Oct 13, 2014

இருமலை குணப்படுத்தும் துளசி



The main character of Tulsi in the cooling caused by cough syrup nikkuvatutan kapattai. Although the name is variously spelled, natureஇருமல் சிரப்புகளில் துளசியின் முக்கிய குணம் குளிர்ச்சியால் ஏற்படும் கபத்தை நீக்குவதுதான். பெயரில் பலவாறாக இருந்தாலும், குணத்தில் அனைத்து துளசிகளும் ஒரே செயலைத்தான் செய்கின்றன. கோவில்களில் செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரில் துளசியை போட்டு வைத்து, அந்த நீரை துளசியுடன் சேர்த்து பிரசாதமாக வழங்குவார்கள். துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். திருத்துழாய் என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கபம் சம்பந்தமான நோய்கள் மட்டுமின்றி, ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...


மாற்றம் செய்த நேரம்:9/18/2014 5:24:39 PMCirruntiyo today, without onion, broth vakaikalo, do not even think about doing vakaikalo Savouriesவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது அல்லவா? குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை. சிலவகை உணவுக்கு  ருசி சேர்ப்பதே வெங்காயம்தான். வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு  நிகர் ஏது?

வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் 

இருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா

Guava is one of the fruits available at the cheapest price. This fruit is not cheap. Has several benefits. Get 4 apple a good one

மாற்றம் செய்த நேரம்:10/13/2014 5:41:26 PM

மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல. பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாபழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாபழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாபழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.

Oct 12, 2014



 













சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்https://scontent-

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

விஷத்தை விரட்டி அடிக்கும் அருகம்புல் !

அருகம்புல் ஜூஸ்

Arukampul juice
புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
பொதுவாக செயற்கை பானங்களை உட்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு, இயற்கையின் வரப்பிரசாதங்கள் பற்றியும், அதன் மகத்துவங்கள் பற்றியும் தெரியாமல் உள்ளது.
இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளின் மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம், கற்றாழை, வேப்பிலை மற்றும் துளசி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் அருகம்புல் என்பது விநாயக இறைவனுக்கு செலுத்துவது மட்டுமல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்.


[ 01 ] அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.
ஐந்து நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய  தொலைநோக்கியை உருவாக்குகின்றன!
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை ஹவாய் தீவுகளில் கட்டும் பணியைத் தொடங்கவுள்ளன. இந்த தொலைநோக்கியைக் கொண்டு 500 கி.மீ. தொலைவுக்கு அப்பாலுள்ள நாணயத்தைக் கூட காணமுடியும் . டி.எம்.டி. என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி ஹவாய் தீவுகளில் உள்ள மாவ்னா கீ எரிமலையின் உச்சியின் அருகில் கட்டப்படும். இதற்கு ஆயிரத்து 400 கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 2022இற்குள் இதைக் கட்டி முடிக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டுள்ளது. செலவினத் தொகையில் நான்கில் ஒரு பங்கை ஜப்பான் கொடுக்கும். அமெரிக்க நேரப்படி செவ்வாய் அன்று ஹவாய் தீவில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாவில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த நூறு வானியல் விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் மாவ்னா கீ மலையில் 4012 மீற்றர் உயரத்தில் உள்ள இடத்தில் கூடுகிறார்கள் என்று கயோடோ செய்தி நிறுவனம் கூறுகிறது. இதே மலைமுகடு மீது ஜப்பானால் கட்டப்பட்டு 1999 முதல் இயங்கிவரும் சுபாரு தொலைநோக்கியை விட புதிய தொலைநோக்கி பெரிதாக இருக்கும். சுபாரு தொலைநோக்கியில் 8.2 மீற்றர் விட்டமுள்ள ஒற்றை கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் டி.எம்.டி. தொலைநோக்கியில் ஒவ்வொன்றும் தலா 72 செ.மீ குறுக்களவுள்ள 492 அறுகோணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஒளி சுருக்கும் சக்தி சுபாரு தொலைநோக்கியைப் போல் பதிமூன்று மடங்கு அதிகமாகும். இதனால் 500 கி.மீ. தொலைவில் உள்ள நாணயத்தைக் கூட எளிதாகவும் தெளிவாகவும் அடையாளம் காண முடியும். மேலும் புதிய தொலைநோக்கி மூலம் 2000 முதல் 4000 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நட்சத்திரங்களைக் கூடக் காணமுடியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். - See more at: http://malarum.com/article/tam/2014/10/08/6081/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-.html#sthash.DDnv5J0m.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/10/08/6081/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com
ஐந்து நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய  தொலைநோக்கியை உருவாக்குகின்றன!இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை ஹவாய் தீவுகளில் கட்டும் பணியைத் தொடங்கவுள்ளன. இந்த தொலைநோக்கியைக் கொண்டு 500 கி.மீ. தொலைவுக்கு அப்பாலுள்ள நாணயத்தைக் கூட காணமுடியும் . டி.எம்.டி. என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி ஹவாய் தீவுகளில் உள்ள மாவ்னா கீ எரிமலையின் உச்சியின் அருகில் கட்டப்படும். இதற்கு ஆயிரத்து 400 கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 2022இற்குள் இதைக் கட்டி முடிக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டுள்ளது. செலவினத் தொகையில் நான்கில் ஒரு பங்கை ஜப்பான் கொடுக்கும். அமெரிக்க நேரப்படி செவ்வாய் அன்று ஹவாய் தீவில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாவில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த நூறு வானியல் விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் மாவ்னா கீ மலையில் 4012 மீற்றர் உயரத்தில் உள்ள இடத்தில் கூடுகிறார்கள் என்று கயோடோ செய்தி நிறுவனம் கூறுகிறது. இதே மலைமுகடு மீது ஜப்பானால் கட்டப்பட்டு 1999 முதல் இயங்கிவரும் சுபாரு தொலைநோக்கியை விட புதிய தொலைநோக்கி பெரிதாக இருக்கும். சுபாரு தொலைநோக்கியில் 8.2 மீற்றர் விட்டமுள்ள ஒற்றை கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் டி.எம்.டி. தொலைநோக்கியில் ஒவ்வொன்றும் தலா 72 செ.மீ குறுக்களவுள்ள 492 அறுகோணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஒளி சுருக்கும் சக்தி சுபாரு தொலைநோக்கியைப் போல் பதிமூன்று மடங்கு அதிகமாகும். இதனால் 500 கி.மீ. தொலைவில் உள்ள நாணயத்தைக் கூட எளிதாகவும் தெளிவாகவும் அடையாளம் காண முடியும். மேலும் புதிய தொலைநோக்கி மூலம் 2000 முதல் 4000 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நட்சத்திரங்களைக் கூடக் காணமுடியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். - See more at: http://malarum.com/article/tam/2014/10/08/6081/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-.html#sthash.DDnv5J0m.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/10/08/6081/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

