May 10, 2012

முகப்பரு குணமாக...

வேப்பிலையை நன்கு சுத்தம் செய்து அரைத்து, அப்படியே பற்றாக முகப் பருக்களின் மீது தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ பலன் தெரியும்.

ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. விலை
அதிகமுள்ள சத்துள்ள பொருளைவிட அதிக சத்தைக் குறைந்த விலையில் ஏழைக்கு அளித்து நல்வாழ்வு தரக்கூடியது கரிசாலை.

காயம் பட்ட இடத்தில் மணத்தக்காளி இலையின் சாற்றைப் பிழிந்துவிட்டால், காயம் விரைவில் ஆறும்.

தினமும் ஒரு ஸ்பூன் தேனுடன் இரண்டு துளசி இலைகளைச் சேர்த்து உண்டு வருவதால் குரல் வளம் பெறும். குடல் பிரச்னைகள் பலவற்றிற்கும் இது நல்லது என்பதுடன் சருமமும் இதனால் நன்கு மேம்படும்.

பிரண்டை உப்பு அல்லது பிரண்டை பஸ்பம் (சித்த மருத்துவக் கடையில் கிடைக்கும்) இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் காலையில் ஓர் அரிசி எடை நெய்யுடனும், மறுநாள் காலையில் ஓர் அரிசி எடை இளநீருடனும் மாற்றி மாற்றி உண்டு வர உடலுக்கு எவ்விதக் கெடுதலுமின்றி நிச்சயமாக மெலிவதுடன் எடையும் குறையும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...