Sep 6, 2012

மூளையை பலப்படுத்தும் பாதாம் பருப்பு-


தாய்மை எதிர்பார்ப்போர் - பெண்ணின் உடல்நிலை


பெண்ணின் உடல்நிலை:
***********************************
குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.
 சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.
  சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு:
********************************************************
 சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5வது நாளிலிருந்து 14ஆம் நாள் வரை இச்சுரப்பு அதிகமிருக்கும். சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.
ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் செயல்பாடு:
****************************************************************
 மாதவிடாய் வெளியான 14வது நாள் முதல் மாதவிடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.
சினைப்பை நீர்கட்டி அறிகுறிகள்
***********************************************
 மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு.
இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து அக்குப் பஞ்சர் சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. அக்குப்பங்சர், ஹோமியோபதி சிகிச்சை, உடற்பயிற்சி, உடல் எடையை குறைப்பது போன்ற முறைகளை கடை பிடித்தால் கருத்தரிப்பதிலும் குழந்தை பிறப்பதிலும் பிரச்சனை வராமல் தடுக்கலாம். மாதவிடாயை ஒழுங்குபடுத்தலாம்.
சினைப்பை நீர்க்கட்டி இருந்தால் உடல் பருமன் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்குபடுத்த கொடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளாலும் உடல் பருமன் அதிகரிக்கும். சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு கட்டிகள் தோன்றக்கக் கூடும்.

சினைப்பை நீர்கட்டி...


சினைப்பை நீர்கட்டி...


                         சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.

சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.

இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.

பெரும்பாலும் 1முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2,3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.

இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

நோயுண்டாக்கும் காரணத்தை அறுதியிட்டு கூற முடியுமா எனில் இயலாது என்றுதான் கூறவேண்டும். இந்நோய் பெரம்பாலும் பருவமடைந்த மங்கைகளில் காணப்படும் . எனினும் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

மரபணு மூலமாகவும், பரம்பரையாகவும் இந்நோய் வரலாம்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. ஊகுஏ எனும் ஹார்மோன் குறைந்து காணும். ஃஏ எனும் ஹார்மோன் அதிகரித்துக் காணும். சில சமயங்களில் அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன்கள் அதிகரித்துக் காணும்.

டெஸ்டோஸ்டிரான் அதிகரித்துக் காணும்.

புரோலாக்டின் அதிகரித்துக் காணும்.

மாதவிடாய் கோளாறுகள்

ஒரு பெண் பூப்பெய்திய பின் முறையாக மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு உண்டாகும். இது இயல்பானது. ஆனால் இந்நோய் கண்ட சிலருக்கு மாதந்தோறும் மாதவிலக்கு நிகழாது. சில பெண்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் சினைமுட்டை வளர்ச்சியின்றி மாதவிடாய் நிகழும். இயல்பாக பெண்களில் மாதந்தோறும் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை வளர்ந்து வெளிப்படுகிறது.

0.5-1 மி.மீ. அளவிலான கட்டிகள் சினைப்பையில் ஓரத்தில் காணப்படும். பத்துக்கு மேற்பட்ட கட்டிகள் காணப்படும். 20 மி.மீ. அளவுக்கு மேல் கட்டிகள் பெரும்பாலும் பெரிதாவதில்லை. சினைப்பையின் மேற்பரப்பில் நெக்லஸ் அமைப்பில் ஸ்கேன் சோதனையில் கட்டிகள் காணும். சினைப்பை அளவில் பெரிதாக காணப்படும்.

இந்நோயுற்ற பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். ஆMஐ > 30டுஞ்/ஞிட்2 ஆக இருக்கும். இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளல் அவசியம்.

மலட்டுத் தன்மை

சினை பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது. சாதாரணமாக கருத்தரிக்க இயலாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது. இதற்கு சிகிச்சையளித்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

முடி வளர்ச்சி

பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.

குறிப்பாக மேலுதடு, கீழ்தாடை, மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, முன்கைகளில் முடி வளர்ச்சி காணப்படும்.

