Apr 3, 2014

நோயற்ற வாழ்வே குறையற்ற வாழ்வு : இமயம் நிஜமாகவே சரியும் வறட்சியால் உலகம் அழியும்- ஐ...

நோயற்ற வாழ்வே குறையற்ற வாழ்வு : இமயம் நிஜமாகவே சரியும் வறட்சியால் உலகம் அழியும்- ஐ...: டெல்லி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை உலக நாடுகள் சந்திக்க தயாராக வேண்டும். ...

வறட்சியடைந்த கண்களை கையாளுவதற்கான


 கண்களில் அடிக்கடி கண் எரிச்சல்கள் ஏற்படுகிறதா? அப்படியானால் அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கண் இமைகளுக்கு அடியில் இருக்கும் குழல்களின் வழியாகத் தான் கண்ணீர் சுரக்கும். இந்த குழாய் வறண்டு போவதையே உலர்ந்த கண்கள் என்று கூறுகின்றனர். குளிர் மற்றும் கோடைக்காலத்தின் போது இந்த பிரச்சனை இன்னமும் தீவிரமாக இருக்கும். அதற்கு காரணம், இக்காலத்தில் நிலவும் வறண்ட காற்றும், வறண்ட வெப்பமும் தான். கண்களின் சரியான செயல்பாட்டிற்கு கண்ணீர் அவசியமானதாக உள்ளது. அதற்கு காரணம், கண் இமைகள் கண்மணிகளோடு ஒன்றிட கண்ணீர் ஒரு மசகிடுதலாக செயல்படுகிறது. இதனால் கண்மணிகள் ஈரப்பதத்துடன் இருக்க கண்ணீர் உதவுகிறது. உலர்ந்த கண்கள் உங்கள் பார்வை திறனை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சில நேரம் கண்மணிகளுக்கு தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். இப்படி குறையுள்ள பார்வை திறனுடன் தினமும் செய்யும் வேலைகளை ஒழுங்காக செய்ய முடியாது தானே. சமீபத்திய செய்தி

இமயம் நிஜமாகவே சரியும் வறட்சியால் உலகம் அழியும்- ஐ.நா எச்சரிக்கைl

டெல்லி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை உலக நாடுகள் சந்திக்க தயாராக வேண்டும். ஆசியா கண்டத்தை பொறுத்தவரை இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கடும் வெயில் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய அபாயகரமான நிலைமை ஏற்படலாம் என ஐ.நா வின் புவியியல் சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. புவி வெப்பமடைதல், பாறைகள் நகர்வு உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட ஐ.நா. சபையின் கமிட்டி இது பற்றிய தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொடுமையான வெயில்: இதன்படி, இந்த நூற்றாண்டின் மத்தியில் ஆசியா கண்டத்தை பொறுத்த வரையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் மிகக்கடுமையான வெயிலை மட்டுமல்லாது குடிநீர் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அத்துடன் உணவு

Apr 2, 2014

ஸ்மார்ட் போன் அனைத்திலும் இலவச இணைய வசதி

ஸ்மார்ட் போன் அனைத்திலும் இலவச இணைய வசதி


உலக அளவில், ஏறத்தாழ 700 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள், இந்த போன்களின் வழியே இணைய வசதிகளைப் பெறுவதில்லை. 

சிலர் இவற்றின் வழியே இணைய இணைப்பு பெறலாம் என்ற நிலையில் அது குறித்து யோசிப்பதே இல்லை. 

சிலர், இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதனையே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

உலகில் உள்ள மக்கள் அனைவரையும் நட்பு பாலத்தில் இணைப்பதற்குத் தன் நிறுவனம் உதவியாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தினைக் கொண்டு இயங்கும் பேஸ்புக் நிறுவனம், ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும், இணைய இணைப்பினை 

இலவசமாகத் தருவது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறது. 

பல கோடி மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை இணையத்திற்கென பயன்படுத்தாத நிலையிலேயே, பன்னாட்டளவில், இணையம் வழியேகோடிக்கணக்கான பண மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அனைத்து மக்களும் பயன்படுத்தும் காலம் வருகையில், நிச்சயம் இது பல மடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளது. சமுதாய நிலையிலும் மக்களிடையே மாற்றங்கள் பல ஏற்படும். 

