Oct 14, 2014

பொது அறிவு டிப்ஸ்:கணினியில் வேலை செய்கிறீர்களா?




டிப்ஸ்:கணினியில் வேலை செய்கிறீர்களா?

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.
* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

முட்டைக்கோஸின் இலைகள் மற்றும் வேர்களில் அதிக சத்துக்கள் உள்ளது.

நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் '
முட்டைகோசு' முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதோ, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள்.

இது குளிர்மண்டல பகதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும். வெளிப்பக்கத்திலிருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்திலிருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் காணப்படும்.

பயன்கள்:

இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக  வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸில் இருக்கும் அயோடினுக்கு முக்கிய உண்டு. முட்டைக்கோஸின் சாறு உடல் பருமனைக் குறைக்கும்.

முகப்பருக்கள் இருப்பவர்கள் வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாகும். அஜீரணக் கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் உடலும், முகமும் இளமை தோற்றதிதுடன் இருக்கும். சொறி, சிரங்கு இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

மருத்துவ குணங்கள்:

முட்டைக்கோஸின் இலைகள் மற்றும் வேர்களில் அதிக சத்துக்கள் உள்ளது.

100 கிராம் முட்டைக்கோஸில்  காணப்படும் ஊட்டப்பொருள்

மாவுச்சத்து       -    4.6%
புரதச்சத்து        -      1.9%
அயோடின்        -      1.75கி
இரும்புச்சத்து     -    0.95கி
சுண்ணாம்புச்சத்து - 0.86கி
குளோரின்        - 1.56கி
கந்தகச்சத்து       - 1.35 கி

எப்படியெல்லாம் சாப்பிடலாம்

முட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது  அதன் சாற்றை குழம்பிலோ, பொரியல் வகையிலோ சாப்பிட்டு வந்தால் நோய்கள் குணமாகும்.

குடல் சுத்தமாக:

பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்பந்தமான நோய்களினால் அவதிபடுபவர்கள் வாரம் இருமுறை முட்டைக்கோஸை அளவுடன் பயன்படுத்தி வந்தால் அதில் இருக்கும் அயோடின், குளோரின், கந்தக சத்துக்கள் குடலை சத்தப்படுத்தி நோய்களிலிருந்து விடுவிக்கும்.

நோய் எதிர்ப்புசக்தி பெருக:

வாரம் இருமுறை முட்டைக்கோசை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி பெருகி உடல் ஆரோக்கியம் பெரும்.

கண் பார்வை தெளிவுற:

கண் பார்வை மங்கல், பார்வை தெளிவின்மை போன்றவை நீங்க முட்டைக்கோஸின் சாற்றுடன் கேரட் சாற்றை கலந்து உப்பில்லாமல் இருமுறை சாப்பிட்டு வர பார்வை தெளிவாகத் தெரியும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க:

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க முட்டைக்கோஸின் சாற்றை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றின் நோய்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.

மூலநோய்:

மூலநோயினால் துன்பப்படுபவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் மூலநோய் குணமா-கும்.

இரத்த சோகை நீங்க:

இரத்த சோகை நீங்க முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை நீங்கும். இருதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

புற்றுநோயைத் திர்க்க:

வாரம் இருமுறை முட்டைக்கோஸை உணவில் பயன்படுத்தி வந்தால் இதில் இருக்கும் 'மைதையோல்', 'பிளேவனாய்டு' மற்றும் 'இன்டோமல்' என்ற இரசாயனப் பொருடங்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் புற்றுநோய் மற்ற பாகங்களில் வராமல் தடுக்கிறது. இத்தகைய மருத்துவக் குணங்கள் உடைய முட்டைக்கோஸை 'வாழ்நாளை நீட்டிக்கும் உணவு' என்கின்றனர்.

உடலுக்கு மருந்தாகும் தண்ணீர்

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக அறிவிப்பு விடுகிறதோ, அப்போது நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று
அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? எப்படி? 80 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 முதல் 5  லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குடித்தால் அந்தளவு அடிக்கடி சிறுநீரும் வெளியேறுமே... இதனால் சிறுநீரகம் பாதிக்கப்  படாதா?

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தனின் பதில்...