தோலில் காணப்படும் மாற்றங்கள்

உடலில் சில இடங்களில் கருமை நிறம் அதிகரித்து காணும்.

பெரும்பாலும் கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் இம்மாற்றம் காணப்படுகிறது.

ஆய்வுகூடத் தேர்வுகள்

ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.

ஹார்மோன்களின் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

மருத்துவம் மற்றும் ஆலோசனைகள்

சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்பதை சூதகதடை, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுணங்களைக் கொண்டு யூகிக்கும்போது அல்லது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும்போது பெண்கள் செய்யவேண்டிய முதற் காரியம் அவர்களது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.

உடல் எடையை குறைத்தல்

தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. நடைபயிற்சி மூலம் ஒரு மாத காலத்திலேயே நல்ல பலனை அடையலாம்.

நடை பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் சீராக

சினைமுட்டை முதிர்ச்சியடைந்து வெளிப் படுதலைத் தூண்ட ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

எனவே சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவமே என்று கூறலாம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி அறுவை சிகிச்சையின்றி சினைப்பை நீர்க்கட்டிகளை அகற்றிவிடலாம்.

சினைப்பை நீர்க்கட்டிகள் கரைய தொடங்குகின்ற போதே சினைமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் சூழல் உருவாகிறது.

புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும். புகைப் பிடிப்பதால் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது.

முடிகளை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கிறது. சவரம் செய்தல், பிளீச்சிங் செய்தல், வாக்சிங் செய்தல் போன்ற முறைகளை கையாளுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை நாடவேண்டியது அவசியம். எலக்ரோலைசிஸ் மற்றும் லேசர் முறையில் தற்போது முடிகளை சிறப்பாக நீக்குகின்றனர். ஆனால் செலவு அதிகம்.

தகுந்த சிகிச்சை மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது இன்றியமையாத தாகும்.

மூட்டு வலியைக் குணப்படுத்தும் நொச்சி இலைகள்

சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர் செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும். இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது.இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்களும், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு போன்றவைகளும் அடங்கியுள்ளன.
காசநோய் புண்களை குணப்படுத்தும்: இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. 
வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். 
இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.
மூட்டுவலிக்கு மருந்து: முழுத்தாவரமும் சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
குடல்பூச்சிகளுக்கு எதிரானது: குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.
கல்லீரல் நோய்களுக்கு மருந்து: மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை. தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 
கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை.

சாப்பிடும்போது தண்ணீர் அருந்த வேண்டாம்


பலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்போம்.
இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மேலும்  சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவதால் ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாக உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, சுற்றுபுற சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என பிரபல டயட்டீஷியன் ஷோனாலி ஆதங்கப்படுகிறார்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் பேர்வழிகள்தான் என்கிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில குறிப்புகள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.
கிளினிக்





Friday, August 31, 2012 0 comments

வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?---ஹெல்த் ஸ்பெஷல்,

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்.

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். 

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும். 

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான். ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான். 

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு. 

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? 

நம்முடைய திருவிழாக்களிலும், திருமண வீடுகள், சடங்கு வீடுகள் மற்றும் எல்லா விழாக்களிலும் சாப்பிட வாழை இலை போடும்போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போ பெரும்பாலும் இந்த பழக்கம் மறைந்து பேப்பரில் சாப்பிடுகிற பழக்கம் வந்து விட்டது. என்னே பரிதாபம்?!) அவ்விடங்களில் எல்லாம் வாழை இலையை முற்றிலும் சுத்தப்படுத்தியா சாப்பிடுகிறோம். ஏதோ பெயருக்கு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். 

சிலருக்கு இலைகளில் தூசி, தும்புகள், அழுக்கு என்று என்னவெல்லாமோ இருக்கும். தெளிக்கும் தண்ணீர் கூடு எவ்வளவு அசுத்தமும் கிருமிகளும் நிறைந்ததாகக் கூட இருக்கும். ஆனால் பாருங்கள். அவ்விதமாய் சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது வியாதி வந்து அல்லது வயிற்றுக் கோளாறு வருகிறதா? இல்லையே. காரணம் என்ன தெரியுமா? வாழை இலையின் மகிமைதான். எவ்வித கிருமியையும் அழித்துவிடக் கூடிய அதன் மருத்துவத் தன்மைதான். 