இதய துடிப்பை சீராக்கும் கிவி பழம்


மாற்றம் செய்த நேரம்:4/17/2014 5:30:24 PM

Kiwi fruit when consumed regularly receive physical health. Kiwi fruit imported from Western countries to improve healthகிவி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இந்த பழத்திற்கு சீனத்து நெல்லிக்கனி என்றொரு பெயரும் உண்டு. கிவி பழத்தின் தோல் பச்சை  நிறத்துடனும், பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இதை கேக் மீது அழகுக்காக  வைத்திருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

சிறுநீரக கோளாறை நீக்கும் காலிஃபிளவர்

Kidneys to excrete wastes in the body work. If you can not do it, the body of excess fluid in the hands, legs,


மாற்றம் செய்த நேரம்:9/15/2014 4:13:10 PM

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம். அதனை செய்ய முடியவில்லை என்றால், உடலில் அதிக நீர்மம் சேர்ந்து கை, கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும். எனவே சிறுநீரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சிறுநீரக கல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகளவில் உள்ள நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது சிரமமாக இருக்கும். சிலருக்கு வலி, எரிச்சல் ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்று காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்படும்.
இந்த தொற்று சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி, பின்பக்கம் வலியும் உண்டாகும். சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்பதே ஆகும். முக்கியமாக இரவு நேரத்தில் இந்த மாற்றங்களை உணரலாம். அதில் சிறுநீரின் நிறம் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் (அ) அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றும், ஆனால் சிறுநீர் வராது. சிறுநீரக நோய் ஏற்பட்டால் உடலில் எரித்ரோபோய்டின் சுரப்பது குறைந்து விடும். இதனால் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களும் குறைந்து விடும். இதன் மூலம் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக அனைத்து சிவப்பணுக்களுக்கும் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். மேலும் நோயாளிகளுக்கு சோர்வும் ஏற்படும்.

சிறுநீரக நோய் இருந்தால் வெதுவெதுப்பான சூழல் இருந்தாலும், ரத்த சோகை இருப்பதால், எப்போதுமே குளிராகவே இருக்கும். குறிப்பாக சிறுநீரக தொற்று (பிளோன்ஃபிரிடிஸ்) இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள யூரியாவின் (யூரேமியா) அளவு அதிகரித்து விடும். இதனால் மூச்சு காற்று விடும்போது அது சிறுநீர் போன்ற வாடையாக மாறும். இதுவே அமோனியா மூச்சு எனப்படும். ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்கள் குவிந்து கொண்டே போகும். இதனால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.

