Jan 10, 2013

அயலவர்களால் மரத்தில் காயப் போடப்பட்ட கார்

அயலவர்களால் மரத்தில் காயப் போடப்பட்ட கார்





  • 0
     
வாலிபர் ஒருவரின் கார், அவரது அயலவர்களினால் மரத்தில் காயப்போடப்பட்டது. என்ன குழப்பமாக இருக்கிறதா?
போலன்ட் இல் வசித்து வருபவர் 24 வயதாகும் Zbigniew Filo. இவர் கட்டுப்பாடு இன்றி மிக மோசமான முறையில் காரை வேகமாக செலுத்தும் பழக்கம் உள்ளவர். இதனால் அப்பகுதியில் சில விபத்துக்களுக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.
இவரை இவரது அயலவர்கள் பலமுறை எச்சரித்து இருக்கிறார்கள். ஆனால் அதனை பொருட்படுத்தாத Zbigniew Filo, தொடர்ந்தும் மோசமான முறையிலேயே காரை ஓட்டி வந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அயலவர்கள் பாரம் தூக்கி உதவியுடன் Zbigniew Filo இன் காரை மரத்தின் கிளையின் உச்சியில் தொங்கவிட்டு விட்டனர்.
பொலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பெயரில் அவர்கள் வந்து அயலவர்களிடம் சமரச பேச்சு நடாத்தினார்கள்.
இனிமேல் மோசமாக கார் ஓட்டமாட்டேன் என்று Zbigniew Filo உறுதியளித்த பின்னரே கார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...