May 10, 2012

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு

டென்ஷனே இல்லாமல் எப்பொழுதும் புன்னகையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசையா? ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு நாம் சில விடயங்களை கடைபிடிக்க வேண்டும்.

கடைபிடிக்க வேண்டியவைகள்:

உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது
, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன், இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள்.

நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். இதற்கு மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் உண்டு.

“மறப்போம் மன்னிப்போம்” என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து, அந்த கோபம் டென்ஷனாக மாறி, இரத்த அழுத்தம் உயரும். இந்த இரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கிறது.

அதே போல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம், அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.

வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார்.

அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள். உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக மனதார நம்புங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும்.

தவறு செய்யும் நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை ஆகிய இரண்டும் வேண்டும். Please, Thanks, Sorry, வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் அடிக்கடி தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவராகக் காட்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...