Oct 5, 2012

யாழ்ப்பாணம் இருபாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 11 பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் இருபாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 11 பேர் படுகாயம்! 
[Friday, 2012-10-05
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி இருபாலை - கோப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்து 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். பஸ்களின் சாரதிகள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...