எனவே தான், பேஸ்புக் எப்படியாவது, ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் இணைய இணைப்பினை இலவசமாக வழங்க முயற்சி எடுக்கிறது. இது குறித்து, ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடன், பேஸ்புக் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

கணணி செய்தி தெரிந்து கொள்வோம்: Pendrive யை RAM ஆக பயன்படுத்தும் வழிமுறைகள்





கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கணனியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.

ருத்ராட்சம்: ருத்திராட்சம் மகிமைகள்

ருத்ராட்சம்: ருத்திராட்சம் மகிமைகள்: மருத்துவ குணங்கள்  ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய  இடத்தில் தடவினால் ...

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம்


கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.
http://sathiyam.tv/tamil/wp-content/uploads/2013/12/kollu-1.jpgகொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த… இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை

ஆமவாதம் ஆயுர்வேத மருத்துவம்:-


ஆமவாதம் ஆயுர்வேத மருத்துவம்:-

மூட்டுக்களில் தீவிர வலி மூட்டுகளை அசைப்பது பெரும் பிரயத்தனமாகும்.
சிகிச்சை செய்யாவிட்டால் பாதிப்பு நிரந்தரமாகி விடும். மூட்டுகள் விறைத்து விடும்.

ஜுரம், வலியுடன், பாதிக்கப்பட்ட பகுதிகள் விறைத்து விடும். அதுவும் அதிகாலையில் அதிகமிருக்கும்.

விரல்கள், மணிக்கட்டு, முழங்கை, முட்டி, கணுக்கால் - இவை பெரும்பாலும் பாதிக்கப்படும் உறுப்புகள்.

பொதுவான ஆயுர்வேத சிகிச்சை

இலகுவான உணவு, புலால், குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சி உணவுகள், மைதாவில் செய்யப்பட்ட உணவு, சீஸ், நார்ச்சத்து குறைந்த உணவுகள் - இவற்றை தவிர்க்க வேண்டும். தயிர், மீன், வெல்லம், பால், உ.பருப்பு, அரிசிமாவு இவற்றையும் குறைக்கவும்.

ஸ்வேதனா - (ஒத்தடம்), கசப்பான, கடுமையான உணவு, கழிவுப்பொருள்களை அகற்றுதல், தைல சிகிச்சை, வஸ்தி (எனிமா)

உள்ளுக்கு ஆயுர்வேத மருந்துகள்
ரஸ்நாதஷமூலா கஷாயம்
ரஸ்னபஞ்சகா
சுண்டி - கோக்சூரக்ஷ்யா
வைஸ்வாரை சூரணம்
யோக ராஜ குக்குலு
சிம்ஹநாத குக்குலு
ஸைந்தவாடி தைலம் (வஸ்தி சிகிச்சைக்கு)
க்ஷ£ர வஸ்தி (வஸ்தி சிகிச்சைக்கு)

வெளி சிகிச்சைக்கு

மணல் நிரம்பிய முடிச்சால் ஒத்தடம்
நீராவி குளியல், பாதிக்கப்பட்ட இடத்தின் மீது நீராவி செலுத்தல்

வாத - ரக்தா (Gout)

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால், மூட்டுக்களில் தேங்கி அழற்ச்சியை உண்டாக்கி வலி அதிகமிருக்கும். முதலில் சிறு மூட்டுகளில் வலி ஏற்படும். எரிச்சல், நிறம் மாறுதல் ஏற்படும்.
வாத சீர் குலைவினால், மூட்டுகளில் ரத்தம் தேங்கிவிடுவது காரணம் என்கிறது ஆயுர்வேதம்.

சிகிச்சை உள்ளுக்கு

குடூச்சிஸ்தவா, குக்குலு சேர்ந்த குடூச்சிஸ்தவா, கைசோரா குக்குலு.
வெளிப்பூச்சிக்கு - பிண்ட தைலம்.

சந்தி - வாதா (Osteo - arthritis)

பரவலாக காணப்படும் மூட்டுவியாதி. மூட்டின் குருத்தெலும்புகள், மூட்டுகளின் முடிவில் உள்ள மிருதுவான வழவழப்பான லைனிங் (லிவீஸீவீஸீரீ) இவற்றை பாதித்து மூட்டின் வடிவத்தையே மாற்றும். மூட்டில் திரவம் சேர்ந்து, சுற்றியுள்ள தசைகள், தசை நாண்கள் எல்லாமே பழுதடைந்து வலியை உண்டாக்கும்.

