Grenoble விமான நிலையத்தருகில் நடந்த விமான விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் பலியகியுள்ளனர். இவ் விபத்து இன்று சனிக்கிழமை மதியம் நடைபெற்றுள்ளது. மொரோக்கோவில் பதிவு செய்யப்பட்ட இவ்விமானம் ஸ்பெயினில் ஒரு தரிப்பைச் செய்து விட்டு மொரோக்கோ திரும்பத் திட்மிட்டிருந்தது. இரண்டு இயந்திரங்கள் உள்ள இச் சிறு விமானம் Grenoble விமானநிலையத்தில் இருந்து புறப்பட சிறிது நேரத்தில் Saint-Etienne-de-Saint-Geoirs ற்கும் Saint-Simeon-de-Bressieux ற்கும் இடையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இவ்விமானம் ஒரு சிறு குன்றின் மீது மோதியதைக் கண்ட அப்பகுதியில்
வசிக்கும் ஒருவர் கொடுத்த அறிவிப்பின் பின்னரே மீட்புப் படை அங்கு
விரைந்தது. ஆனால் விமானம் தீப்பிடித்ததில் அனைவரும் இறந்திருந்தனர்.
மொரோக்கோவில் Casablanca வில் வசிக்கும் ஒரு குடும்பமே முற்றாக
விபத்தில் கொல்லப்பட்டுள்ளது. பெற்றோரும் இரு ஆன்பிள்ளைகளும் ஒரு பெண்
பிள்ளையும் கொல்லப்பட்டுள்ளனர். பிள்ளைகள் அனைவரும் 8 வயது முதல் 14 வயது
வரை உள்ளவர்களாவார்கள். இவர்கள் Méribel இலுள்ள பனிச்சறுக்குத் தடத்தில்
விடுமுறையைக் கழித்து விட்டுத் திரும்பியிருந்தனர்.
கடந்த நவம்பர் இதே பகுதியலுள்ள hளமாஙத இல் CASA C-295 ரக அல்ஜீரிய
இராணுவச் சரக்கு விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இவ்விமானம் அல்ஜீரிய வங்கிக்குப் பணம் அச்சடிக்கும் காகிதங்களைப்
பிரான்சிலிருந்து கொண்டு சென்ற போதே விபத்துக்கு உள்ளாகியிருந்தது
.
No comments:
Post a Comment