அதிகளவு தண்ணீர் குடிப்பதால் எடை குறைந்து விடாது. நிறைய தண்ணீரும் குடித்துக் கொண்டு, கூடவே அரிசி உணவைக் குறைத்து, காய்கறி,  பழங்களை அதிகம் எடுத்துக்கொண்டு, கலோரி குறைவான உணவு களை சாப்பிட்டு வந்தால் எடை குறையலாம். பொதுவாக வெயில் காலத்தில் அதிக  தண்ணீர்

வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளரும்.

வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளரும். கணக்கு நல்லா போடலாம்...’’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களைப்
பார்க்கலாம். வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியானத் தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால்,  மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம்  வேண்டாம்.


என்ன இருக்கிறது? (100 கிராமில்)

ஆற்றல்     33 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட்     7.45 கிராம்
கொழுப்பு     0.19 கிராம்
புரதம்     2 கிராம்
வைட்டமின் ஏ     36 மியூஜி
வைட்டமின் சி     23 மி.கி.
வைட்டமின் இ     0.27 மி.கி.
வைட்டமின் கே     31.3 மியூஜி
கால்சியம்     82 மி.கி.
இரும்பு     0.62 மி.கி.

‘‘ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது

Oct 13, 2014

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்


நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!
வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!
ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

நாம் பயன்படுத்தும் எண்ணெய்யில் எந்த எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியம்?

vegetable-oil


பொதுவாக,விலை அல்லது விளம்பரத்தில் கூறப்பட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து வாங்குகிறார்கள். ஆனால், உடலுக்கு எந்த விதமான எண்ணெய் ஒத்துப் போகும் என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.
நாம் பயன்படுத்தும் எண்ணெயாக தற்போது சூரிய காந்தி எண்ணெய் அதிகரித்து வருகிறது
இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்கப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது. இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை சந்திக்கிறது.
சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன்,  லினோலிக் அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம். பாமாயில் எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.
ஆனால், சூரிய காந்தி எண்ணெயால் நமது உடலுக்குக் கிடைக்காத கொழுப்புச் சத்தைப் பெற, சூரிய காந்தி எண்ணெயுடன் கலந்தோ அல்லது ஒரு நாள் சூரிய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று மாற்றி மாற்றி உபயோகிக்கப்பதும் நல்லது.
பொதுவாகவே, எந்த வொரு எண்ணெயாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மாதத்தில் ஒரு முறையாவது ஆலிவ் ஆயில், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.
அரிசி உமி எண்ணெயில் விட்டமின் இ அதிகளவில் உள்ளது. ஆலிவ் எண்ணெய் உடலுக்கு நல்லது என்றாலும் விலை அதிகம் என்பதால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் அதை வாங்கிப் பயன்படுத்துவது இயலாதது. எந்த எண்ணையாக இருந்தாலும் அளவோடு சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நலம்

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் தொலைந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் தொலைந்தால் கண்டுபிடிப்பது எப்படி? தினமும் நூற்றுக்கணக்கான மொபைல்கள் காணாமல் போகிண்றன. தொலைந்த மொபைல் தற்போது இருக்கும் இடத்தை இப்போது நாம் தெரிந்து கொள்ள முடியும் மேலும் அதன் பாஸ்வேட்டை மற்றவோ முழுவதுமாக நம் தகவல்களை அழிக்கவோ முடியும்.
சிவாஜி படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் லேப்டாப்பை திருடி தகவல்களை திருட முயல்வான் அப்போது மூன்று முறை தவறான பாஸ்வேர்டை உபயோகப்படுத்திய உடன் எல்லா தகவல்களும் அழிந்து விடும். இப்போது இது போல ஒரு அசத்தலான விஷயத்தை உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலிலும் செய்ய முடியும். எப்போதும் நம் மொபைல் தொலைந்து போவது ஒரு கஷ்டமான விஷயம்தான் ஆனாலும் நம் தனிப்பட்ட தகவல்கள் ( நாம் புகைப்படங்கள் பின் நம்பர்கள் போன்றவை) தவறான கைகளுக்கு போகாமல் காப்பற்ற முடியும்.

