Mar 13, 2013

முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படவுள்ள புதிய போப்

முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படவுள்ள புதிய போப்
 புதன்கிழமை, 13 மார்ச் 2013,
120 கோடி கத்தோலிக்க கிறுஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ம் தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார்.இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, இரண்டு நாள் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் நேற்று இரவு 11. 45 மணிக்கு அர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் போப் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிஷப் பெர்கோக்லியோ, போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்தெடுந்தார்
.
இனி அவர் போப் முதலாம் பிரான்சிஸ் என்றே அழைக்கப்படுவார். வாடிகன் அரண்மனை வளாக மாடத்திற்கு வந்த, போப் முதலாம் பிரான்சிஸ், புதிய போப்பின் வருகைக்காக ஆரவாரத்துடன் காத்திருந்த மக்களிடையே பேசினார்.
அப்போது அன்பும் சகோரத்துவமும் வளர உலகம் வழிகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொண்டார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...