Oct 3, 2012

படகுகள் நேருக்கு நேர் மோதியதால் ஹாங்காங்கில் 36 பேர் பலி



October 3, 2012Thursday,
acc_03ஹாங்காங்: ஹாங்காங்கில், இரண்டு பெரிய படகுகள் மோதிக்கொண்டதில், 36 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் இரவு,
ஹாங்காங் அருகே உள்ள லாமா தீவில், வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன. இதை பார்ப்பதற்காக, ஹாங்காங் எலெக்ட்ரிகல் கம்பெனியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள், குடும்பத்துடன் லாமா தீவுக்கு பெரிய படகில் வந்தனர்

. இதே பகுதிக்கு வந்த மற்றொரு படகுடன், எலெக்ட்ரிகல் கம்பெனி ஊழியர்கள் வந்த கப்பல் மோதியது. இந்த விபத்தில், பெரிய படகு உடைந்து, மூழ்கியது. இந்த சம்பவத்தில் 36 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடலில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, படகு ஊழியர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...