Sep 12, 2013

உங்களுக்கு “இதுபோன்ற அறிகுறிகள்” காணப்பட்டால் அலட்சியம் செய்யாதீர்!


சிலருக்கு இடுப்பில் திடீரென வலி உண்டா கி பரவும். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. கால் முழுவதும் மரத்துப்போன து போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி கால் குடைச்சல் ஏற்பட்டு அவதிப்படுவார் கள். இருமினாலோ தும்மினாலோகூட இடு ப்பில் கடுமையான வலி ஏற்படும். குனிந்தா ல் நிமிர முடியாது, ஒரே இடத்தில் அதிக நே ரம் உட்கார்ந்தபின் எழும்போது சாய்ந்தபடி நடப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். அது இடுப்பில் உள்ள டிஸ்க் விலகியதன் அறிகுறியாகும்.
தோள்பட்டை வலி:
பொதுவாக வயதானவர்கள் சிலர் கையை பக்கவாட்டில் தூக்க முடியாமல் சிரமப் படு வர். 70% பேர் தோள் பட்டை யிலுள்ள சவ்வு பாதிப்பினா ல் தோள்பட்டையில் வலி, பிடிப்பு என அவதிப்படு வர். தோள்வலி முதலில் கையி ன் முன்புறத்தில் குத்தல் போ ல தொடங்கும். இரவில் தூக்கத்தின் இடையில் கையை அசைத்தால் திடீரென பொறுக்க முடியாத வலி ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகளை தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறிவிட்டால் பின்பு தோள் பட்டை மூட்டு முற்றிலும் தேய்ந்து கையை மேலே தூக்கவோ, பக்கவாட்டில் தூக்கவோ, பின்புறம் மடக்கவோ முடியாத நிலை ஏற்படும்
.
மூட்டு தேய்மானம்:
மூட்டிலுள்ள கார்ட்டிலேஜ் என்ற ஜவ்வு பலகீனமாகி பின் நாட்கள் செல்லச் செல்ல மூட்டு தேய்மா னமடைய தொடங்கு கிறது. தொ டக்கத்தில் மூட்டின் முன்புறத்தில் குத்தல் போல் வலி ஏற்படும். பின்னர் வலி சிறிது தூரம் நடக்க தொடங்கிய உடனே சரியாகிவிடும். இது போல வே அதிக நேரம் ஓர் இடத்தி ல் உட் கார்ந்து விட்டு பின் எழுந்தவு டன் சிறிது வலி ஏற்பட்டு பின் நடக்க நட க்க வலி மறைந்து விடும். வலி ஏற் பட்டால் உடனே மருத்துவரை கலந் தாலோசிப்பது நல்லது.
ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ்:
இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள், மணிக்கட்டு, முழங் கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கை யைவிட்டு எழும்போது கைவிரல் களை மடக்க முடியாமல் மணிக் கட்டில் கடுமை யான வலி, உணவு அருந்தும் போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள் பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழங்கால் மூட்டு வீக்கம் என திடீ ரென தோன்றும் அறிகுறி களை அலட்சியம் செய்யாதீ ர்கள். இது மூட்டு வாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இத னைக் கண்டறிய சில ரத்த பரி சோதனைகள் உள்ளன.
ரத்தத்தில் Ra Factor, Uric Acid, Asotire, ESR, Creactive Protein போன்ற பரிசோத னைகள் மூலம் இந்நோயை கண்ட றிய முடியும். இலைக் கிழி , மஞ்சள் கிழி, நாரங்காகிழி (எலுமிச்சை பழத் தை துணியில் போட்டு கட்டி எண்ணெ யில் ஊற வைத்து தேய் ப்பது) சிகிச்சை அளிக்கலாம். மூட்டு வலிக்கு மூட்டை சுற்றி மூலிகை எண் ணெய் ஊற வைக்க க்கூடிய கடி வஸ்தி எனும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகி றது. பஞ்சகர்ம, பிஜூ போன்ற ஆயுர் வேத சிகிச்சை மூலமும் நோயை குண ப்படுத்தலாம். உத்வர்த்தனம் சிகிச்சை முறையில் உடல் பருமனை குறைக்க முடியும். இந்த சிகிச்சையால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். வயிற்றை சுற்றி உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...