Jul 2, 2012

மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு--சமையல் குறிப்புகள்







  • மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ.




  • அரைக்க:




  • மிளகு - 1 தேக்கரண்டி.




  • பூண்டு - 8 பல்.




  • மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.




  • தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.




  • சின்ன வெங்காயம் - 10




  • தக்காளி - 1 பெரியது.




  • தாளிக்க:




  • வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1.




  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி.




  • கடுகு - 1/2 தேக்கரண்டி.




  • சீரகம் 1/4 தேக்கரண்டி.




  • கறிவேப்பிலை - சிறிதளவு.




  • எண்ணெய் - தேவையான அளவு.




  • மற்றவை:




  • புளி -1 எலுமிச்சை அளவு




  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.




  • உப்பு - தேவையானது





  • புளியை தண்ணீர் விட்டு கரைசல் செய்து, அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, சுவை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.




  • கடாயில் எண்ணெய் சூடானதும் தாளிப்புப் பொருட்களை சேர்த்து, தாளித்து, கலந்த மசாலாவை ஊற்றி, தேவையான தண்ணீர் கலந்து, பச்சை மசாலா வாசம் நீங்கும் வரை கொதிக்க வைத்து, அதன் பின் மீன் துண்டுகளை சேர்த்து, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலெழும்பி கவர்ச்சியும், சுவையும் மிக்க மீன் குழம்பு தயாராகி விடும்.

Note:

வழக்கமாய் செய்யப்படும் மீன் குழம்பை விட சுவையிலும், நறுமணத்திலும் வேறுபட்ட இந்தக் குழம்பு பெரும்பாலானவர் விரும்பி செய்வார்கள் என நம்புகிறேன். ஒரு முறை செய்துதான் பாருங்களேன்! காரம் கூட்டியோ அல்லது குறைத்தோ அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...