Nov 6, 2012

ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்


ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்புதுடெல்லி, நவ. 6-


உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான சச்சன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்தார்.


இதற்கு அந்நாட்டு எம்.பி. ஒருவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு முன்னாள் வீரர் தில்பானிஸ்ட் ஆதரவு தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது இன்று வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய மந்திரி சிமோன் கிரியன் இந்த விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார்.

இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் இந்த உயரிய விருது பெறும் 2-வது இந்தியர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி இந்த விருதினைப் பெற்றார்.

வலதுகை ஆட்டக்காரரான சச்சின் இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15533 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்களும் எடுத்துள்ளார். மொத்தம் 100 சதங்கள் அடித்து புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...