ஆகவே மக்களே! இனியாவது தட்டுகளுக்கு பதில் கூடுமானவரை வாழை இலையைப் பயன்படுத்துங்கள். வியாதியின்றி வாழுங்கள்!
பாதுகாக்க 10 வழிகள் - பற்கள்

அவசியம் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்

அவசியம் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்

ம் உடலுக்கு ஒரு நல்ல குணம் உண்டு. எப்போதுமே எச்சரிக்கை கொடுக்காமல் திடீர் என்று பிரேக் டவுன் ஆகி அது தவிக்கவிடுவது இல்லை. மாறாக நம்முடைய அலட்சியமும் சலிப்பும் அவநம்பிக்கையும்தான் பல உபாதைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
நமது உடல்நலம் குறித்த விஷயத்தில் நாம் முக்கியமாக 6 தவறுகளைச் செய்கிறோம். அவற்றை விரிவாக - விளக்கமாக அலசுகிறார்கள் மருத்துவர்கள்.
1நோய் அறிகுறிகளைப் புறக்கணிப்பது
''45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தலைவலி தாங்க முடியவில்லை என்று எங்களிடம் வந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவருக்குத் தலைவலி. அதற்காகத் தலைவலி மாத்திரைகளை வாங்கித் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால், கடைசியில் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிட்டார். அவருடைய தலைவலிக்கான காரணத்தை ஆராய்ந்தபோது, ஒரு வருடமாக அவரது உடலில், ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆரம்ப நிலையிலேயே தலைவலி ஏன் வருகிறது என்று மருத்துவரிடம் ஆலோசனை செய்திருந்தால், அவருக்கு இந்தப் பிரச்னையே ஏற்பட்டிருக்காது' என்று ஆரம்பித்தார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் தேன்மொழி.
'நோய்க்கான அறிகுறிகளை எச்சரிக்கை மணிகளாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்தே நோய்கள் வரஇருப்பதைப் புரிந்துகொண்டு மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போய்விடுவதுதான் புத்திசாலித்தனம். நடுத்தர வயதைத் தாண்டிய நபர்களுக்கு அடிக்கடித் தலைசுற்றல் ஏற்பட்டால், உயர் ரத்த அழுத்தத்துக்கான சமிக்ஞையாக அது இருக்கக்கூடும்.
குழந்தைகளுக்கு விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்தால், காய்ச்சல் மருந்தை மட்டும் நாள் கணக்கில் கொடுப்பது தவறு. உடனடியாக மருத்துவரிடம் காட்டுவதுதான் நல்லது. மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கும். அதிகப்படியான படபடப்பு, வியர்த்தல் போன்றவை இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான அறிகுறிகள். ஒரு துளி நீரைப் பருகினாலும் குமட்டல் மற்றும் வாந்தி வந்தால், அது ஜீரணக் கோளாறு மற்றும் வயிறு இயல்பான நிலையில் இல்லாமல் இருப்பதற்கான அடையாளங்கள். விடாமல் தொடரும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை தவிர, தோல் நோய்க்கும் ஆளாகும் நபர்கள் ஹெச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இப்படி அறிகுறிகளை வைத்தே நோய் தீவிரத்தன்மையை எட்டுவதற்குள் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது பல்வேறு பிரச்னைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்'' என்று எச்சரிக்கிறார் மருத்துவர் தேன்மொழி.
 2 சுய மருத்துவம்
டாக்டர் ஃபீஸை மிச்சம் செய்கிறேன் பேர்வழி என்று பலர் தங்கள் உடம்பையே ஓர் ஆராய்ச்சிக் கூடமாக மாற்றிக்கொண்டு சுய வைத்தியம் செய்துகொள்வார்கள். இந்த மாதிரியான நபர்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவது குறித்துப் பேசினார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் முத்தமிழ் வி.டி.ராஜேஷ்.
''எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதன் தன்மைக்கு ஏற்பவே மருத்துவர்கள் மருந்து கொடுப்பார்கள். நோய் தீவிரமாக இருந்தால், கூடுதல் அளவு கொடுப்போம்; இல்லாவிட்டால், குறைவாகக் கொடுப்போம். ஒரு சிலர், இன்றைக்கு கொடுத்த மருந்துகளைப் பல மாதங்கள் கழித்து மீண்டும் அதே அறிகுறிகள் தென்படும்போதும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அது அந்த நோயைக் குணமாக்காது. என்னிடம் நாடித்துடிப்பு குறைந்த நிலையில் ஒரு குழந்தையைக் கொண்டுவந்தார்கள். விசாரித்தபோது அந்தக் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்கிறது என்பதும் உடனே சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டைக் கொண்டுபோய்க் கொடுத்து அதே மருந்துகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. மூன்று நாட்களாகியும் காய்ச்சல் குறையவில்லை. குழந்தை மிகவும் பலவீனமாகி நாடித்துடிப்பும் மிகக் குறைந்து ஆபத்தான நிலையில் இருந்தபோது என்னிடம் வந்தார்கள். உடனே அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்துப் பரிசோதித்துப் பார்த்ததில், அந்தக் குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு இருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதனால்தான் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குக் கொடுத்திருந்த மாத்திரைகளை அவர்கள் கொடுத்தபோது, காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் நோயின் தன்மை தீவிரமாகி ஆபத்தான நிலைமைக்கு வந்துவிட்டது குழந்தை. இப்படிப் பல சமயங்களில் கடுமையான விளைவுகளை உருவாக்கிவிடக் கூடியது சுய மருத்துவம்.''
3 பாதி வைத்தியம்
''இது நம் சமூகத்தில் ஏராளமானவர்கள் செய்யும் தவறு. ஒரு நோய் முழுமையாகக் குணம் அடையும் முன்பே மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளைப் பாதியில் நிறுத்திவிடுவது. நெல்லைக்கு அருகில் உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தில் இருந்து ஒரு சிறுவனை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். அவனுக்கு டைஃபாய்ட் இருந்தது. உரிய மருந்துகளை எழுதிக் கொடுத்தேன். ஆனால், முழுமையாக அவனுக்கு மருந்தைக் கொடுக்காமல் பாதியிலேயே மருந்தை நிறுத்திவிட்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே சிறுவன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு மறுபடியும் டைஃபாய்ட். அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். அவர்கள், 'பையனுக்குக் காய்ச்சல் குணமானதால் சில நாட்களிலேயே மாத்திரை கொடுப்பதை நிறுத்திட்டோம்’ என்றார்கள். அதனால்தான் அவனுக்கு மறுபடியும் அதே நோய் பாதித்து இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன். தவிர, இந்த முறை நான் கொடுத்த மாத்திரைகள் எதுவுமே அவனுக்கு வேலை செய்யவில்லை. காரணம் முதல் முறை டைஃபாய்ட் வந்தபோது அவனுக்கு கொடுத்த மாத்திரைகளோடு எப்படிப் போரிடுவது என்பதை நோய்க் கிருமிகள் தெரிந்துகொண்டுவிட்டன. அதனால் நோய் குணமாகவில்லை. ஆகையால், அவனுக்குக் கூடுதல் சக்தி மிக்க மருந்துகளைக் கொடுக்க வேண்டி இருந்தது. இது வலிந்து நாமே உருவாக்கிக்கொள்ளும் ஆபத்து. இப்படிச் சிகிச்சை அளிக்கும்போது, சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. அதனால், மருத்துவர் சொல்லும் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது மட்டும்தான் இந்த மாதிரியான ஆபத்துகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி.