உலகின் 100 சிறந்த பிராண்டுகள் பட்டியல் முதலிடம் பிடித்த ஆப்பிள்!


appleஉலகின் 100 சிறந்த “பிராண்டுகள்’ பட்டியலில் ஐஃபோன் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய நிறுவனமான டாடா, பிரிட்டனில் தயாரிக்கும் லாண்ட் ரோவர் கார் 91-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஐஃபோன், மாக் கம்ப்யூட்டர், ஐ-பேட், ஐ-பாட் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 119 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 7.14 லட்சம் கோடி) உள்ளது.
இந்தப் பட்டியலில் கூகுள் இரண்டாமிடத்தில் உள்ளது. இதன் மதிப்பு 107 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ. 6.42 லட்சம் கோடி). 3-ஆம் இடத்தில் கோகா-கோலா உள்ளது. ஐபிஎம் 4-ஆம் இடத்திலும், மைக்ரோஸாஃப்ட 5-ஆம் இடத்திலும் உள்ளன.
4.47 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 27,000 கோடி) மதிப்புடன், லாண்ட் ரோவர் கார் உள்ளது. பிரிட்டனில் தயாரிக்கப்படும் இந்தக் காரைத் தயாரிக்கும் நிறுவனமானது டாடா குழுமத்தைச் சேர்ந்தது.
வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடையாத நாடுகள் என பாகுபாடு இல்லாமல், உலகெங்கும் அறியப்பட்ட பெயராக உள்ள நிறுவனங்கள், சாதனங்கள் அடங்கிய “100 சிறந்த பிராண்ட்’ பட்டியலை இன்டர்பிராண்ட் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் படி இவ் இரு நகரங்களுக்குமான பிரயாண இடைவெளி ஆறு மணித்தியாலங்களாக சுருக்கமடைகின்றது.

இதன்படி யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் நேர அட்டவணை தொடரூந்து ரகங்களுக்கேற்ப பின்வருமாறு,






‪யாழ் நகரிலிருந்து கொழும்பு கோட்டை வரை‬

1.யாழ்தேவி - காலை 7.25க்கு புறப்பட்டு பிற்பகல் 3.47க்கு சென்றடையும்

2.இன்ரசிற்றி - முற்பகல் 11.00க்கு புறப்பட்டு பிற்பகல் 5.40க்கு சென்றடையும்

3.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து - பிற்பகல் 1.45க்கு புறப்பட்டு இரவு 8.00க்கு சென்றடையும்

4.தபால் தொடரூந்து - இரவு 7.05க்கு புறப்பட்டு அதிகாலை 4.23க்கு சென்றடையும்

5.விசேட தொடரூந்து - ஞாயிறுகளில் மட்டும் முற்பகல் 10.00க்கு புறப்பட்டு பிற்பகல் 6.11க்கு சென்றடையும்

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்நகர் வரை‬

1.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து - காலை 5.50க்கு புறப்பட்டு முற்பகல் 11.57க்கு வந்தடையும்

2.யாழ்தேவி - காலை 7.15க்கு புறப்பட்டு மாலை 3.00க்கு வந்தடையும்

3.இன்ரசிற்றி - முற்பகல் 11.50க்கு புறப்பட்டு பிற்பகல் 6.15க்கு வந்தடையும்

4.தபால் தொடரூந்து - மாலை 7.45க்கு புறப்பட்டு அதிகாலை 5.07க்கு வந்தடையும்

5.விசேட தொடரூந்து - சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9.40க்கு புறப்பட்டு பிற்பகல் 5.20க்கு வந்தடையும்

தேங்காயின் பலன்கள் என்ன?


Our life is meant to be attached to the coconut. However, we are fully aware of its specialties. Here ... terincikkunka about the virtues of coconut ...தேங்காய் நம் வாழ்வில் ஒன்றி இருக்கும் பொருள். ஆனாலும் அதன் சிறப்பு பற்றி நமக்கு முழுமையாக தெரிவதில்லை. இதோ... தேங்காயின் சிறப்புகள் பற்றி தெரிஞ்சிக்குங்க...

தேங்காயை உணவு சம்மந்தமாக மட்டும் இல்லாமல் அழகு சாதனமாகவும் பயன்பாட்டில் உள்ளது. கேரளா மற்றும் தாய்லாந்தில் தேங்காய் இல்லாத உணவு இருக்காது. இதில் பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா, பங்கஸ், வைரஸ் கிருமிகள் மற்றும் வயிற்று பூச்சிகளை அழிக்கும் தன்மையுடையது. தினமும் ஒரு சின்ன துண்டு தேங்காய் சாப்பிடுவது நல்லது. தேங்காயில் வைட்டமின், மினரல், அமினோ ஆசிட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...