


Mar 31, 2014

சாதனை படைத்தது Fitbit அப்பிளிக்கேஷன்



   
 
 
 
 
 
 
 

உடல் ஆரோக்கியத்தை சிறந்த நிலையில் பேணுவதற்கு உதவும் ஒரு இலத்திரனியல் சாதனமே Fitbit ஆகும்.இதனைப் பயன்படுத்தி ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க முடியும்.
தற்போது Android மற்றும் iOS உட்பட 44 வகை சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படும் இச்சாதனத்தின் அப்பிளிக்கேஷன் ஆனது Android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களுக்காக 1 மில்லியன் தடவைகள் வரை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
Fitbit Android App Passes 1 Million Downloads, Now Supports 44 Devices
Fitbit has today announced that its activity and sleep trackers now sync directly with 44 Android and iOS devices, providing an additional 26 devices for users to chose from since January of this year.
The Fitbit application will be pre-loaded on the new HTC One M8 smartphone that was announced this week and has already been through a teardown by the iFixit team.
Fitibit also explained that Android users are rapidly adopting the Fitbit fitness tracker and application and have already downloaded the app more than 1 million times from the Google Play Store. Fitbit explain :
“The free Fitbit app accounted for 83 percent of device installs on Google Play among top fitness tracker apps. The Distimo study also verified that Fitbit dominates companion apps for fitness trackers competition on iOS with 72 percent of downloads.”

அரிசியின் ரகசியங்கள்!




  
 


அரிசியால் ஆன சோறு, அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவற்றை விரும்பி உண்ணும் மனிதன் அவற்றின் குணங்ளையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.
கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.
ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.
பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.
புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும், ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.

Oculus நிறுவனத்தை வாங்குகிறது பேஸ்புக்




வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஆக்குலஸ் நிறுவனத்தை வாங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.சமூக வலைத்தளங்களில் ஜாம்பவனாக திகழும் பேஸ்புக், சமீபகாலமாக நவீன தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தான் கடந்த பிப்ரவரி 19ம் திகதி வாட்ஸ் ஆப் நிறுவனத்தை வாங்கியது.
இந்த வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட ஒரு மாதத்தில் ஆக்குலஸ்(Oculus) நிறுவனத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது.
வீடியோகேமிற்கான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்(Virtual Reality Headset) தொழில்நுட்ப பணிகளை நிறைவேற்றி வருகிறது, இந்த நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறது.
இந்நிறுவனத்தை ரூ.12 ஆயிரம் கோடிக்கு வாங்குவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதில் ஒரு பகுதி பணமாகவும், ஒரு பகுதி பங்குகளாகவும் வழங்கப்படும் என்றும் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற நவீன தொழில்நுட்ப சேவைகளை வாங்கி அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால், வரும் காலங்களில் சமூக இணையதளத்தின் மூலம் மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் என்று பேஸ்புக் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் தெரிவித்துள்ளார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...