நாம் கொடுக்கிற மருந்தைச் சிலர் முழுமையாகச் சாப்பிடுவது இல்லை. மருத்துவர்கள் பத்து மாத்திரைகளும் இரண்டு பாட்டில் சிரப்பும் எழுதி இருந்தால், அதில் சரிபாதியை மட்டுமே மெடிக்கல் ஸ்டோரில் வாங்குபவர்கள், 'எப்படி இருக்குன்னு பார்த்துட்டு மீதியை வாங்கிக்கலாம்’ என்று சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனை முழுமையாகக் குணப்படுத்திவிட வேண்டும் என்பதற்காகவே மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவு மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள். அந்த மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கியதும் நோய்க்கான கிருமிகள் உடலுக்குள் பதுங்க ஆரம்பிக்கும். உடனே, 'நமக்குத்தான் நோய் குணமாகிடுச்சே... இனி எதுக்கு மருந்து மாத்திரை?’ என நினைத்து மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டால் - நமது உடம்பிலேயே ஒரே ஒரு கிருமி தங்கிவிட்டாலும் - அது பல்கிப் பெருகி மீண்டும் நோயைக் கொண்டுவந்துவிடும். கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தினாலும்கூட கொசுக்கள் கடிக்கிறதே ஏன்? அதற்கான எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிட்டதுதான் காரணம். அதேபோல, நாம் கொடுத்த மருந்தின் தாக்குதலில் இருந்து தப்பிய கிருமிகள் முன்பைவிடவும் வேகமாகவும் தீவிரமாகவும் இருக்கும். அதனால் சாதாரண மருந்துக்குக் கட்டுப்படாது' என்றார் மருத்துவர் முத்தமிழ் வி.டி.ராஜேஷ்.
 4 மருத்துவரிடம் பேசத் தயங்குதல்
''தங்களுக்கு உள்ள பிரச்னைகளை ஒளிவு மறைவு இல்லாமல் மருத்துவரிடம் எடுத்துச்சொல்வது ஒரு நோயாளியின் கடமை. அதேபோல, தனது சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது ஒரு நோயாளியின் உரிமை. ஆனால், பெரும்பாலும், மருத்துவரை அணுகும்போது தன் உடல் குறைபாட்டைச் சொல்லக்கூட பல நோயாளிகள் பயப்படுவார்கள்'' என்கிறார் கரூரைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். 'நம் உடலில் ஏதோ குறைபாடு... அதைச் சரிசெய்தால்தான் இயல்புநிலைக்குத் திரும்புவோம் என்ற கட்டாயத்துக்கு வந்துவிட்டோம். அப்படி இருக்கும்போது மருத்துவரை அணுகும் ஒருவர் தனது குறைகளை முழுமையாகச் சொல்ல வேண்டும். டாக்டரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாது என்று இதற்காகத்தான் நமது பெரியவர்கள் சொல்லிவைத்தார்கள்.
டாக்டரிடம் முழு உண்மையையும் சொன்னால்தான், உங்களை டாக்டரால் சரியான முறையில் பரிசோதனை செய்து பார்க்க முடியும். அதன் இறுதியில்தான் என்ன குறைபாடு என்று கண்டறிந்து அதைத் சரிசெய்வதற்கான வழிகளை அவரால் சொல்ல முடியும். உங்கள் உடலில் வியாதியின் தாக்கத்தை நீங்கள்தான் அனுபவிக்கிறீர்கள். எனவே உங்கள் உடலில் உள்ள பாதிப்புகளை வெளிப்படையாகச் சொல்ல பயமோ, கூச்சமோ, தயக்கமோ வேண்டாம். மறந்துபோகாமல்இருப்பதற்காகப் பரிசோதனைக்கு வரும்போது உங்களுடைய குறைகள், சந்தேகங்கள் முழுவதையும் ஒரு வெள்ளைத் தாளில் எழுதிக்கொண்டுவந்து மருத்துவரிடம் கேட்டீர்கள் என்றால் முழுத் தெளிவுடன் சொல்லலாம்'' என்கிறார் மருத்துவர் ரமேஷ்.
 5 மருத்துவ ஆவணங்களைப் பராமரிக்கத் தவறுதல்