முளைக்கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்து, சிறுநீரக கற்கள் வராமலும் தடுக்கும். ஆப்பிள் சாப்பிட்டால், ரத்த ஓட்டம் சீராகும். சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதில் திராட்சை சிறந்த பழங்களில் ஒன்றாகும். சிவப்பு திராட்சையில் உள்ள சத்து இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் மிகவும் சிறந்தது. செர்ரி பழத்தில் வைட்டமின்கள் அதிகமாகவும், புரோட்டீன்கள் குறைவாகவும் உள்ளது. மேலும் இவை உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவை குறைத்து, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

முட்டையின் வெள்ளைக் கருவில் அமினோ ஆசிட்டுகள் அதிகமாகவும், பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளது. இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்று. காலிபிளவரில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சீராக இயங்க வைக்கும்.  உணவில் சோடியம் நிறைந்த உப்பை குறைவாக சேர்த்து வருவதால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம். சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், ஒரு வாரம் தொடர்ந்து தினமும் காலையில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகக்கற்கள் கரைந்துவிடும்.

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடித்து வருவது நல்லது. இவை சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும் சாப்பிடக்கூடாதவை சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வற்றல், ஊறுகாய், கருவாடு, முந்திரி, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சீஸ், சாஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை தவிர்க்க வேண்டும்.

எளிய சிகிச்சை

சிறுநீரக நோய் இருந்தால் நுரையீரலில் நீர்மம் சேரும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். சிறுநீர்க்குழாய் கோளாறுகளை மூக்கிரட்டை கீரை  குணமாக்கும். சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் மூக்கிரட்டை கீரையை சமைத்து சாப்பிடலாம். இதை சாப்பிட்டு வந்தால் சிறுநீரை சுலபமாக வெளியேற்றும். இது மலச்சிக்கலை போக்கும். இதயத்திற்கு பலம் தந்து நல்ல முறையில் இயங்கச் செய்யும். மூக்கிரட்டை கீரையை அலசி, பொடியாக நறுக்கி நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் கண் தொடர்புடைய நோய்கள் நீங்கும்.

மூக்கிரட்டைக் கீரையை அம்மியில் வைத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல் செய்து சாப்பிடலாம்.காலை, மாலை என ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும். இது காய்ச்சல் மற்றும் மலேரிய ஜூரத்தை போக்கும். மூட்டு வலிக்கு இது சிறந்த மருந்தாகும்.  இந்த கீரையை சாப்பிடும்போது அதிக காரம், மீன், கருவாடு, அதிக உஷ்ணம் தரும் உணவு, பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

இதய நோய்களுக்கு பாட்டி வைத்தியம்


Manattakkali with spinach, garlic, 4 dentists, along with four pinch of yellow avittuc

மாற்றம் செய்த நேரம்:7/18/2014 4:13:31 PM

1. மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

2. கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

3. பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

4. வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

5, ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

6, வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

7, வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், ரத்த அழுத்தமும் குணமாகும்.

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்


 Heel, ankle, calf, knee, thigh pain effectively in the soup Nelly's success.




குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்
:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Oct 11, 2014

நோய்களை எட்ட விரட்டும் எருக்கு..! மூலிகை வனம்!!


மூலிகை வனம் - நோய்களை எட்ட விரட்டும் எருக்கு..!
வீட்டுக்கொரு வைத்தியர்...
 மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல் லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...’ மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும்!
'தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு... என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி. ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள் உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும். முற்றிய காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி... அதனுள் உள்ள விதைகள் மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது, எருக்கு.
இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம். உண்மையில் நம்முடைய பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.
''எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர  செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது'' என்கிறது,
சித்தர்பாடல்.
ஆதிமனிதனின் கயிறு!
எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் 'ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத் தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.
விஷக்கடிக்கு மருந்து!
இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து... புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அளவு) உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும். அடுத்து, மருத்துவரிடம் கொண்டு செல்லலாம். 
தேள் கடித்தால், இதே இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும். 
மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும். 
குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். 
எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும். இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.
ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு!
எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். 
இதன் பால்... பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்கிறது சித்த மருத்துவம்.
கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். இந்த வெள்ளை எருக்கின் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து. 
வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும். '10கிராம் இஞ்சி,
3 வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்’ என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...