Oct 31, 2012

சான்டிப் புயலின் கோரத் தாண்டவம்: மீண்டும் மூடு விழா கண்ட சுதந்திர தேவி

statue_of_liberty_002


சான்டிப் புயலின் கோரத் தாண்டவத்தால் அங்குள்ள சுதந்திர தேவி சிலை மீண்டும் மூடப்பட்டுள்ளது.
மன்ஹட்டான் நகர மத்தியில் அமைந்துள்ள அமெரிக்கர்களின் வரலாற்றுச் சின்னமான சுதந்திர தேவிச் சிலையை சமீபத்தில்தான் சீரமைத்தார்கள்.
அதுவரைக்கும் மூடப்பட்டிருந்த இச்சிலை, பணிகள் முடிவடைந்து கடந்த ஞாயிறே திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது 'சான்டி' புயலின் கோரத் தாண்டவம் காரணமாக சுதந்திர தேவி சிலை மறுபடியும் முடப்பட்டிருக்கிறது.
30 மில்லியம் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப் பட்ட சீரமைப்புப் பணிகள்
காரணமாக இது கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டிருந்தது.
151 அடி உயரமுள்ள இந்த சிலை புயலின் சீற்றம் தணிந்தால் இன்று அல்லது அதற்கு அடுத்த நாள் திறக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டின் அன்பளிப்பாக 1886ம் ஆண்டு நிறுவப்பட்ட சுதந்திர தேவிச் சிலை 1924ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் சுமார் 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இச்சின்னத்தைப் பார்க்க வருகை தருகிறார்கள் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...