Aug 20, 2014

வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் குணம் சிங்கி இறால்களுக்கு உண்டு

வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் குணம் சிங்கி இறால்களுக்கு உண்டு என்பதால், சர்வதேச அளவில் இதன் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இறால்களில் உயர்தர ரகத்தை சேர்ந்தவை சிங்கி இறால்கள். தோற்றத்திலும், விலையிலும் இவை பெரியதாகும். "பாலினுரிடே' குடும்பத்தை சேர்ந்த இவை பாறை வகை, ஆழ்கடல், மணல் சிங்கி என மூன்று வகைப்படுகிறது.
பாறை வகை சிங்கியில், பேனுலிரஸ் கொமரைஸ், பாலிபெஜஸ், ஆர்னேடஸ், வெர்சிகோலா, பெனிசிலேடஸ், லான்ஜிபஸ் இறால்கள் உள்ளன. ஆழ்கடல் சிங்கியில்,
பியூரலஸ் செவெல்லி, லினுபேரஸ், சொம்யோசன் இறால்கள் உள்ளன. மணல் சிங்கியில் தெனஸ் ஓரியன் டாலிஸ், பே.பாலிபேஜஸ், கோமரஸ், ஆரனேடஸ் இறால்கள் காணப்படும். சிங்கி இறாலை பொறுத்தவரை செயற்கை முறையிலும் வளரும் தன்மை கொண்டது. உடன் இருப்பவை தாக்காமல், தானும் விரைவில் வளரும் குணம் இதற்கு உண்டு.
ஜப்பான், நியூசிலாந்து நாடுகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் இவ்வகை சிங்கி இறால் வளர்ப்பு, குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ளன. மீன் கழிவுகள், சிறிய நண்டுகள், சிப்பிகள் ஆகியவற்றை உணவாக எடுத்து கொள்கிறது. கைட்டின் மற்றும் கைட்டோசன் போன்ற வேதிப்பொருட்களை இவை உற்பத்தி செய்கின்றன என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு வளரும் நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. உச்சத்தில் இருக்கும் இவற்றின் விலைக்கும் இதுவே காரணம். மன்னார் வளைகுடாவில் மீனவர்களின் வலைகளில், எப்போதாவது பிடிபடும் போது தான், இவற்றை காண முடிகிறது. அந்த அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவற்றின் கிராக்கியே இதன் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளதென்பதையும் மறுப்பதற்கில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...