Feb 4, 2013

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!

News Service
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரிந்தது. சுமார் 50 மீட்டர் அகலம் கொண்ட அந்த ராட்சத விண்கல்லுக்கு 2012 டி14 என பெயரிட்டுள்ளனர். அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தூரம் பூமிக்கும் ராட்சத விண்கல்லுக்கும் இடையே மிக குறைவானது என கணிக்கப்பட்டுள்ளது.
  
இந்த விண்கல் நிச்சயம் பூமியை தாக்காது. வருகிற 15-ந்தேதி அது பூமியை கடந்து செல்கிறது. இந்த தகவலை நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு ராட்சத விண்கல் கடந்த 1908-ம் ஆண்டு பூமியை தாக்கியது. அப்போது அது ரஷியாவின் சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந்தது. இதனால் பல நூறு சதுர கி.மீட்டர் தூரத்துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...