''நீங்கள் மருத்துவரைச் சந்தித்தபோது அவர் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டு, எக்ஸ்-ரே ரிப்போர்ட் என ஒவ்வொரு மருத்துவ ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்களா? இல்லை எனில், எதிர்காலத்தில் சரியாக நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. 'சாதாரண மருந்துச் சீட்டு முதல், ஈ.சி.ஜி., ரத்த அழுத்தப் பரிசோதனை முடிவு வரை அனைத்தையும் பாதுகாத்து வைத்திருப்பது அவசியம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சரவணன்.  ''மருத்துவ ஆவணங்களை வைத்திருக்கவில்லை எனில், அது உங்களைச் சிக்கலான சூழ்நிலையில் ஆழ்த்திவிடும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஈ.சி.ஜி. ரிப்போர்ட்டைக் கையில் வைத்திருக்கவில்லை எனில், தற்போது என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை எதைக்கொண்டும் மருத்துவரால் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. நீங்கள் தொடர் மருத்துவப் பரிசோதனைக்கு உங்களை உட்படுத்தவில்லை எனில், உங்களுக்கு உள்ள நோயும் எந்தத் தடையுமின்றி சுதந்திரமாக வளரும். எனவே, ஒவ்வொரு மருத்துவ ஆவணத்தையும் பாதுகாப்பது அவசியம். இது உங்களை நல்ல நோயாளி என்று சொல்வதற்காக அல்ல, உங்களுக்குச் சரியான சிகிச்சையைச் சரியான நேரத்தில் கிடைக்க உதவும்.''
 6 மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருத்தல்
''சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல ஆஸ்துமா - அலர்ஜி மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் கூறிய தகவல் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண்மணி தன்னுடைய குழந்தைக்கு மூச்சுத்திணறல் என்று சிகிச்சைக்காக வந்திருக்கிறார். மருத்துவரும் குழந்தையைப் பரிசோதனை செய்து ஆஸ்துமா இருப்பதைக் கண்டறிந்து இருக்கிறார். குழந்தையின் தாயால் இந்த செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 'வேறு மருத்துவரிடம் காண்பித்துக்கொள்கிறேன்’ என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார். இப்படி இரண்டு மருத்துவர்களை மாற்றி மாற்றிப் பார்த்ததில், கடைசியில் மூன்று விதமான சிகிச்சை, மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. இதனால் அந்தப் பெண்மணி குழம்பிப்போய், முதலில் பார்த்த டாக்டரிடமே மீண்டும் வந்திருக்கிறார். மெடிக்கல் விஷயத்தில் ஆல்டர்நேட் ஒப்பீனியன் பெறுவது தவறு இல்லை. ஆனால், அதற்காக மருத்துவரை மாற்றிக்கொண்டே இருப்பதும் சரியானது அல்ல. இப்படி மருத்துவரை மாற்றிக்கொண்டிருக்கும்போது, புதிய மருத்துவருக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது. இதைத் தவிர்க்க முதல் கட்டத்திலேயே உங்கள் மீது அக்கறையுள்ள, திறமையான, நல்ல மருத்துவரைத் தேர்ந்தெடுங்கள். அப்படி ஒருவரைக் கண்டறிந்தால், தொடர்ந்து அவரிடமே சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் உங்கள் உடல் நலத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும்'' என்கிறார் டாக்டர் சரவணன்.
Wednesday, August 29, 2012 0 comments

பற்களை பாதுகாக்க டிப்ஸ் ...!ஹெல்த் ஸ்பெஷல்,

பாட்டி வைத்தியம்

*  பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  
*  ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்    புகள் குறையும். 
*  ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும். 
*  நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும். 
*  கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும். 
*  கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும். 
*  கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.
Sunday, August 26, 2012 0 comments

இருமல்... சளி...பித்தவெடிப்பா? -- இய‌ற்கை வைத்தியம்,


இருமல்... சளி...பித்தவெடிப்பா?

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட  கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...