Nov 18, 2012

பால் தாக்கரே காலமானார்

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இன்று மாலை காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 86 வயதாகும் பால் தாக்கரே சுவாசக் கோளாறால் அவதிப் பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பந்த்ராவில் பால்தாக்கரேவின் வீடான மடோஸ்ரீயிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பால் தாக்கரே காலமானதைத் தொடர்ந்து, ராஜ் ராக்கரே உள்ளிட்ட உறவினர்களும், பல முக்கியத் தலைவர்களும் பால் தாக்கரேவின் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...