சந்தி வாதத்தில் மூட்டுக்கள் உராய்வதால் நடக்கும் போது வலி ஏற்படும்.

உள் சிகிச்சை
பாலாதி தைலம்
மஹாவல தைலம்
அஸ்வகந்தாக்ய க்ருதம்
வெளி சிகிச்சை
கோலகுலத்தாடி லேபம்
பற்று போடுதல், தைல சிகிச்சை, மசாஜ், கட்டுதல் முதலியன
லகுவான உடல் பயிற்சி, நீச்சல்,
சத்தான உணவு (பால் முதலிய) வைகளை உட்கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் தீராத சிக்கல், மலச்சிக்கல் தீர



மலச்சிக்கல் தீராத சிக்கல், மலச்சிக்கல் தீர:-

உலகில் உள்ள அனைவரும், தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் வராமல் இருந்திருக்க மாட்டார்கள். மலச் சிக்கலுடனேயே பலர் வாழ்கின்றனர்.

மலச்சிக்கல் மலம் கழிப்பதில் ஏற்படும் கோளாறு. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழித்தல் 'நார்மல்'. மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒன்று வெளியேறும் மலத்தின் அளவு குறையும். இரண்டாவது பல நாட்களுக்கு மலமே வெளியேறாது. அதுவும் மலம் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் வயிறு (மலக்குடல்) நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். உடலில் பல நாள் கழிவுப் பொருட்கள் தேங்கியிருப்பது ஒரு வித சங்கடத்தை உண்டாக்கும். நாள்பட்ட மலச்சிக்கல் பல கோளாறுகளை உண்டாக்கும்.

மலச்சிக்கல், வயிற்று வலியை உண்டாக்கலாம். மலம் கெட்டிப்பட்டு

வெப்பம் நல்லது:-


வெப்பம் நல்லது:-

உடம்பில் உயிர் நிலைத்திருக்க இன்றியமையாதவையாக இருப்பவை நீரும், நெருப்பும். இவை இரண்டும் இல்லையென்றால், உடம்பில் உயிர் தங்காது. உடம்பு பிணமாகிப் போகும். உடம்பில் நெருப்பு என்று குறிப்பிடுவது, சூடாகும். சூடு இல்லாமல் போனால், ரத்தம் உறைந்துவிடும். பனிமலைகளில் ஆடையோ தகுந்த பாதுகாப்போ இல்லாமற் போனால், ரத்தம் உறைந்து இறக்க நேரிடும். ஆகவே, உடம்பிலுள்ள சூடு, உடலெங்கும் பரவியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உடம்பில் சூடு இல்லாத இடமோ, அல்லது உறுப்புகளோ இல்லை. உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் சூடு பரவி நிறைந்துள்ளது. அதனால், அவை இயங்கிக் கொண்டு இருக்கின்றன.


நீரின்றி அமையாது ஆரோக்கியம்:-



இயற்கை மருத்துவம் பல அங்கங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் நீர் மருத்துவம். மனித உடல் பஞ்சபூதங்களின்கூட்டாகவும், அண்ட கோளங்களின் பிம்பமாகவும் அமைந்திருக்கிறது. மனித உண்ணும் உணவை ஒதுக்கிவிட்டு நீர், காற்று, சூரிய ஒளி ஆகிய இம்மூன்றை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தால், மனித உடல் அழிந்துவிடாமல் நீண்ட நாள் வாழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு ஆதாரமாக விளங்குவது நீர் மருத்துவம்!

நிலவுலகம் தோன்றி சுமார் 60 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலத்தில் முதன் முதலில் உயிரினம் நீரிலிருந்துதான் தோன்றியது. நீரில் தோன்றிய உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியால்தான் மனிதன் நிலத்துக்கு வந்தடைந்தான். பரிணாம வளர்ச்சியில் மேலும் வளர்ந்து மனிதன் தோன்றினான். மனிதனின் ஆதி உணவு நீர் என்பதால், நீர் மனித உடலைப் பாதுகாக்கும் என்று நம்பலாம். நீர் மருத்துவம் மனித உடலையும் உயிரையும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...